கொல்லி மலைத் தேனே ---உன்
கூடவே நானும் வருவேனே
தள்ளிப் போவதும் ஏனடி ---உனக்கு
தாசனாய் இருப்பேன் நானடி
பொன் அருவி யோரம் ----எழில்
பொங்கும் மாலை நேரம்
கன்னி மலரே வா வா ---எனக்கு
உந்தன் காதலை அள்ளித் தா தா
சின்ன இடையினை வளைத்தாய் ---நான்
சிறகு ஒடிந்து போனேன்
கன்னல் மொழி பேசினாய் ---என்மேல்
காதல் வலையினை வீசினாய்
பயந்து நெளிந்து ஒளிந்தேன் ---உன்
பாசப் பார்வையினாலே மலர்ந்தேன்
கயலினை மிஞ்சிடும் கண்ணழகி ----நீ
நான் கண்டவற்றிலே பேரழகி
நினைத்து நினைத்து ரசிப்பேன் ----உன்னை
நிலவில் வைத்து ருசிப்பேன்
அணைக்க எனக்குப் பிடிக்கும் ----எல்லாம்
ஆண்டவன் அருளால் நடக்கும்
கூடவே நானும் வருவேனே
தள்ளிப் போவதும் ஏனடி ---உனக்கு
தாசனாய் இருப்பேன் நானடி
பொன் அருவி யோரம் ----எழில்
பொங்கும் மாலை நேரம்
கன்னி மலரே வா வா ---எனக்கு
உந்தன் காதலை அள்ளித் தா தா
சின்ன இடையினை வளைத்தாய் ---நான்
சிறகு ஒடிந்து போனேன்
கன்னல் மொழி பேசினாய் ---என்மேல்
காதல் வலையினை வீசினாய்
பயந்து நெளிந்து ஒளிந்தேன் ---உன்
பாசப் பார்வையினாலே மலர்ந்தேன்
கயலினை மிஞ்சிடும் கண்ணழகி ----நீ
நான் கண்டவற்றிலே பேரழகி
நினைத்து நினைத்து ரசிப்பேன் ----உன்னை
நிலவில் வைத்து ருசிப்பேன்
அணைக்க எனக்குப் பிடிக்கும் ----எல்லாம்
ஆண்டவன் அருளால் நடக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக