ஞாயிறு, 21 ஜூலை, 2019

முல்லை க் கொடி 7 1 7

கனவில்       வந்தவன்     ---என்னை
கலவு        செய்தவன்
நினைவு     வந்ததும்     ---எனோ
நில்லாது      ஓடினான்

அள்ளி       யெடுத்தவன்     ---அன்று
ஆழ்ந்து      ருசித்தவன்
தள்ளிப்     போனதேன்     ---என்னை
தவிக்க         விட்டதேன்

புள்ளி     மானெனப்     புகழ்ந்து     சொன்னவன்    ---தன்
 சொல்லை     மறந்துமே    தூரம்     போனதேன்
துள்ளித்     திரிந்தவள்    துவண்டு    போகிறேன்   ---பலர்
எள்ளி         சிரித்திட      இன்னும்     வாழ்கிறேன்

கால      காலங்கள்      என்காதல்     வாழுமோ    ---அந்த
கள்ளன்       மனதிலும்     கருணை     பிறக்குமோ
வேளை      வந்திடில்     நல்ல  விடிவைக்    காணலாம்    ---என்னை
வீழ்த்தி      சென்றவன்    தானே     விரும்பிச்   சேரலாம்

பெண்ணாய்ப்      பிறந்தால்      பிழைகள்      இல்லையே    ---எனது
காதல்      இப்படி      எனோ     கவலை       ஆனது 
முன்னே      போனவன்    மோகம்     கொள்ளுவான்    ---இந்த
முல்லைக்      கொடியினில்   வந்து     படர்ந்து    கொள்ளுவான் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக