வெள்ளி, 5 ஜூலை, 2019

தெய்வ நாயகி 672

தமிழை      பாடிட     வந்தேன்    ---அவள்
தாளினில்    தலையினை     வைப்பேன்
அமிழ்தம்    போல      இளையவள்    ---நல்ல
ஆயிரம்      கலைகள்    உடையவள்

ஏட்டினில்    எழுதிடாக்     கவிதை   ---அவள்
இருக்கும்     இடங்கள்     இனிமை
பாட்டின்    தலைப்பும்    அவளே    ---அவளை
பாடினால்    வருவது    புகழே

செழித்து     வாழ்ந்திட     வைப்பாள்    --செல்வ
சிறப்பில்    மிதந்திட    செய்வாள்
வளைத்த     புருவம்     கொண்டவள்    ---பலர்
வாழ்வில்     உயர்வினை    தருபவள்

காலை     மாலையும்    தொழுவேன்    ---அவள்
கருணையை    எண்ணி   அழுவேன்
நாளை     எண்ணியே    நடப்பேன்    ---அவளிடம்
நன்றி யை   சொல்லி    கிடப்பேன்

எல்லாம்    எனக்கு     அவளே   ---என்
இயக்கம்    அவளின்    அருளே
நல்லோர்   அன்பினைப்    பெறுவேன்  ---தெய்வ
நாயகி      தாயினை    மறவேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக