ஞாயிறு, 14 ஜூலை, 2019

கடவுள் 6 9 7

கலை     கொஞ்சும்     நிலவில்    ---கடும்
பனி      மிஞ்சும்      இரவில் 
விளையாட     வந்த     அழகே   ---நீ
விழி     மூடித்    தூங்குதல்    சரியா

நினைவெல்லாம்     நீயே   ---எந்தன்
நெஞ்சத்தில்     சுமையே
கனவென்று    சொல்வாயா   கண்ணே  ---என்
கண்ணீரும்    விடையாகும்    பெண்ணே

எந்நாளும்     நினைப்பேன்   ---என்
இமை    மூடி    உறங்கேன்
கண்ணே   உன்னை  என்று   காண்பேன்   --என்
கால்    போன    வழி தனிலே    நடப்பேன்

ஒன்றாக      வாழ்ந்தோம்    ---ஒரு
உயிர்க்    கூட்டில்    மிதந்தோம்
நன்றியினை    மறப்பது   சரியா   ---இளம்
நங்கையே   உனக்கிது   முறையா
வயதான      பொழுதும்   ---என்
வல்லமை    நிறையும்
புயலாக    வருவேனே    கண்ணே   --உன்னை
பூபோலக்     கொய்வேனே    பெண்ணே
உடலோடு    உயிர்போல    ஒன்றாகி    நின்றோம்   -நம்
உறவால்    உணர்வுகள்    உச்சத்தை     எட்டும்
கடலோடு    அலைபோல    கலந்தே    கிடப்போம்   ---உலகில்
காதலைச்    சொல்லி      கடவுளை    நினைப்போம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக