கண்ணால் எனோ வெட்டினாள் ---என்னை
காதல் வலையினில் மாட்டினாள்
பொன்னால் செய்திட்ட உருவமா ---அல்லது
பொங்கும் இளமையின் கர்வமா
வெள்ளையாய்த் தெரிவது பற்களா ---இல்லை
வெண் முத்துக்கள் கோர்த்த மலர்களா
கொள்ளை அடிப்பதவள் கூந்தலா ---அவள்
கொடியிடை மதன் விடும் பாணமா
சிரித்து சிரித்தென்னை மயக்கினாள் ---மனம்
சீதள நிலவாய் ஆக்கினாள்
விரிந்த கண்களோ மூடலை --எனக்கு
வேலைகள் எதுவும் ஓடலை
ஏன்தான் தினமும் கொல்கிறாள் ---என்
இதயக் கூட்டினில் வாழ்கிறாள்
தேனும் பாலுமாய்ச் சேருமோ ---இல்லை
தேம்பி அழும்நிலை யாகுமா
நம்பியே நானும் வாழ்கிறேன் ---என்
நாயகி காலடி வீழ்கிறேன்
அம்பிகை அருள்தர வருவாளா ---என்னை
அணைத்து ஆறுதல் தருவாளா
காதல் வலையினில் மாட்டினாள்
பொன்னால் செய்திட்ட உருவமா ---அல்லது
பொங்கும் இளமையின் கர்வமா
வெள்ளையாய்த் தெரிவது பற்களா ---இல்லை
வெண் முத்துக்கள் கோர்த்த மலர்களா
கொள்ளை அடிப்பதவள் கூந்தலா ---அவள்
கொடியிடை மதன் விடும் பாணமா
சிரித்து சிரித்தென்னை மயக்கினாள் ---மனம்
சீதள நிலவாய் ஆக்கினாள்
விரிந்த கண்களோ மூடலை --எனக்கு
வேலைகள் எதுவும் ஓடலை
ஏன்தான் தினமும் கொல்கிறாள் ---என்
இதயக் கூட்டினில் வாழ்கிறாள்
தேனும் பாலுமாய்ச் சேருமோ ---இல்லை
தேம்பி அழும்நிலை யாகுமா
நம்பியே நானும் வாழ்கிறேன் ---என்
நாயகி காலடி வீழ்கிறேன்
அம்பிகை அருள்தர வருவாளா ---என்னை
அணைத்து ஆறுதல் தருவாளா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக