என்னோடு கானம் --உலகில்
எந்நாளும் வாழும்
பொன்னோடு பொருளும் சேரும் --அழியா
புகழ் வந்து நிறையும்
கண்ணான அன்னை கவிஞனாய் படைத்தாள் ---அவள்
கனிவான பார்வை காசுகள் தருமே
விண்ணாளும் பெரியோர் வெற்றிகள் தருவார் ---அவர்
விரும்பிய வழிகளில் வெற்றிகள் பெறுவேன்
மணவாட்டி என்பாள் மணநாளில் கிடைத்தாள் --என்
மனம் அமைதி பெறுமென மனதார நினைத்தேன்
கண்ணான பிள்ளைகள் கவனமாய் படித்தார் --அந்த
கடவுளின் செல்வங்கள் கருத்தாக வாழும்
மண நாளைத் தொடர்ந்து மகிழ்வுடன் வாழ்வார் ---என்
மாதாவின் அருளால் மழலைகள் பிறக்கும்
பொன்னும் மணியும் பொங்கியே வழியும் ---இந்த
பூமியில் அவர் வாழ்வு புகழோடு சிறக்கும்
கண்ணனைத் தொழுதால் கைமேல் பலனே --அவர்
காலடி பற்றிட வந்த கவலைகள் மறையும்
என்மன வானிலே இருப்பவன் கண்ணன் ---இன்னும்
ஏலேழு ஜென்மத்தில் எனக்கவனே தலைவன்
எந்நாளும் வாழும்
பொன்னோடு பொருளும் சேரும் --அழியா
புகழ் வந்து நிறையும்
கண்ணான அன்னை கவிஞனாய் படைத்தாள் ---அவள்
கனிவான பார்வை காசுகள் தருமே
விண்ணாளும் பெரியோர் வெற்றிகள் தருவார் ---அவர்
விரும்பிய வழிகளில் வெற்றிகள் பெறுவேன்
மணவாட்டி என்பாள் மணநாளில் கிடைத்தாள் --என்
மனம் அமைதி பெறுமென மனதார நினைத்தேன்
கண்ணான பிள்ளைகள் கவனமாய் படித்தார் --அந்த
கடவுளின் செல்வங்கள் கருத்தாக வாழும்
மண நாளைத் தொடர்ந்து மகிழ்வுடன் வாழ்வார் ---என்
மாதாவின் அருளால் மழலைகள் பிறக்கும்
பொன்னும் மணியும் பொங்கியே வழியும் ---இந்த
பூமியில் அவர் வாழ்வு புகழோடு சிறக்கும்
கண்ணனைத் தொழுதால் கைமேல் பலனே --அவர்
காலடி பற்றிட வந்த கவலைகள் மறையும்
என்மன வானிலே இருப்பவன் கண்ணன் ---இன்னும்
ஏலேழு ஜென்மத்தில் எனக்கவனே தலைவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக