கண்களில் பேரொளியோ ----அவள்
கலைகளில் சிறந்தவளோ
பெண்களில் பேரழகோ ---என்றும்
பேசிடாப் பொற்சிலையோ
இடையென்பது இல்லாததோ -அதுவும்
இயற்கை தந்த சீதனமோ
நடை யென்பது நாட்டியமோ ---அவள்
நாணயம் மிக்கவளோ
அம்புகள் எய்வாளோ ---எதிர்க்கும்
ஆண்களைக் கொல்வாளோ
நம்பிடுவர்க்கு நல்லவளோ ---இல்லை
நரியினைப் போன்றவளோ
பங்கஜ முகத்தாளோ ---அவள்
பத்தினிக் குணத்தாளோ
தங்கத்தின் நிறத்தாளோ ---என்னிடம்
தயவாய் இருப்பாளோ
மஞ்சத்தில் சிறப்பாளோ ---இல்லை
மனதால் வெறுப்பாளோ
கொஞ்சிடும் குணத்தாளோ --அவள்
கொடிய மனத்தாளோ
நெஞ்சினில் இருப்பாளோ ---என்னை
நினைவினில் வைப்பாளோ
கெஞ்சலை ரசிப்பாளோ ---பல்வேறு
கேள்விகள் கேட்பாளோ
கலைகளில் சிறந்தவளோ
பெண்களில் பேரழகோ ---என்றும்
பேசிடாப் பொற்சிலையோ
இடையென்பது இல்லாததோ -அதுவும்
இயற்கை தந்த சீதனமோ
நடை யென்பது நாட்டியமோ ---அவள்
நாணயம் மிக்கவளோ
அம்புகள் எய்வாளோ ---எதிர்க்கும்
ஆண்களைக் கொல்வாளோ
நம்பிடுவர்க்கு நல்லவளோ ---இல்லை
நரியினைப் போன்றவளோ
பங்கஜ முகத்தாளோ ---அவள்
பத்தினிக் குணத்தாளோ
தங்கத்தின் நிறத்தாளோ ---என்னிடம்
தயவாய் இருப்பாளோ
மஞ்சத்தில் சிறப்பாளோ ---இல்லை
மனதால் வெறுப்பாளோ
கொஞ்சிடும் குணத்தாளோ --அவள்
கொடிய மனத்தாளோ
நெஞ்சினில் இருப்பாளோ ---என்னை
நினைவினில் வைப்பாளோ
கெஞ்சலை ரசிப்பாளோ ---பல்வேறு
கேள்விகள் கேட்பாளோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக