திங்கள், 15 ஜூலை, 2019

இரவு 7 0 4

வஞ்சிரத்த       வறுத்து     வச்சேன்    ---நல்ல
வாளை      மீனைக்    கொளம்பு    வச்சேன்
பஞ்சணைக்கு     பாயைப்    போட்டேன்   ---ரெண்டு
பால்  சொம்பு     நிறைச்சு    வச்சேன்

பொழுது    விடிஞ்சு    போன   மச்சான்    வல்லியே   ---எம்
புருஷன்     கூட     இது     எனக்கு    தொல்லையே
அழுத    கண்கள்    சிரிக்க     வேணும்    ---அவர்
ஆசையுடன்     என்னைக்    கொஞ்ச   வேணும்

நிலவு     வந்து     ரொம்ப     நேரமாச்சு   ---அந்த
நெனப்பும்     எனக்கும்     கூடிப்   போச்சு
பொழப்புகளை    பாக்க    வேணும்    மச்சானே   ---நெனைச்சு
புலம்ப     என்னையும்     வச்சுட்டியே   அத்தானே

சக்களத்தி    எவளும்    வளச்சிப்   புட்டாளா   ---உன்னிடம்
சரசலீலைக      எதுவும்    ஆடிப்  புட்டாளா
அக்கிரமா     தோணலியா    என்     அத்தானே   ---எங்க
அப்பன்     வூட்டுக்கு     போயிடுவேன்    தன்னாலே

வந்ததும்      மாமன்    சொன்ன     சேதி    ---எங்க
வயலைப்     பாக்கப்    போன     நீதி
என்ற      கோபம்   இறங்கிப்     போச்சு   ---இனி
இரவு      முழுக்க    இனிமை   ஆச்சு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக