வியாழன், 18 ஜூலை, 2019

தீங்கனி 7 1 4

கண்ணான      கண்மணி     ---என்
கண்களின்      கருமணி
உன்னாசை     போகுமா   ---எனக்கு
உயிரானாய்     நீயம்மா

என்னவோ     சொல்கிறேன்   ---நான்
எங்கேயோ     போகிறேன்
நின் முகம்     காணவே    ---காதல்
நெஞ்சோடு    அலைகிறேன்

கண்ணாலே     காணவும்     காதலும்     வந்தது   ---நாம்
கல்யாணம்     செய்திட    காலமும்    சேர்ந்தது
சொன்னாலே  போதுமே   சொர்க்கமும்   திறக்கும்   ---நாம்
சுகமாய்      வாழ்ந்திட     நீயும்    சொல்லடி      சம்மதம்

ஊரெல்லாம்    பந்தல்      உன்னோடு     திருமணம்   ---நான்
ஒய்யாரத்    தேரிலே      பெண்ணோடு    ஊர்வலம்
சீரெல்லாம்     செய்து     சிறப்பினைக்     காட்டுவேன்    ---என்
சிங்காரி      உன்னுடன்     தேன் நிலவு     போவேன்

மாடி வீட்டினில்    என் மனைவியுடன்      உல்லாசம்   ---என்
மங்கை       உன்மடியினில்     மகிழ்வோடு   சல்லாபம்
தேடி உன்னை    மணக்க     தெய்வம்    அருளியது   ---நல்ல
தீங்கனிச்     சாறு நீ     திரும்பித்    தான்     பாரேண்டி

கண்ட       கனவிதுவும்       கைவரக்    கூடுமா  --இந்த
பெண்ணை     மணம்    புரிந்தால்    பிழையாகப்     போகுமோ
ஆண்டு     சுகித்திருக்க     அன்னை    அருள்     வேண்டும்    --அவளை
அள்ளி யே     அணைத்திருக்க    எனக்கு    அதிர்ஷ்டமும்     வேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக