கனவில் வந்தவன் ---என்னை
கலவு செய்தவன்
நினைவு வந்ததும் ---எனோ
நில்லாது ஓடினான்
அள்ளி யெடுத்தவன் ---அன்று
ஆழ்ந்து ருசித்தவன்
தள்ளிப் போனதேன் ---என்னை
தவிக்க விட்டதேன்
புள்ளி மானெனப் புகழ்ந்து சொன்னவன் ---தன்
சொல்லை மறந்துமே தூரம் போனதேன்
துள்ளித் திரிந்தவள் துவண்டு போகிறேன் ---பலர்
எள்ளி சிரித்திட இன்னும் வாழ்கிறேன்
கால காலங்கள் என்காதல் வாழுமோ ---அந்த
கள்ளன் மனதிலும் கருணை பிறக்குமோ
வேளை வந்திடில் நல்ல விடிவைக் காணலாம் ---என்னை
வீழ்த்தி சென்றவன் தானே விரும்பிச் சேரலாம்
பெண்ணாய்ப் பிறந்தால் பிழைகள் இல்லையே ---எனது
காதல் இப்படி எனோ கவலை ஆனது
முன்னே போனவன் மோகம் கொள்ளுவான் ---இந்த
முல்லைக் கொடியினில் வந்து படர்ந்து கொள்ளுவான்
கலவு செய்தவன்
நினைவு வந்ததும் ---எனோ
நில்லாது ஓடினான்
அள்ளி யெடுத்தவன் ---அன்று
ஆழ்ந்து ருசித்தவன்
தள்ளிப் போனதேன் ---என்னை
தவிக்க விட்டதேன்
புள்ளி மானெனப் புகழ்ந்து சொன்னவன் ---தன்
சொல்லை மறந்துமே தூரம் போனதேன்
துள்ளித் திரிந்தவள் துவண்டு போகிறேன் ---பலர்
எள்ளி சிரித்திட இன்னும் வாழ்கிறேன்
கால காலங்கள் என்காதல் வாழுமோ ---அந்த
கள்ளன் மனதிலும் கருணை பிறக்குமோ
வேளை வந்திடில் நல்ல விடிவைக் காணலாம் ---என்னை
வீழ்த்தி சென்றவன் தானே விரும்பிச் சேரலாம்
பெண்ணாய்ப் பிறந்தால் பிழைகள் இல்லையே ---எனது
காதல் இப்படி எனோ கவலை ஆனது
முன்னே போனவன் மோகம் கொள்ளுவான் ---இந்த
முல்லைக் கொடியினில் வந்து படர்ந்து கொள்ளுவான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக