புதன், 10 ஜூலை, 2019

தலைவன் 687

என்னோடு     கானம்    --உலகில்
எந்நாளும்      வாழும் 
பொன்னோடு     பொருளும்     சேரும்  --அழியா
புகழ்      வந்து     நிறையும்

கண்ணான    அன்னை    கவிஞனாய்   படைத்தாள்   ---அவள்
கனிவான    பார்வை       காசுகள்    தருமே
விண்ணாளும்    பெரியோர்   வெற்றிகள்  தருவார்    ---அவர்
விரும்பிய     வழிகளில்    வெற்றிகள்   பெறுவேன்

மணவாட்டி     என்பாள்      மணநாளில்   கிடைத்தாள்   --என்
மனம்       அமைதி     பெறுமென   மனதார   நினைத்தேன்
கண்ணான    பிள்ளைகள்    கவனமாய்    படித்தார்   --அந்த
கடவுளின்     செல்வங்கள்    கருத்தாக     வாழும்

மண நாளைத்    தொடர்ந்து      மகிழ்வுடன்    வாழ்வார்   ---என்
மாதாவின்     அருளால்     மழலைகள்     பிறக்கும்
பொன்னும்     மணியும்     பொங்கியே    வழியும்    ---இந்த
பூமியில்      அவர்  வாழ்வு    புகழோடு    சிறக்கும்

கண்ணனைத்      தொழுதால்     கைமேல்    பலனே   --அவர்
காலடி     பற்றிட    வந்த    கவலைகள்    மறையும்
என்மன     வானிலே       இருப்பவன்     கண்ணன்   ---இன்னும்
ஏலேழு        ஜென்மத்தில்     எனக்கவனே     தலைவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக