வியாழன், 4 ஜூலை, 2019

ஆசை 670

நிலவில்   எங்கும்    திரிகிறேன்     ---அவள்
நினைவை    சுமந்து  அலைகிறேன்
அலைகள்   அடிக்கும்   மனதிலே    --என்
ஆசை     நிறைந்து     வழியுதே

கண்ணில்   இரக்கம்    இல்லையே   --அட
காதல்   வந்தால்     தொல்லையே
என்னுள்   நுழைந்து    வாழ்பவள்    ---எனோ
என்னை    தினமும்     கொல்கிறாள்

தூக்கம்    மறந்து     போனதே   --தினம்
துன்பம்    அதிகம்     ஆனதே
போகும்     வழியும்    தெரியலே    ---நான்
புலம்பும்    குரலும்     கேட்கலே

காதல்    என்ற     ஒன்றினை   --அந்த
கடவுள்    ஏன்தான்    படைத்தனன்
சாதல்     ஒன்றுதான்    வாழ்க்கையா   --எனக்கு
சந்தோசம்    என்பதே    இல்லையா

உலக     மக்களே     கேளுங்கள்    ---காதல்
உணர்வை    விலக்கிச்    செல்லுங்கள்
அலையும்    மனதை     அடக்குவீர்    ---தூய
அன்பிலே      உலகினை     ஆளுவீர்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக