செவ்வாய், 23 ஜூலை, 2019

கேள்விகள் ? 7 2 3

கண்களில்    பேரொளியோ     ----அவள்
கலைகளில்     சிறந்தவளோ
பெண்களில்     பேரழகோ    ---என்றும்
பேசிடாப்      பொற்சிலையோ
இடையென்பது   இல்லாததோ  -அதுவும்
இயற்கை    தந்த     சீதனமோ
நடை யென்பது    நாட்டியமோ   ---அவள்
நாணயம்      மிக்கவளோ
அம்புகள்    எய்வாளோ    ---எதிர்க்கும்
ஆண்களைக்      கொல்வாளோ
நம்பிடுவர்க்கு       நல்லவளோ   ---இல்லை
நரியினைப்      போன்றவளோ
பங்கஜ      முகத்தாளோ    ---அவள்
பத்தினிக்    குணத்தாளோ
தங்கத்தின்    நிறத்தாளோ   ---என்னிடம்
தயவாய்        இருப்பாளோ
மஞ்சத்தில்    சிறப்பாளோ   ---இல்லை
மனதால்     வெறுப்பாளோ
கொஞ்சிடும்    குணத்தாளோ   --அவள்
கொடிய      மனத்தாளோ
நெஞ்சினில்     இருப்பாளோ   ---என்னை
நினைவினில்    வைப்பாளோ
கெஞ்சலை      ரசிப்பாளோ   ---பல்வேறு
கேள்விகள்      கேட்பாளோ






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக