புதன், 10 ஜூலை, 2019

கருமணி 688

நீரில்        நனைகிறேன்    ---கண்
நீரில்     நினைக்கிறன்
உன்னை    நெஞ்சில்    சுமக்கிறேன்   --காதல்
நினைவில்      தவிக்கிறேன்

வேலால்      என்னை   வீழ்த்தினாய்   ---உன்னை
விரும்பும்படி       மாற்றினாய்
தாளாமல்    அழுகிறேன்   ---அடி 
தையலே   பதில்     என்னவோ
கூடி     நாமும்    இருந்தோமடி    ---நமது
குடும்பம்      தன்னை     நினைந்தோமடி
வாடித்     துடிப்பது    தெரியலையா    --என்
வாழ்வே    உன்னுடன்     புரியலையா

அன்பினை     வேண்டி     நின்றேன்    ---நீயோ
அலட்சியம்     செய்து    விட்டாய்
பண்பினை    மறந்து    விட்டாய்   --என்னை
பாகென     உருக      விட்டாய் 

உன்னிடம்       நீதி     இல்லை   ---என்னிடம்
உண்மைக்கு    பஞ்சம்   இல்லை
கண்ணின்    கருமணியே    காதலி ---வந்த
கவலைக்கு     மருந்து    தருவாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக