கண்ணாட்டி ஏனடி ---தினம்
கண்ணீரில் ஆழ்த்தினை
உன்மேல் ஆசையால் ---நானும்
உலகினில் அலைவதோ
கூரான உந்தன் பார்வையோ --என்னையும்
கொல்லாமல் கொல்லுதே
வேறேதும் புரியல ---நான்
வெல்வேனோ தெரியலை
தேரோடும் தெருவிலே ----தினம்
தேவியாய்த் தெரிந்தவள்
யாரோடு நான் சொல்வது ---இந்த
நியாயங்கள் அறியலை
துள்ளிநீ ஆடுவாய் ---நான்
தூர நின்று பார்ப்பேனே
தள்ளாடும் நிலைதனை ---எனோ
என் தங்கமே கொடுத்தனை
உன்னோடு வாழணும் ---நானும்
உழைப்பால் சிறக்கணும்
பெண்டாட்டி தன்னுடன் ---இங்கு
பிரியமாய் வாழுவேன்
கண்ணீரில் ஆழ்த்தினை
உன்மேல் ஆசையால் ---நானும்
உலகினில் அலைவதோ
கூரான உந்தன் பார்வையோ --என்னையும்
கொல்லாமல் கொல்லுதே
வேறேதும் புரியல ---நான்
வெல்வேனோ தெரியலை
தேரோடும் தெருவிலே ----தினம்
தேவியாய்த் தெரிந்தவள்
யாரோடு நான் சொல்வது ---இந்த
நியாயங்கள் அறியலை
துள்ளிநீ ஆடுவாய் ---நான்
தூர நின்று பார்ப்பேனே
தள்ளாடும் நிலைதனை ---எனோ
என் தங்கமே கொடுத்தனை
உன்னோடு வாழணும் ---நானும்
உழைப்பால் சிறக்கணும்
பெண்டாட்டி தன்னுடன் ---இங்கு
பிரியமாய் வாழுவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக