வியாழன், 11 ஜூலை, 2019

பெருமை 690

கண்ணாட்டி     ஏனடி     ---தினம்
கண்ணீரில்     ஆழ்த்தினை
உன்மேல்      ஆசையால்     ---நானும்
உலகினில்     அலைவதோ

கூரான    உந்தன்     பார்வையோ  --என்னையும்
கொல்லாமல்      கொல்லுதே
வேறேதும்      புரியல    ---நான்
வெல்வேனோ     தெரியலை

தேரோடும்       தெருவிலே     ----தினம்
தேவியாய்த்     தெரிந்தவள்
யாரோடு      நான்   சொல்வது    ---இந்த
நியாயங்கள்   அறியலை

துள்ளிநீ        ஆடுவாய்     ---நான்
தூர நின்று      பார்ப்பேனே
தள்ளாடும்       நிலைதனை    ---எனோ
என் தங்கமே     கொடுத்தனை

உன்னோடு        வாழணும்    ---நானும்
உழைப்பால்     சிறக்கணும்
பெண்டாட்டி     தன்னுடன்    ---இங்கு
பிரியமாய்      வாழுவேன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக