நினைவில் வந்ததென்ன ----என்னை
நித்தம் நித்தம் கொல்வதென்ன
உறவில் கலந்ததென்ன நான் ---உன்னை
எண்ணிக் கலங்குவதென்ன
கனவினில் வருவதேன் ---என்
கண்ணீரில் நீயும் சிரிப்பதேன்
மனதில் இருப்பதேன் ---பல
மாயங்கள் செய்வதேன்
நெஞ்சம் அழுவதேன் ---உன்னை
நேரில் காணத் துடிப்பதேன்
மஞ்சம் அழைப்பதேன் ---என்றும்
மனைவியாக்கத் துடிப்பதேன்
கொஞ்ச மனமும் இல்லையோ ---நாம்
குலவிட நாள் வல்லையோ
தஞ்சம் நீயென வந்தால் ---என்னை
தாங்கிக் கொள்ள இடமில்லையோ
வாடும் நெஞ்சமினி வாடுவதா ----என்
வாழ்வு பலனின்றி ஓடுவதா
கூடும் ஆசைகள் உனக்கில்லையோ ----இளம்
குமரிப்பெண் நீயும் பதில் கூறிடுவாய்
நித்தம் நித்தம் கொல்வதென்ன
உறவில் கலந்ததென்ன நான் ---உன்னை
எண்ணிக் கலங்குவதென்ன
கனவினில் வருவதேன் ---என்
கண்ணீரில் நீயும் சிரிப்பதேன்
மனதில் இருப்பதேன் ---பல
மாயங்கள் செய்வதேன்
நெஞ்சம் அழுவதேன் ---உன்னை
நேரில் காணத் துடிப்பதேன்
மஞ்சம் அழைப்பதேன் ---என்றும்
மனைவியாக்கத் துடிப்பதேன்
கொஞ்ச மனமும் இல்லையோ ---நாம்
குலவிட நாள் வல்லையோ
தஞ்சம் நீயென வந்தால் ---என்னை
தாங்கிக் கொள்ள இடமில்லையோ
வாடும் நெஞ்சமினி வாடுவதா ----என்
வாழ்வு பலனின்றி ஓடுவதா
கூடும் ஆசைகள் உனக்கில்லையோ ----இளம்
குமரிப்பெண் நீயும் பதில் கூறிடுவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக