கனிந்து அருள் புரிந்திடு ---வரும்
கவலையைத் தீர்த்திடு
நினைந்தவர் நெஞ்சினில் ---முருகா
நிச்சயம் வந்திடு
வேல் கொண்டு வந்திடு ---உள்ள
வினைகளை அழித்திடு
மாலவன் மருகா ---எம்
மனக் குறை அகற்றிடு
வள்ளியின் கணவனே ---உயர்
வானவர் தலைவனே
புள்ளிமயில் ஏறிவா --நீ
புவனமதைக் காக்க வா
தமிழ் எனும் உருவமே ---எங்கள்
தர்மத்தின் தலைவனே
அமிழ்தினும் மேலோய் --நீயே
ஐயங்கள் தீர்ப்பாய்
சக்தியின் மைந்தனே ---தூய
சரவணப் பொய்கையனே
முத்தமிழ் காத்திட வா ---வந்த
மோகத்தை நீக்கிட வா
கவலையைத் தீர்த்திடு
நினைந்தவர் நெஞ்சினில் ---முருகா
நிச்சயம் வந்திடு
வேல் கொண்டு வந்திடு ---உள்ள
வினைகளை அழித்திடு
மாலவன் மருகா ---எம்
மனக் குறை அகற்றிடு
வள்ளியின் கணவனே ---உயர்
வானவர் தலைவனே
புள்ளிமயில் ஏறிவா --நீ
புவனமதைக் காக்க வா
தமிழ் எனும் உருவமே ---எங்கள்
தர்மத்தின் தலைவனே
அமிழ்தினும் மேலோய் --நீயே
ஐயங்கள் தீர்ப்பாய்
சக்தியின் மைந்தனே ---தூய
சரவணப் பொய்கையனே
முத்தமிழ் காத்திட வா ---வந்த
மோகத்தை நீக்கிட வா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக