கண்களிலே மத்தாப்பு ---உன்
கன்னம் இரண்டும் ரோஜாப்பூ
உன்னைக் கண்டா கிளுகிளுப்பு --இளம்
உதடு ரெண்டும் பளபளப்பு
பொன்னாலே செய்து வச்சான் ---அதனை
பூவாலே மூடி வைச்சான்
முன்னாலே ஆட வைச்சான் ---வரும்
மோகத்தில் வாட வைச்சான்
என்ன சொல்லிப் பாடிடுவேன் ---உன்னை
எங்கே போய்த் தேடிடுவேன்
எந்நாளும் மனசில் நினைத்திடுவேன் --அன்பால்
இதயச் சிறையில் அடைத்திடுவேன்
அலையாடும் கூந்தலடி ---உன்
அருகினில் புது வசமடி
கலையாடும் உருவமடி --இரு
கண்களில் எதற்கிந்தக் கருவமடி
இருமனம் கலந்திட வருவாயா --உன்
இதயத்தில் எனக்கிடம் தருவாயா
திருமண நாள் குறிக்க வரலாமா ---நீயும்
பு து தேனை யள்ளித் தரலாமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக