நிலவில் எங்கும் திரிகிறேன் ---அவள்
நினைவை சுமந்து அலைகிறேன்
அலைகள் அடிக்கும் மனதிலே --என்
ஆசை நிறைந்து வழியுதே
கண்ணில் இரக்கம் இல்லையே --அட
காதல் வந்தால் தொல்லையே
என்னுள் நுழைந்து வாழ்பவள் ---எனோ
என்னை தினமும் கொல்கிறாள்
தூக்கம் மறந்து போனதே --தினம்
துன்பம் அதிகம் ஆனதே
போகும் வழியும் தெரியலே ---நான்
புலம்பும் குரலும் கேட்கலே
காதல் என்ற ஒன்றினை --அந்த
கடவுள் ஏன்தான் படைத்தனன்
சாதல் ஒன்றுதான் வாழ்க்கையா --எனக்கு
சந்தோசம் என்பதே இல்லையா
உலக மக்களே கேளுங்கள் ---காதல்
உணர்வை விலக்கிச் செல்லுங்கள்
அலையும் மனதை அடக்குவீர் ---தூய
அன்பிலே உலகினை ஆளுவீர்
நினைவை சுமந்து அலைகிறேன்
அலைகள் அடிக்கும் மனதிலே --என்
ஆசை நிறைந்து வழியுதே
கண்ணில் இரக்கம் இல்லையே --அட
காதல் வந்தால் தொல்லையே
என்னுள் நுழைந்து வாழ்பவள் ---எனோ
என்னை தினமும் கொல்கிறாள்
தூக்கம் மறந்து போனதே --தினம்
துன்பம் அதிகம் ஆனதே
போகும் வழியும் தெரியலே ---நான்
புலம்பும் குரலும் கேட்கலே
காதல் என்ற ஒன்றினை --அந்த
கடவுள் ஏன்தான் படைத்தனன்
சாதல் ஒன்றுதான் வாழ்க்கையா --எனக்கு
சந்தோசம் என்பதே இல்லையா
உலக மக்களே கேளுங்கள் ---காதல்
உணர்வை விலக்கிச் செல்லுங்கள்
அலையும் மனதை அடக்குவீர் ---தூய
அன்பிலே உலகினை ஆளுவீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக