தமிழை பாடிட வந்தேன் ---அவள்
தாளினில் தலையினை வைப்பேன்
அமிழ்தம் போல இளையவள் ---நல்ல
ஆயிரம் கலைகள் உடையவள்
ஏட்டினில் எழுதிடாக் கவிதை ---அவள்
இருக்கும் இடங்கள் இனிமை
பாட்டின் தலைப்பும் அவளே ---அவளை
பாடினால் வருவது புகழே
செழித்து வாழ்ந்திட வைப்பாள் --செல்வ
சிறப்பில் மிதந்திட செய்வாள்
வளைத்த புருவம் கொண்டவள் ---பலர்
வாழ்வில் உயர்வினை தருபவள்
காலை மாலையும் தொழுவேன் ---அவள்
கருணையை எண்ணி அழுவேன்
நாளை எண்ணியே நடப்பேன் ---அவளிடம்
நன்றி யை சொல்லி கிடப்பேன்
எல்லாம் எனக்கு அவளே ---என்
இயக்கம் அவளின் அருளே
நல்லோர் அன்பினைப் பெறுவேன் ---தெய்வ
நாயகி தாயினை மறவேன்
தாளினில் தலையினை வைப்பேன்
அமிழ்தம் போல இளையவள் ---நல்ல
ஆயிரம் கலைகள் உடையவள்
ஏட்டினில் எழுதிடாக் கவிதை ---அவள்
இருக்கும் இடங்கள் இனிமை
பாட்டின் தலைப்பும் அவளே ---அவளை
பாடினால் வருவது புகழே
செழித்து வாழ்ந்திட வைப்பாள் --செல்வ
சிறப்பில் மிதந்திட செய்வாள்
வளைத்த புருவம் கொண்டவள் ---பலர்
வாழ்வில் உயர்வினை தருபவள்
காலை மாலையும் தொழுவேன் ---அவள்
கருணையை எண்ணி அழுவேன்
நாளை எண்ணியே நடப்பேன் ---அவளிடம்
நன்றி யை சொல்லி கிடப்பேன்
எல்லாம் எனக்கு அவளே ---என்
இயக்கம் அவளின் அருளே
நல்லோர் அன்பினைப் பெறுவேன் ---தெய்வ
நாயகி தாயினை மறவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக