ஞாயிறு, 28 ஜூலை, 2019

ஒருவர் 7 2 8

கண்ணே         உன்னைத்         தொடலாமா   ---நாம
காதல்       பட்டம்       விடலாமா
பெண்ணே       நெருங்கி     வரலாமா    ---நீ
பிரியத்தை       அள்ளியே    தரலாமா

அன்பால்       உன்னிடம்      ஆசை  கொன்டேன்    ---நான்
அனுதினம்     உன்னையே      பூசை    செய்வேன்
கண்ணில்     மணியாய்க்     காத்திடுவேன்    ---உன்னை
காலம்      முழுதும்      பார்த்திருப்பேன்

உறவு      என்பது       தொடர்கதையே    ---நாம்
உணர்ந்து     நடக்கணும்     இதன்     வழியே
பிரிவு       என்பது      கிடையாது    ---புதிய
பிணக்குகள்     இல்லை     யெனும்போது

நாட்கள்       நகர்ந்து      போனாலும்   --நாம்
நலமுடன்     என்றுமே     வாழ்வோமே
வேட்கை       என்பதும்      குறையாது    ---நம்மிடம்
வேதனை      என்பதோ      அணுகாது

இரவும்       பகலும்       சரிசமமே     ---நமக்குள்
என்றும்       இல்லை      அவசரமே
இருவர்       ஒருவர்      என்றானோம்    ---அதனை
இதயத்தில்      நினைத்திட    நன்றானோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக