கண்ணான கண்மணி ---என்
கண்களின் கருமணி
உன்னாசை போகுமா ---எனக்கு
உயிரானாய் நீயம்மா
என்னவோ சொல்கிறேன் ---நான்
எங்கேயோ போகிறேன்
நின் முகம் காணவே ---காதல்
நெஞ்சோடு அலைகிறேன்
கண்ணாலே காணவும் காதலும் வந்தது ---நாம்
கல்யாணம் செய்திட காலமும் சேர்ந்தது
சொன்னாலே போதுமே சொர்க்கமும் திறக்கும் ---நாம்
சுகமாய் வாழ்ந்திட நீயும் சொல்லடி சம்மதம்
ஊரெல்லாம் பந்தல் உன்னோடு திருமணம் ---நான்
ஒய்யாரத் தேரிலே பெண்ணோடு ஊர்வலம்
சீரெல்லாம் செய்து சிறப்பினைக் காட்டுவேன் ---என்
சிங்காரி உன்னுடன் தேன் நிலவு போவேன்
மாடி வீட்டினில் என் மனைவியுடன் உல்லாசம் ---என்
மங்கை உன்மடியினில் மகிழ்வோடு சல்லாபம்
தேடி உன்னை மணக்க தெய்வம் அருளியது ---நல்ல
தீங்கனிச் சாறு நீ திரும்பித் தான் பாரேண்டி
கண்ட கனவிதுவும் கைவரக் கூடுமா --இந்த
பெண்ணை மணம் புரிந்தால் பிழையாகப் போகுமோ
ஆண்டு சுகித்திருக்க அன்னை அருள் வேண்டும் --அவளை
அள்ளி யே அணைத்திருக்க எனக்கு அதிர்ஷ்டமும் வேண்டும்
கண்களின் கருமணி
உன்னாசை போகுமா ---எனக்கு
உயிரானாய் நீயம்மா
என்னவோ சொல்கிறேன் ---நான்
எங்கேயோ போகிறேன்
நின் முகம் காணவே ---காதல்
நெஞ்சோடு அலைகிறேன்
கண்ணாலே காணவும் காதலும் வந்தது ---நாம்
கல்யாணம் செய்திட காலமும் சேர்ந்தது
சொன்னாலே போதுமே சொர்க்கமும் திறக்கும் ---நாம்
சுகமாய் வாழ்ந்திட நீயும் சொல்லடி சம்மதம்
ஊரெல்லாம் பந்தல் உன்னோடு திருமணம் ---நான்
ஒய்யாரத் தேரிலே பெண்ணோடு ஊர்வலம்
சீரெல்லாம் செய்து சிறப்பினைக் காட்டுவேன் ---என்
சிங்காரி உன்னுடன் தேன் நிலவு போவேன்
மாடி வீட்டினில் என் மனைவியுடன் உல்லாசம் ---என்
மங்கை உன்மடியினில் மகிழ்வோடு சல்லாபம்
தேடி உன்னை மணக்க தெய்வம் அருளியது ---நல்ல
தீங்கனிச் சாறு நீ திரும்பித் தான் பாரேண்டி
கண்ட கனவிதுவும் கைவரக் கூடுமா --இந்த
பெண்ணை மணம் புரிந்தால் பிழையாகப் போகுமோ
ஆண்டு சுகித்திருக்க அன்னை அருள் வேண்டும் --அவளை
அள்ளி யே அணைத்திருக்க எனக்கு அதிர்ஷ்டமும் வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக