வஞ்சிரத்த வறுத்து வச்சேன் ---நல்ல
வாளை மீனைக் கொளம்பு வச்சேன்
பஞ்சணைக்கு பாயைப் போட்டேன் ---ரெண்டு
பால் சொம்பு நிறைச்சு வச்சேன்
பொழுது விடிஞ்சு போன மச்சான் வல்லியே ---எம்
புருஷன் கூட இது எனக்கு தொல்லையே
அழுத கண்கள் சிரிக்க வேணும் ---அவர்
ஆசையுடன் என்னைக் கொஞ்ச வேணும்
நிலவு வந்து ரொம்ப நேரமாச்சு ---அந்த
நெனப்பும் எனக்கும் கூடிப் போச்சு
பொழப்புகளை பாக்க வேணும் மச்சானே ---நெனைச்சு
புலம்ப என்னையும் வச்சுட்டியே அத்தானே
சக்களத்தி எவளும் வளச்சிப் புட்டாளா ---உன்னிடம்
சரசலீலைக எதுவும் ஆடிப் புட்டாளா
அக்கிரமா தோணலியா என் அத்தானே ---எங்க
அப்பன் வூட்டுக்கு போயிடுவேன் தன்னாலே
வந்ததும் மாமன் சொன்ன சேதி ---எங்க
வயலைப் பாக்கப் போன நீதி
என்ற கோபம் இறங்கிப் போச்சு ---இனி
இரவு முழுக்க இனிமை ஆச்சு
வாளை மீனைக் கொளம்பு வச்சேன்
பஞ்சணைக்கு பாயைப் போட்டேன் ---ரெண்டு
பால் சொம்பு நிறைச்சு வச்சேன்
பொழுது விடிஞ்சு போன மச்சான் வல்லியே ---எம்
புருஷன் கூட இது எனக்கு தொல்லையே
அழுத கண்கள் சிரிக்க வேணும் ---அவர்
ஆசையுடன் என்னைக் கொஞ்ச வேணும்
நிலவு வந்து ரொம்ப நேரமாச்சு ---அந்த
நெனப்பும் எனக்கும் கூடிப் போச்சு
பொழப்புகளை பாக்க வேணும் மச்சானே ---நெனைச்சு
புலம்ப என்னையும் வச்சுட்டியே அத்தானே
சக்களத்தி எவளும் வளச்சிப் புட்டாளா ---உன்னிடம்
சரசலீலைக எதுவும் ஆடிப் புட்டாளா
அக்கிரமா தோணலியா என் அத்தானே ---எங்க
அப்பன் வூட்டுக்கு போயிடுவேன் தன்னாலே
வந்ததும் மாமன் சொன்ன சேதி ---எங்க
வயலைப் பாக்கப் போன நீதி
என்ற கோபம் இறங்கிப் போச்சு ---இனி
இரவு முழுக்க இனிமை ஆச்சு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக