செவ்வாய், 9 ஜூலை, 2019

குமரி 681

நினைவில்   வந்ததென்ன      ----என்னை
நித்தம்  நித்தம்     கொல்வதென்ன
உறவில்    கலந்ததென்ன    நான்   ---உன்னை
எண்ணிக்     கலங்குவதென்ன

கனவினில்      வருவதேன்    ---என்
கண்ணீரில்  நீயும்    சிரிப்பதேன்
மனதில்     இருப்பதேன்    ---பல
மாயங்கள்    செய்வதேன்

நெஞ்சம்      அழுவதேன்     ---உன்னை
நேரில்     காணத்     துடிப்பதேன்
மஞ்சம்       அழைப்பதேன்    ---என்றும்
மனைவியாக்கத்     துடிப்பதேன்

கொஞ்ச      மனமும்      இல்லையோ   ---நாம்
குலவிட      நாள்       வல்லையோ
தஞ்சம்      நீயென      வந்தால்     ---என்னை
தாங்கிக்       கொள்ள    இடமில்லையோ

வாடும்       நெஞ்சமினி      வாடுவதா     ----என்
வாழ்வு       பலனின்றி      ஓடுவதா
கூடும்        ஆசைகள்      உனக்கில்லையோ    ----இளம்
குமரிப்பெண்    நீயும்     பதில்    கூறிடுவாய் 
                                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக