கலை கொஞ்சும் நிலவில் ---கடும்
பனி மிஞ்சும் இரவில்
விளையாட வந்த அழகே ---நீ
விழி மூடித் தூங்குதல் சரியா
நினைவெல்லாம் நீயே ---எந்தன்
நெஞ்சத்தில் சுமையே
கனவென்று சொல்வாயா கண்ணே ---என்
கண்ணீரும் விடையாகும் பெண்ணே
எந்நாளும் நினைப்பேன் ---என்
இமை மூடி உறங்கேன்
கண்ணே உன்னை என்று காண்பேன் --என்
கால் போன வழி தனிலே நடப்பேன்
ஒன்றாக வாழ்ந்தோம் ---ஒரு
உயிர்க் கூட்டில் மிதந்தோம்
நன்றியினை மறப்பது சரியா ---இளம்
நங்கையே உனக்கிது முறையா
வயதான பொழுதும் ---என்
வல்லமை நிறையும்
புயலாக வருவேனே கண்ணே --உன்னை
பூபோலக் கொய்வேனே பெண்ணே
உடலோடு உயிர்போல ஒன்றாகி நின்றோம் -நம்
உறவால் உணர்வுகள் உச்சத்தை எட்டும்
கடலோடு அலைபோல கலந்தே கிடப்போம் ---உலகில்
காதலைச் சொல்லி கடவுளை நினைப்போம்
பனி மிஞ்சும் இரவில்
விளையாட வந்த அழகே ---நீ
விழி மூடித் தூங்குதல் சரியா
நினைவெல்லாம் நீயே ---எந்தன்
நெஞ்சத்தில் சுமையே
கனவென்று சொல்வாயா கண்ணே ---என்
கண்ணீரும் விடையாகும் பெண்ணே
எந்நாளும் நினைப்பேன் ---என்
இமை மூடி உறங்கேன்
கண்ணே உன்னை என்று காண்பேன் --என்
கால் போன வழி தனிலே நடப்பேன்
ஒன்றாக வாழ்ந்தோம் ---ஒரு
உயிர்க் கூட்டில் மிதந்தோம்
நன்றியினை மறப்பது சரியா ---இளம்
நங்கையே உனக்கிது முறையா
வயதான பொழுதும் ---என்
வல்லமை நிறையும்
புயலாக வருவேனே கண்ணே --உன்னை
பூபோலக் கொய்வேனே பெண்ணே
உடலோடு உயிர்போல ஒன்றாகி நின்றோம் -நம்
உறவால் உணர்வுகள் உச்சத்தை எட்டும்
கடலோடு அலைபோல கலந்தே கிடப்போம் ---உலகில்
காதலைச் சொல்லி கடவுளை நினைப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக