கண்ணே உன்னைத் தொடலாமா ---நாம
காதல் பட்டம் விடலாமா
பெண்ணே நெருங்கி வரலாமா ---நீ
பிரியத்தை அள்ளியே தரலாமா
அன்பால் உன்னிடம் ஆசை கொன்டேன் ---நான்
அனுதினம் உன்னையே பூசை செய்வேன்
கண்ணில் மணியாய்க் காத்திடுவேன் ---உன்னை
காலம் முழுதும் பார்த்திருப்பேன்
உறவு என்பது தொடர்கதையே ---நாம்
உணர்ந்து நடக்கணும் இதன் வழியே
பிரிவு என்பது கிடையாது ---புதிய
பிணக்குகள் இல்லை யெனும்போது
நாட்கள் நகர்ந்து போனாலும் --நாம்
நலமுடன் என்றுமே வாழ்வோமே
வேட்கை என்பதும் குறையாது ---நம்மிடம்
வேதனை என்பதோ அணுகாது
இரவும் பகலும் சரிசமமே ---நமக்குள்
என்றும் இல்லை அவசரமே
இருவர் ஒருவர் என்றானோம் ---அதனை
இதயத்தில் நினைத்திட நன்றானோம்
காதல் பட்டம் விடலாமா
பெண்ணே நெருங்கி வரலாமா ---நீ
பிரியத்தை அள்ளியே தரலாமா
அன்பால் உன்னிடம் ஆசை கொன்டேன் ---நான்
அனுதினம் உன்னையே பூசை செய்வேன்
கண்ணில் மணியாய்க் காத்திடுவேன் ---உன்னை
காலம் முழுதும் பார்த்திருப்பேன்
உறவு என்பது தொடர்கதையே ---நாம்
உணர்ந்து நடக்கணும் இதன் வழியே
பிரிவு என்பது கிடையாது ---புதிய
பிணக்குகள் இல்லை யெனும்போது
நாட்கள் நகர்ந்து போனாலும் --நாம்
நலமுடன் என்றுமே வாழ்வோமே
வேட்கை என்பதும் குறையாது ---நம்மிடம்
வேதனை என்பதோ அணுகாது
இரவும் பகலும் சரிசமமே ---நமக்குள்
என்றும் இல்லை அவசரமே
இருவர் ஒருவர் என்றானோம் ---அதனை
இதயத்தில் நினைத்திட நன்றானோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக