உள்ளதைச் சொல்லிட முடியலே ---இந்த
உலகினில் நடப்பது புரியலே
நல்லதை தீதென்று சொல்லுறான் ---போடும்
நாடகத்தை நம்பிடச் சொல்லுறான்
கூட்டத்தை கூட்டிப் பேசுவான் ---கொள்கையை
சொல்லாமல் பிறரை தூற்றுவான்
வாட்டத்தைப் போக்கிட வந்தவன் --இங்கே
வாரிச் சுருட்டியே அமுக்கிறான்
அள்ளிக் கொடுப்பதாய் சொல்பவன் ---என்றும்
அஞ்சு பைசா கூட இதுவரை எதுவும் கொடுக்கலே
கள்ளப் பணங்களை நிறையச் சேர்க்கிறான் ---ஏழை
கண்ணீரில் நீச்சல் அடிக்கிறான்
பெண்களை தெய்வமென ப் பேசுவான் ---அவர்
பிழைப்பை கெடுப்பதற்கு ஓடுவான்
கண்ணில் தென்படும் சொத்துக்களை --ஒருநாள்
கச்சிதமாக தன்பெயர்க்கு மாற்றுவான்
நாடு நாடென்று பேசுவான் ---பிறர்
நல்லது செய்தாலும் ஏசுவான்
கோடி சேர்த்தும் ஆசை குறையல ---இவன்
கொடுமை தீர்வதெப்போ தெரியலே
உலகினில் நடப்பது புரியலே
நல்லதை தீதென்று சொல்லுறான் ---போடும்
நாடகத்தை நம்பிடச் சொல்லுறான்
கூட்டத்தை கூட்டிப் பேசுவான் ---கொள்கையை
சொல்லாமல் பிறரை தூற்றுவான்
வாட்டத்தைப் போக்கிட வந்தவன் --இங்கே
வாரிச் சுருட்டியே அமுக்கிறான்
அள்ளிக் கொடுப்பதாய் சொல்பவன் ---என்றும்
அஞ்சு பைசா கூட இதுவரை எதுவும் கொடுக்கலே
கள்ளப் பணங்களை நிறையச் சேர்க்கிறான் ---ஏழை
கண்ணீரில் நீச்சல் அடிக்கிறான்
பெண்களை தெய்வமென ப் பேசுவான் ---அவர்
பிழைப்பை கெடுப்பதற்கு ஓடுவான்
கண்ணில் தென்படும் சொத்துக்களை --ஒருநாள்
கச்சிதமாக தன்பெயர்க்கு மாற்றுவான்
நாடு நாடென்று பேசுவான் ---பிறர்
நல்லது செய்தாலும் ஏசுவான்
கோடி சேர்த்தும் ஆசை குறையல ---இவன்
கொடுமை தீர்வதெப்போ தெரியலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக