வியாழன், 11 ஜூலை, 2019

தூது 689

கண்ணான      காவியம்   --அவள்
கள்ளூறும்     ஓவியம்
பெண்ணாக    வந்தனள்   --என்னை
பித்தாக      செய்தனள்

தேனாக      மொழிபவள்    --எனோ
திசை      மாற      வைத்தனள்
ஆணான      என்னையே     ---தன்
அம்பாலே     அடிப்பவள்

எந்நாளும்      அவள்  நினைவிலே   ---நான்
இருந்தாலே     போதுமா
கண்ணாட்டி     அவளையும்   ---நான்
கைப்பற்ற      வேண்டுமே

ஊராரைக்      கூட்டுவேன்    ---மனதில்
உள்ளதைக்     கூறுவேன்
போராடும்      மனதிற்கு    ---நானே
புது வழி       காட்டுவேன்

வாழ்ந்தாலும்     அவளுடன்    ---என்
வாழ் நாளும்    சேரலாம்
சூழ்ந்து       வீசிடும்    காற்றே   ---நீ
எனக்காய்     தூதாகப்     போய்வா


  ----

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக