ஞாயிறு, 28 ஜூலை, 2019

சரவணன் 7 2 9

கனிந்து      அருள்       புரிந்திடு     ---வரும்
கவலையைத்        தீர்த்திடு
நினைந்தவர்      நெஞ்சினில்   ---முருகா
நிச்சயம்       வந்திடு

வேல்     கொண்டு      வந்திடு    ---உள்ள
வினைகளை       அழித்திடு 
மாலவன்        மருகா    ---எம்
மனக் குறை     அகற்றிடு

வள்ளியின்      கணவனே    ---உயர்
வானவர்       தலைவனே
புள்ளிமயில்      ஏறிவா    --நீ
புவனமதைக்    காக்க  வா

தமிழ் எனும்       உருவமே    ---எங்கள்
தர்மத்தின்       தலைவனே
அமிழ்தினும்     மேலோய்   --நீயே
ஐயங்கள்       தீர்ப்பாய்

சக்தியின்      மைந்தனே    ---தூய
சரவணப்     பொய்கையனே
முத்தமிழ்       காத்திட   வா   ---வந்த
மோகத்தை      நீக்கிட    வா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக