செவ்வாய், 30 ஜூலை, 2019

சிந்தனை 7 3 4

கொட்டும்            அருவியில்    ---நாம்
குளித்து        மகிழ்கையில்
பட்டு மேனி     சிலிர்க்குதே    ---சகியே
மனம்      பரவசமாகுதே

சில்லென்ற        நீரோட    --நம்
செம்பவள     வாய்   மூடும்
நில்லென்று     சொன்னாலும்   --அது
நிற்காது       நீரோடும்

கண்ணாளன்       வருகைக்கு   ---கரையில்
காத்து   நிற்கும்    பறவைகள்
முன்னாலும்    பின்னாலும்     ஓடும் ---அதன்
விழிகளில்     பாசம்      வழிந்தோடும்

இரவென்றும்      பகலென்றும்   ---தினம்
எதுவென்று       புரியாமல்
அருவி  மகள்     போடுகிறாள்      ஆட்டம்   ---அதனை
ஆர்ப்பரித்து     பார்க்குது    பார்    கூட்டம்

இயற்கை      நமக்களித்த    எண்ணற்ற     செல்வங்கள் ---அதனை
முறையாக  மக்கள்    பயன்  படுத்த      வேண்டாமா
செயற்கையை     நாடிச்    சீரழிந்து     போனவர்கள் --இனி
சிந்தனையை      மாற்றி     சீர்பெற  இன்றே   வருவாரோ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக