கண்ணான காவியம் --அவள்
கள்ளூறும் ஓவியம்
பெண்ணாக வந்தனள் --என்னை
பித்தாக செய்தனள்
தேனாக மொழிபவள் --எனோ
திசை மாற வைத்தனள்
ஆணான என்னையே ---தன்
அம்பாலே அடிப்பவள்
எந்நாளும் அவள் நினைவிலே ---நான்
இருந்தாலே போதுமா
கண்ணாட்டி அவளையும் ---நான்
கைப்பற்ற வேண்டுமே
ஊராரைக் கூட்டுவேன் ---மனதில்
உள்ளதைக் கூறுவேன்
போராடும் மனதிற்கு ---நானே
புது வழி காட்டுவேன்
வாழ்ந்தாலும் அவளுடன் ---என்
வாழ் நாளும் சேரலாம்
சூழ்ந்து வீசிடும் காற்றே ---நீ
எனக்காய் தூதாகப் போய்வா
----
கள்ளூறும் ஓவியம்
பெண்ணாக வந்தனள் --என்னை
பித்தாக செய்தனள்
தேனாக மொழிபவள் --எனோ
திசை மாற வைத்தனள்
ஆணான என்னையே ---தன்
அம்பாலே அடிப்பவள்
எந்நாளும் அவள் நினைவிலே ---நான்
இருந்தாலே போதுமா
கண்ணாட்டி அவளையும் ---நான்
கைப்பற்ற வேண்டுமே
ஊராரைக் கூட்டுவேன் ---மனதில்
உள்ளதைக் கூறுவேன்
போராடும் மனதிற்கு ---நானே
புது வழி காட்டுவேன்
வாழ்ந்தாலும் அவளுடன் ---என்
வாழ் நாளும் சேரலாம்
சூழ்ந்து வீசிடும் காற்றே ---நீ
எனக்காய் தூதாகப் போய்வா
----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக