புதன், 17 ஜூலை, 2019

அம்பிகை 7 1 0

கண்ணால்        எனோ       வெட்டினாள்    ---என்னை
காதல்      வலையினில்     மாட்டினாள்
பொன்னால்     செய்திட்ட    உருவமா   ---அல்லது
பொங்கும்     இளமையின்    கர்வமா

வெள்ளையாய்த்      தெரிவது      பற்களா   ---இல்லை
வெண்   முத்துக்கள்    கோர்த்த   மலர்களா
கொள்ளை    அடிப்பதவள்      கூந்தலா   ---அவள்
கொடியிடை    மதன்    விடும்    பாணமா

சிரித்து      சிரித்தென்னை     மயக்கினாள்   ---மனம்
சீதள        நிலவாய்      ஆக்கினாள்
விரிந்த       கண்களோ      மூடலை  --எனக்கு
வேலைகள்      எதுவும்     ஓடலை

ஏன்தான்      தினமும்  கொல்கிறாள்  ---என்
இதயக்       கூட்டினில்   வாழ்கிறாள்
தேனும்       பாலுமாய்ச்    சேருமோ    ---இல்லை
தேம்பி      அழும்நிலை     யாகுமா

நம்பியே      நானும்      வாழ்கிறேன்   ---என்
நாயகி       காலடி      வீழ்கிறேன்
அம்பிகை     அருள்தர     வருவாளா   ---என்னை
அணைத்து     ஆறுதல்     தருவாளா  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக