வண்ணக் கருங்குயில் ---நல்ல
வாசப் புது மலர்
என்னை அழைப்பதென்ன --கிளியே
இதற்குப் பதில் என்னவோ
கொட்டும் அருவியில் ---தினம்
குளிக்கும் மீனினம்
கொட்டும் முழக்கமென்ன ----கிளியே
கொண்ட மயக்கமென்ன
வெட்ட வெளியினில் ---பல
வண்ணப் பறவைகள்
வட்டம் அடிப்பதென்ன ---கிளியே
அதன் வாழ்வில் முடிவு என்ன
நட்ட நடுநிசியில் ---எனோ
நரிகள் கூட்டமாய்
திட்டம் இடுவதென்ன ---கிளியே
தீமைகள் நடப்பதென்ன
இறைவன் படைத்தவை ---இவைகள்
என்றும் இங்கு இருப்பதில்லை
இதிலுள்ள மாயம் என்ன ---கிளியே
நீயே இதற்கும் பதில் சொல்லுவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக