பனி கொட்டும் இரவில் ---நல்ல
பால் போன்ற நிலவில்
தனியாக ஒருவள் தளிராக வந்தாள் --நான்
பணிவோடு அவள் பக்கம் சென்றேன்
கண்களைப் பறித்திடும் கட்டான உருவம் ---அவள்
கண்பட்டால் இங்கே கற்களும் கரையும்
பெண்களில் அவளே பேரெழில் என்பேன் ---அவள்
பின்னாலே உலகம் தன்னாலே சுழலும்
நீளமான கூந்தல் நிலத்தினைக் கூட்டும் --அவள்
நெஞ்சத்து அழகோ காதல் நினைவையே மீட்டும்
அலைபாயும் கண்கள் அனைவரை வீழ்த்தும் ---அவள்
அசைந்தாடி வந்தாலோ ஆண்களையே வாட்டும்
இடையோடு சடையும் எங்கேயோ புரளும் --அவள்
இளவாழைக் கால்கள் இதயத்தைப் பிளக்கும்
தடையேதும் இல்லா தண்பொழில் அருவி ---அவளை
தழுவிட நினைத்தார்க்கு தாங்குமோ ஆவி
அழகெல்லாம் சேர்த்து ஆண்டவன் படைத்தான் ---அவள்
அனுமதி கிடைத்தால் ஆனந்தம் கொள்ளை
பழமாக வந்தவள் என் பசி தீர்க்க வேண்டும் --நான்
படும் பாடு கண்டு அவள் எனக்குப் பரிசாக வேண்டும்
பால் போன்ற நிலவில்
தனியாக ஒருவள் தளிராக வந்தாள் --நான்
பணிவோடு அவள் பக்கம் சென்றேன்
கண்களைப் பறித்திடும் கட்டான உருவம் ---அவள்
கண்பட்டால் இங்கே கற்களும் கரையும்
பெண்களில் அவளே பேரெழில் என்பேன் ---அவள்
பின்னாலே உலகம் தன்னாலே சுழலும்
நீளமான கூந்தல் நிலத்தினைக் கூட்டும் --அவள்
நெஞ்சத்து அழகோ காதல் நினைவையே மீட்டும்
அலைபாயும் கண்கள் அனைவரை வீழ்த்தும் ---அவள்
அசைந்தாடி வந்தாலோ ஆண்களையே வாட்டும்
இடையோடு சடையும் எங்கேயோ புரளும் --அவள்
இளவாழைக் கால்கள் இதயத்தைப் பிளக்கும்
தடையேதும் இல்லா தண்பொழில் அருவி ---அவளை
தழுவிட நினைத்தார்க்கு தாங்குமோ ஆவி
அழகெல்லாம் சேர்த்து ஆண்டவன் படைத்தான் ---அவள்
அனுமதி கிடைத்தால் ஆனந்தம் கொள்ளை
பழமாக வந்தவள் என் பசி தீர்க்க வேண்டும் --நான்
படும் பாடு கண்டு அவள் எனக்குப் பரிசாக வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக