கண்ணில் ஆடும் மின்னல் நீயே ---உன்னை
காதலிக்க வந்தேன் மானே
இன்னுமென்ன தயக்கம் பெண்ணே ---நாம்
இருவரும் வாழ்ந்திட இசைவாய் கண்ணே
பொன்னோடு பூவை வைப்பேன் ---உன்னை
புதையலைப் போல பாதுகாப்பேன்
என்னுடலில் உயிரும் ஆவாய் ---உனை
என்தலையில் சுமப்பேன் பாவாய்
சொத்து சுகம் அனைத்தும் உண்டு ---நல்ல
சொந்த பந்தம் யாவும் கொண்டு
உத்தமியே உன்னை மணக்க வரலாமா ---என்
உறவுக்கு மதிப்பு நீயும் தரலாமா
நிலவில் நாமும் சென்று வரலாம் ---நீ
நினைத்த வகையில் சுகமும் பெறலாம்
பழகப் பழ க நானும் பழமாய் இனிப்பேன் ---உன்
பருவப் பசிக்கு விருந்தாய் அமைவேன்
ஆவணியில் திருமணம் அழகாய் உண்டு --நீ
அணிமணிகள் அணிவதால் அழகும் உண்டு
தாவணியில் தளிரான தையல் நீயே ---என்னை
தழுவிக் கொள்ள சம்மதமா சொல்வாய் பெண்ணே
காதலிக்க வந்தேன் மானே
இன்னுமென்ன தயக்கம் பெண்ணே ---நாம்
இருவரும் வாழ்ந்திட இசைவாய் கண்ணே
பொன்னோடு பூவை வைப்பேன் ---உன்னை
புதையலைப் போல பாதுகாப்பேன்
என்னுடலில் உயிரும் ஆவாய் ---உனை
என்தலையில் சுமப்பேன் பாவாய்
சொத்து சுகம் அனைத்தும் உண்டு ---நல்ல
சொந்த பந்தம் யாவும் கொண்டு
உத்தமியே உன்னை மணக்க வரலாமா ---என்
உறவுக்கு மதிப்பு நீயும் தரலாமா
நிலவில் நாமும் சென்று வரலாம் ---நீ
நினைத்த வகையில் சுகமும் பெறலாம்
பழகப் பழ க நானும் பழமாய் இனிப்பேன் ---உன்
பருவப் பசிக்கு விருந்தாய் அமைவேன்
ஆவணியில் திருமணம் அழகாய் உண்டு --நீ
அணிமணிகள் அணிவதால் அழகும் உண்டு
தாவணியில் தளிரான தையல் நீயே ---என்னை
தழுவிக் கொள்ள சம்மதமா சொல்வாய் பெண்ணே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக