கண்ணில் வைத்துக் காத்திருந்தேன் --என்
காதல் நெஞ்சில் பூத்திருந்தேன்
உன்னில் என்னைக் கலந்திருதேன் --நாளும்
உன்னை மனசில் பூசை செய்தேன்
இரவு வந்தால் தூக்கமில்லை --உன்
இதயவாசல் இன்னும் எனோ திறக்கவில்லை
உறவை சொல்லிட மனமில்லையோ ---நான்
உன்னால் தவிப்பது புரியலையா
உணவைக் கூட நான் உன்னால் விட்டேன் ---உன்
உறவை எண்ணி உச்சம் தொட்டேன்
கனவாய் காதல் கருகலாமா ---என்
கண்ணா நீயென்னை மறக்கலாமா
சிரிப்பு சப்தம் எங்கோ போச்சு ---என்
செல்வமே உன்னால் எல்லாம் போச்சு
எரிக்கும் நிலவு எனக்காய் ஆச்சு --என்
இருவிழி கண்ணீர் அருவியாய் போச்சு
வருவாய் என்று நான் வாசலில் நிற்பேன் ---நீ
வரவில்லை என்றால் உடனுயிர் துறப்பேன்
விரைவாய் வருவாய் என் வெற்றி செல்வமே ---நீயே
விரும்பி வந்தால் மகிழுமென் உள்ளமே
காதல் நெஞ்சில் பூத்திருந்தேன்
உன்னில் என்னைக் கலந்திருதேன் --நாளும்
உன்னை மனசில் பூசை செய்தேன்
இரவு வந்தால் தூக்கமில்லை --உன்
இதயவாசல் இன்னும் எனோ திறக்கவில்லை
உறவை சொல்லிட மனமில்லையோ ---நான்
உன்னால் தவிப்பது புரியலையா
உணவைக் கூட நான் உன்னால் விட்டேன் ---உன்
உறவை எண்ணி உச்சம் தொட்டேன்
கனவாய் காதல் கருகலாமா ---என்
கண்ணா நீயென்னை மறக்கலாமா
சிரிப்பு சப்தம் எங்கோ போச்சு ---என்
செல்வமே உன்னால் எல்லாம் போச்சு
எரிக்கும் நிலவு எனக்காய் ஆச்சு --என்
இருவிழி கண்ணீர் அருவியாய் போச்சு
வருவாய் என்று நான் வாசலில் நிற்பேன் ---நீ
வரவில்லை என்றால் உடனுயிர் துறப்பேன்
விரைவாய் வருவாய் என் வெற்றி செல்வமே ---நீயே
விரும்பி வந்தால் மகிழுமென் உள்ளமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக