அன்பினைத் தருவதில் அண்ணல் ---நம்
அவலத்தை தீர்ப்பதில் மன்னன்
துன்பத்தை தோளினில் சுமப்பான் ----வழியில்
தோன்றாத துணையாக வருவான்
எங்கும் நிறைந்துமே இருப்பான் ----உழைக்கும்
ஏழை கள் மனங்களில் வசிப்பான்
தங்கத்தைப் போன்றிட்ட புனிதன் ---பொருளை
தந்துமே மகிழ்வதில் வள்ளல்
கருணையை மழையெனப் பொழிவான் ---ஏழை
கண்களில் நம்பிக்கை தருவான்
அரிதிலும் அரிதான அழகன் ----நமக்கு
அவனருள் கிடைத்திடில் சுகமே
கண்ணனை எண்ணியே தொழுவோம் ---அவன்
காலடியில் சரணமாய் விழுவோம்
துன்பத்தை துடைத்துமே எழுவோம் ---காட்டும்
தூய வழி தன்னில் நடப்போம்
கண்ணனின் கருணைதான் பெரிது ----அவன்
காக்கின்ற உலகமோ சிறிது
எண்ணத்தில் அவனையே நினைப்போம் ----அவனது
இணையடி நிழலில் மகிழ்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக