ஞாயிறு, 14 ஜூலை, 2019

பரிசு 6 9 8

பனி  கொட்டும்      இரவில்    ---நல்ல
பால்     போன்ற    நிலவில்
தனியாக     ஒருவள்    தளிராக   வந்தாள்   --நான்
பணிவோடு     அவள் பக்கம்   சென்றேன்

கண்களைப்   பறித்திடும்    கட்டான   உருவம்   ---அவள்
கண்பட்டால்   இங்கே    கற்களும்     கரையும்
பெண்களில்    அவளே    பேரெழில்    என்பேன்    ---அவள்
பின்னாலே     உலகம்     தன்னாலே     சுழலும்

நீளமான     கூந்தல்    நிலத்தினைக்    கூட்டும்    --அவள்
நெஞ்சத்து     அழகோ   காதல்   நினைவையே    மீட்டும்
அலைபாயும்    கண்கள்    அனைவரை     வீழ்த்தும்   ---அவள்
அசைந்தாடி    வந்தாலோ     ஆண்களையே    வாட்டும்

இடையோடு      சடையும்    எங்கேயோ     புரளும்   --அவள்
இளவாழைக்    கால்கள்      இதயத்தைப்    பிளக்கும்
தடையேதும்    இல்லா    தண்பொழில்     அருவி   ---அவளை
தழுவிட     நினைத்தார்க்கு      தாங்குமோ     ஆவி

அழகெல்லாம்      சேர்த்து      ஆண்டவன்      படைத்தான்  ---அவள்
அனுமதி     கிடைத்தால்     ஆனந்தம்      கொள்ளை
பழமாக     வந்தவள்      என்   பசி    தீர்க்க  வேண்டும்    --நான்
படும் பாடு      கண்டு     அவள்  எனக்குப்    பரிசாக    வேண்டும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக