புதன், 3 ஜூலை, 2019

புதிய தேன் 668

கண்களிலே      மத்தாப்பு ---உன்
கன்னம்    இரண்டும்    ரோஜாப்பூ 
உன்னைக்    கண்டா     கிளுகிளுப்பு --இளம் 
உதடு      ரெண்டும்       பளபளப்பு 

பொன்னாலே    செய்து    வச்சான்  ---அதனை  
பூவாலே    மூடி     வைச்சான் 
முன்னாலே     ஆட    வைச்சான்    ---வரும் 
மோகத்தில்  வாட   வைச்சான் 

என்ன   சொல்லிப்    பாடிடுவேன்   ---உன்னை 
எங்கே    போய்த்    தேடிடுவேன் 
எந்நாளும்   மனசில்  நினைத்திடுவேன்  --அன்பால் 
இதயச்     சிறையில்    அடைத்திடுவேன் 

அலையாடும்      கூந்தலடி    ---உன் 
அருகினில்     புது வசமடி 
கலையாடும்     உருவமடி    --இரு 
கண்களில்    எதற்கிந்தக்    கருவமடி 

இருமனம்    கலந்திட    வருவாயா  --உன் 
இதயத்தில்    எனக்கிடம்    தருவாயா 
திருமண    நாள்  குறிக்க    வரலாமா  ---நீயும் 
பு து தேனை    யள்ளித்   தரலாமா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக