சனி, 20 ஜூலை, 2019

சரணம் 7 1 5

அன்பினைத்       தருவதில்         அண்ணல்    ---நம் 
அவலத்தை      தீர்ப்பதில்      மன்னன் 
துன்பத்தை     தோளினில்    சுமப்பான்     ----வழியில் 
தோன்றாத       துணையாக     வருவான் 

எங்கும்        நிறைந்துமே       இருப்பான்    ----உழைக்கும் 
ஏழை கள்     மனங்களில்      வசிப்பான் 
தங்கத்தைப்    போன்றிட்ட    புனிதன்    ---பொருளை 
தந்துமே       மகிழ்வதில்      வள்ளல்  

கருணையை     மழையெனப்     பொழிவான்   ---ஏழை 
கண்களில்      நம்பிக்கை       தருவான் 
அரிதிலும்       அரிதான      அழகன்     ----நமக்கு 
அவனருள்       கிடைத்திடில்     சுகமே 

கண்ணனை      எண்ணியே      தொழுவோம்    ---அவன் 
காலடியில்       சரணமாய்      விழுவோம் 
துன்பத்தை      துடைத்துமே      எழுவோம்   ---காட்டும் 
தூய       வழி தன்னில்       நடப்போம் 

கண்ணனின்     கருணைதான்      பெரிது   ----அவன் 
காக்கின்ற       உலகமோ      சிறிது 
எண்ணத்தில்     அவனையே   நினைப்போம்   ----அவனது 
இணையடி         நிழலில்     மகிழ்வோம்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக