கொட்டும் அருவியில் ---நாம்
குளித்து மகிழ்கையில்
பட்டு மேனி சிலிர்க்குதே ---சகியே
மனம் பரவசமாகுதே
சில்லென்ற நீரோட --நம்
செம்பவள வாய் மூடும்
நில்லென்று சொன்னாலும் --அது
நிற்காது நீரோடும்
கண்ணாளன் வருகைக்கு ---கரையில்
காத்து நிற்கும் பறவைகள்
முன்னாலும் பின்னாலும் ஓடும் ---அதன்
விழிகளில் பாசம் வழிந்தோடும்
இரவென்றும் பகலென்றும் ---தினம்
எதுவென்று புரியாமல்
அருவி மகள் போடுகிறாள் ஆட்டம் ---அதனை
ஆர்ப்பரித்து பார்க்குது பார் கூட்டம்
இயற்கை நமக்களித்த எண்ணற்ற செல்வங்கள் ---அதனை
முறையாக மக்கள் பயன் படுத்த வேண்டாமா
செயற்கையை நாடிச் சீரழிந்து போனவர்கள் --இனி
சிந்தனையை மாற்றி சீர்பெற இன்றே வருவாரோ
குளித்து மகிழ்கையில்
பட்டு மேனி சிலிர்க்குதே ---சகியே
மனம் பரவசமாகுதே
சில்லென்ற நீரோட --நம்
செம்பவள வாய் மூடும்
நில்லென்று சொன்னாலும் --அது
நிற்காது நீரோடும்
கண்ணாளன் வருகைக்கு ---கரையில்
காத்து நிற்கும் பறவைகள்
முன்னாலும் பின்னாலும் ஓடும் ---அதன்
விழிகளில் பாசம் வழிந்தோடும்
இரவென்றும் பகலென்றும் ---தினம்
எதுவென்று புரியாமல்
அருவி மகள் போடுகிறாள் ஆட்டம் ---அதனை
ஆர்ப்பரித்து பார்க்குது பார் கூட்டம்
இயற்கை நமக்களித்த எண்ணற்ற செல்வங்கள் ---அதனை
முறையாக மக்கள் பயன் படுத்த வேண்டாமா
செயற்கையை நாடிச் சீரழிந்து போனவர்கள் --இனி
சிந்தனையை மாற்றி சீர்பெற இன்றே வருவாரோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக