திங்கள், 15 ஜூலை, 2019

லீலை 7 0 5

நில்லாமல்     நடந்தவள்    ---என்
நெஞ்சத்தில்    கிடந்தவள்
சொல்லாமல்    போகிறாள்   ---தன
சோகத்தை    மறைக்கிறாள்

வெந்நீரில்      வளர்ந்தவள்    ---என்
விழி நீரில்    மலர்ந்தவள்
பன்னீரை     வெறுக்கிறாள்   ---தனது
பாசத்தை     துறக்கிறாள்

வண்டாடும்     சோலையில்    ---நான்
வந்தாடும்      வேளையில்
பெண்டாக     நினைத்தவள்   ---எனோ
பேசாமல்      போகிறாள்
 அன்பாலே    அனைத்தவள்  --என்   
ஆசையை    நினைத்தவள் 
துன்பத்தை     தருகிறாள்    ---எதற்கோ
தூரமாய்ப்       போகிறாள்

எல்லாமே        மாயையா   ---இதுவும்
இறைவனின்    லீலையா
நல்லோரே      சொல்லுவீர்   ---எனக்கு
நல் வாழ்த்து     கூறுவீர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக