புதன், 31 ஜூலை, 2019

துபாய் 7 3 6

வெட்ட      வெளியெங்கும்    ---வெப்பம்
கொட்டிக்       கிடக்குது
கொட்டும்     மழை  யில்லை   ---ஆனால்
துணைக்கு     குளிரும்   இருக்குது

வட்ட        வடிவச்       சாலைகள்   ---அவையருகில்
வரிசையாய்     உயர்       கட்டிடங்கள்
திட்ட      வேலைகள்      நடக்க    ---ஆட்கள்
தினமும்      அதிகமாய்      வருகிறாரே

மன்னர்        ஆட்சி  முறை    ----தெய்வ
மகிமையால்     இன்றும்      நடக்குது
எண்ணெய்      வளங்கள்   இந்தப்   ---பூமியில்
இன்னும்       ஏராளமாய்      உள்ளது

ஊரெங்கும்       சோலைகள்    ---இங்கு
உள்ளோர்க்கும்        வேலைகள்
பார்க்குமிட   மெல்லாம்      பச்சை  நிறம்   ---எங்கும்
பாகுபாடு      இல்லாத      நல்ல     குணம்

பாலை   வனமென்று     பார்த்தால்    தெரியாது   ----அதனால்
வேலை   வேலை யென    விரும்பி   வருவார்கள்
நாளைக்    கழிப்பதற்கு    நல்ல     இடமென்பேன்    ---அந்த
நாயகன்      அருளாலே     நலமுடன்     வாழ்வோமே 

இளநெஞ்சம் 7 3 5

நிலவைக்    கண்டதும்      ஏனோ     --என்
நெஞ்சம்      குழைவதேன்
அலையில்    ஆடும்    சிறு  படகு  போல் --இன்று
எந்தன்      ஆசை      தடுமாறுதே
களவு      செய்தவன்    ---ஏனோ
காற்றாய்     ஓடினான்
நினைத்து   நினைத்து    ஏன்   ---நான்
நித்தம்       அழுகிறேன்
விடையைக்     கண்டிட   ---இனி
விரும்புதே      என்மனம்
கடையைத்   திறந்திட்டும்   ---எனக்கு
கண்ட    பலன்      என்ன
தடையை    மீறினேன்  ---ஒரு
தவறு     செய்தேன்    நான்
ஆசை     கொண்டதால்   ---இன்று
அல்லல்     படுகிறேன்
இளைஞர்     கூட்டமே   ---நீவிர்
இரக்கம்       கொள்ளுவீர்
உடமை     தந்தவள்    ----உம
உயிரினும்     மேலவள்
சிரிக்க      வையுங்கள்   ---வாழ்க்கை
சீர்பெறச்     செய்யுங்கள்
தவிக்கும்     இளநெஞ்சம்    ----உமது
தயவால்       வாழட்டும்  

செவ்வாய், 30 ஜூலை, 2019

சிந்தனை 7 3 4

கொட்டும்            அருவியில்    ---நாம்
குளித்து        மகிழ்கையில்
பட்டு மேனி     சிலிர்க்குதே    ---சகியே
மனம்      பரவசமாகுதே

சில்லென்ற        நீரோட    --நம்
செம்பவள     வாய்   மூடும்
நில்லென்று     சொன்னாலும்   --அது
நிற்காது       நீரோடும்

கண்ணாளன்       வருகைக்கு   ---கரையில்
காத்து   நிற்கும்    பறவைகள்
முன்னாலும்    பின்னாலும்     ஓடும் ---அதன்
விழிகளில்     பாசம்      வழிந்தோடும்

இரவென்றும்      பகலென்றும்   ---தினம்
எதுவென்று       புரியாமல்
அருவி  மகள்     போடுகிறாள்      ஆட்டம்   ---அதனை
ஆர்ப்பரித்து     பார்க்குது    பார்    கூட்டம்

இயற்கை      நமக்களித்த    எண்ணற்ற     செல்வங்கள் ---அதனை
முறையாக  மக்கள்    பயன்  படுத்த      வேண்டாமா
செயற்கையை     நாடிச்    சீரழிந்து     போனவர்கள் --இனி
சிந்தனையை      மாற்றி     சீர்பெற  இன்றே   வருவாரோ 

கோடி 7 3 3

உள்ளதைச்          சொல்லிட       முடியலே     ---இந்த
உலகினில்          நடப்பது      புரியலே
நல்லதை   தீதென்று     சொல்லுறான்   ---போடும்
நாடகத்தை     நம்பிடச்    சொல்லுறான்

கூட்டத்தை       கூட்டிப்      பேசுவான்   ---கொள்கையை
சொல்லாமல்     பிறரை     தூற்றுவான்
வாட்டத்தைப்     போக்கிட     வந்தவன்   --இங்கே
வாரிச்        சுருட்டியே      அமுக்கிறான்

அள்ளிக்       கொடுப்பதாய்     சொல்பவன்   ---என்றும்
அஞ்சு   பைசா      கூட    இதுவரை     எதுவும்   கொடுக்கலே
கள்ளப்   பணங்களை    நிறையச்    சேர்க்கிறான்   ---ஏழை
கண்ணீரில்      நீச்சல்      அடிக்கிறான்

பெண்களை     தெய்வமென ப்    பேசுவான்    ---அவர்
பிழைப்பை      கெடுப்பதற்கு    ஓடுவான்
கண்ணில்   தென்படும்    சொத்துக்களை   --ஒருநாள்
கச்சிதமாக   தன்பெயர்க்கு     மாற்றுவான்

நாடு        நாடென்று       பேசுவான்    ---பிறர்
நல்லது     செய்தாலும்     ஏசுவான்
கோடி     சேர்த்தும்    ஆசை    குறையல   ---இவன்
கொடுமை     தீர்வதெப்போ    தெரியலே  

திங்கள், 29 ஜூலை, 2019

பருவ சுகம் 7 3 2

கன்ன க்           கருங்  குயில்    ---அந்த
காதல்       இளமயில்
என்னை      இழுத்ததென்ன   --கிளியே
இதற்குள்      மாயமென்ன

சின்ன       இடையினில்    ---அவள்
சிறிது     நடக்கையில்
வண்ணச்   சித்திரம்     தெரியுதடி    ---கிளியே
வாலிபம்     எல்லை     மீறுதடி

பருவச்       செழிப்புகள்     ---என்னை
பார்த்து      அழைக்குதே 
கருவம்       கொண்டவளோ   ---அவளே
காதலைச்      சொல்வாளோ

பின்னல்       சடையினால்     ----என்னை
பித்தனாய்      ஆக்கினாள்
கண்ணில்      பட்டதால்    --நானும்
காதலில்      மூழ்கினேன்

கட்டி        அணைத்திட    ---அவளிடம்
காதல்      புரிந்த்திட
பட்டு    மகள்      வருவாளோ    --எனக்கு
பருவ  சுகம்       தருவாளோ 

முல்லை வனம் 7 3 1

தொட்டுச்         சுவைத்தவன்     ---என்
தோளை       அணைத்தவன் 
விட்டுப்     பிரிந்ததென்ன    ---கிளியே
வெம்பித்      தவிப்பதென்ன

முல்லை      வனத்தினில்    ---அடர்
மூங்கில்     புதரினுள்
பள்ளிப்      பாடமென்ன   ---சகியே
படித்து      அறிந்ததென்ன

கொட்டும்      மழையினில்    ---என்
கூட        இருந்தவன்
கட்டி     அனைத்ததென்ன   ---கிளியே
காதல்     மறந்ததென்ன

பட்டு      இதழ்களில்    ---முத்திரை
இட்டுச்      சுவைத்தவன்
எட்டியே     போனதென்ன    ---கிளியே
ஏக்கம்      கொல்வதென்ன

எண்ணி      அழுகிறேன்   ---இருக்கும்
இளமை      துடிக்குதே
கன்னி      நலமாவேனோ    ---கிளியே
கள்ளன்      வருவானோடி 

மின்மினி 7 3 0

கண்வழி         புகுந்தாள்     ---என்
கருத்தினில்     மலர்ந்தாள்
மின்மினியாய்     பிரிந்தாள்   ---அவள்
மீண்டும்      இவண்     வருவாளா

தென்றலில்       நுழைந்தாள்    ---காதல்
தேனினை       சொரிந்தாள்
நன்றியை      நான்    மறவேன்   ---நாயகி
அவளென்பது     வீண்தானா

காற்றினில்      கலந்தாள்     --அந்த
ககனத்தில்    மிதந்தாள் 
வேற்றுமை     என்பது     ஏனோ    ---நான்
விரும்புதல்     சரியில்லை தானோ

ஆசையில்     அணைப்பேன்   ---அவளை
அனுதினம்      நினைப்பேன்
மோசம்       செய்தது     ஏனோ   ---நான்
மோகத்தில்      வாடுதல் தானோ

கடவுளைக்       காண்பேன்   ---அவர்
கருணையைக்     கேட்பேன்
மடமையை     நீக்கிட     வருவார்    ---என்
மனதினில்     மகிழ்ச்சியைத்     தருவார்


ஞாயிறு, 28 ஜூலை, 2019

சரவணன் 7 2 9

கனிந்து      அருள்       புரிந்திடு     ---வரும்
கவலையைத்        தீர்த்திடு
நினைந்தவர்      நெஞ்சினில்   ---முருகா
நிச்சயம்       வந்திடு

வேல்     கொண்டு      வந்திடு    ---உள்ள
வினைகளை       அழித்திடு 
மாலவன்        மருகா    ---எம்
மனக் குறை     அகற்றிடு

வள்ளியின்      கணவனே    ---உயர்
வானவர்       தலைவனே
புள்ளிமயில்      ஏறிவா    --நீ
புவனமதைக்    காக்க  வா

தமிழ் எனும்       உருவமே    ---எங்கள்
தர்மத்தின்       தலைவனே
அமிழ்தினும்     மேலோய்   --நீயே
ஐயங்கள்       தீர்ப்பாய்

சக்தியின்      மைந்தனே    ---தூய
சரவணப்     பொய்கையனே
முத்தமிழ்       காத்திட   வா   ---வந்த
மோகத்தை      நீக்கிட    வா 

ஒருவர் 7 2 8

கண்ணே         உன்னைத்         தொடலாமா   ---நாம
காதல்       பட்டம்       விடலாமா
பெண்ணே       நெருங்கி     வரலாமா    ---நீ
பிரியத்தை       அள்ளியே    தரலாமா

அன்பால்       உன்னிடம்      ஆசை  கொன்டேன்    ---நான்
அனுதினம்     உன்னையே      பூசை    செய்வேன்
கண்ணில்     மணியாய்க்     காத்திடுவேன்    ---உன்னை
காலம்      முழுதும்      பார்த்திருப்பேன்

உறவு      என்பது       தொடர்கதையே    ---நாம்
உணர்ந்து     நடக்கணும்     இதன்     வழியே
பிரிவு       என்பது      கிடையாது    ---புதிய
பிணக்குகள்     இல்லை     யெனும்போது

நாட்கள்       நகர்ந்து      போனாலும்   --நாம்
நலமுடன்     என்றுமே     வாழ்வோமே
வேட்கை       என்பதும்      குறையாது    ---நம்மிடம்
வேதனை      என்பதோ      அணுகாது

இரவும்       பகலும்       சரிசமமே     ---நமக்குள்
என்றும்       இல்லை      அவசரமே
இருவர்       ஒருவர்      என்றானோம்    ---அதனை
இதயத்தில்      நினைத்திட    நன்றானோம் 

தாவணி 7 2 7

கண்ணில்        ஆடும்        மின்னல்     நீயே   ---உன்னை
காதலிக்க        வந்தேன்       மானே
இன்னுமென்ன      தயக்கம்      பெண்ணே   ---நாம்
இருவரும்        வாழ்ந்திட     இசைவாய்      கண்ணே

பொன்னோடு        பூவை       வைப்பேன்   ---உன்னை
புதையலைப்       போல       பாதுகாப்பேன்
என்னுடலில்        உயிரும்      ஆவாய்   ---உனை
என்தலையில்      சுமப்பேன்     பாவாய்

சொத்து       சுகம்      அனைத்தும்      உண்டு    ---நல்ல
சொந்த        பந்தம்      யாவும்       கொண்டு
உத்தமியே     உன்னை      மணக்க     வரலாமா    ---என்
உறவுக்கு      மதிப்பு     நீயும்      தரலாமா

நிலவில்     நாமும்        சென்று      வரலாம்    ---நீ
நினைத்த     வகையில்      சுகமும்    பெறலாம்
பழகப்      பழ க      நானும்     பழமாய்    இனிப்பேன்  ---உன்
பருவப்       பசிக்கு       விருந்தாய்       அமைவேன்

ஆவணியில்     திருமணம்      அழகாய்      உண்டு   --நீ
அணிமணிகள்    அணிவதால்     அழகும்    உண்டு
தாவணியில்       தளிரான       தையல்     நீயே    ---என்னை
தழுவிக்       கொள்ள        சம்மதமா    சொல்வாய்   பெண்ணே 

வியாழன், 25 ஜூலை, 2019

ஆயிரம் 7 2 6

நிலவில்       வந்து      சிரித்தாள்    ---நான்
நெருங்க      ஏனோ    முறைத்தாள்
பழகிட      வந்தது    பாபமா    ---இன்று
பக்கம்    வந்தது    கோபமா

சிரிச்சு     அழைத்தது    நீதானே    ---என்றும்
சிந்தையைத்    கவர்ந்த    தேன்தானே
எரித்திடும்     பார்வை     ஏனம்மா     ---என்
இதயத்தை     தருவேன்    நானம்மா

வில்லை    வளைத்து       இழுத்தாய்   ---என்
விலாஎலும்பினை    ஒடித்தாய்
தொல்லை    மிகவும்    கொடுத்தாய்    ---என்னை
துரத்தி     துரத்தியே     அடித்தாய்

தெருவில்      போனால்      முறைப்பு   ---நான்
திரும்பிப்     பார்த்திட     சலிப்பு
கருவில்      மலர்ந்த     காதல்    ---உன்
கண்களில்     ஏனிந்த     மோதல்

வாசல்      தன்னில்      நிற்பேன்    ---நீ
சொல்கிற     வசவுகளை யும்    ஏற்பேன்
ஆசை     தணித்திட     வந்திடு     --எனக்கு
ஆயிரம்      முத்தங்கள்     தந்திடு 

குழந்தை 7 2 5


அழகுப்        பிள்ளை        பிறக்கும்   ---என் 
அம்மா       போல       இருக்கும் 
களங்கம்      இன்றி   சிரிக்கும்    ---அதன் 
கால்கள்      நம்மை   உதைக்கும் 
கண்ணை    சுழற்றிப்    பார்க் கும்  --நம்  
கருத்தைப்   பற்றி     இழுக்கும் 
புன்னகை   காட்டி    சிரிக்கும்  ---அதில் 
புதுமை     நிறைந்து    இருக்கும் 
பஞ்சு       போல   கைகள்   ---நல்ல 
பளிங்கு    போல    கால்கள் 
அஞ்சு     விரல்களைக்    காட்டி   --நம்மை 
அழைத்தல்    மிகவும்     அழகு 
இரவில்     அதிகம்     விழிக்கும்  ---சிறிது 
இரைச்சல்     கேட்டால்     கத்தும் 
உறவை     அதிகம்      பெருக்கும் ---அதில் 
உண்மை     பாசம்     தெரியும் 
களங்கம்     இல்லா த   மனதிலே   ---நம் 
கடவுள்       வாசம்      செய்வாரே 
மடமை     நீங்கி     வாழலாம்    --நல்ல 
மகத்துவங்கள்    நமக்குச்   சேரலாம் 
கடவுள்    தந்திடும்     கொடைதான்   --இது 
காலம்      தருகின்ற     விடைதான் 
குழந்தையும்    தெய்வமும்    ஒன்றுதான்   ---நாம் 
குறிப்பாய்      உணர்வது     நன்றுதான் 

புதன், 24 ஜூலை, 2019

குழந்தை 7 2 5

அழகுப்        பிள்ளை      பிறக்கும்   --என்
அம்மா       போல      இருக்கும்
களங்கம்     இன்றி     சிரிக்கும்    ---அதன்
கால்கள்     நம்மை     உதைக்கும்
கண்ணை   சுழற்றிப்    பார்க்கும்  ---நம்
கருத்தை     பற்றி     இழுக்கும்
புன்னகை    காட்டி    சிரிக்கும்  ---அதில்
புதுமை     நிறைந்து    இருக்கும்
பஞ்சு      போன்ற     கைகள்   --நல்ல
பளிங்கு    போல     கால்கள்
அஞ்சு   விரல்களைக்  காட்டி  ---நம்மை
அழைத்தல்    மிகவும்     அழகு
இரவில்     அதிகம்     விழிக்கும்  ---சிறிது
இரைச்சல்  கேட்டால்    கத்தும்
உறவை     அதிகம்     பெருக்கும்    ---அதில்
உண்மை      பாசம்     இருக்கும்
களங்கம்     இல்லா  மனதிலே  ---நம்
கடவுள்      வாசம்    செய்வாரே
குழந்தையும்    தெய்வமும்   ஒன்றுதான்   ---நாம்
குறிப்பாய்      உணறுதல்    நன்றுதான்
கடவுள்      தந்திடும்     கொடை  தான்   ==இது
காலம்      தருகிற     விடைதான்
மடமை      நீங்கி     வாழுவோம்   -நல்ல
மனத்தால்     உலகத்தை     ஆளுவோம் 

செவ்வாய், 23 ஜூலை, 2019

விருந்து 7 2 4

அவன் :: நினைச்ச        படியென்னைப்    பேசுறே   ---நான்
நெருங்கினா       கொஞ்சம்    எட்டியே     படுக்கி றே
தனக்கிணை    இல்லையெநத்   தாவுறே   ---உன்னை
தழுவிட      வந்தாக்க      வீணிலே      கூவுறே
அவள் --பொழப்பினை    பாத்துக்க    தெரியலே  --நீயெம்
புருஷனாய்      இருந்தும்      விளங்கலே
புள்ளையை    வளர்த்திட     வேண்டாமா   ---உனக்கு
பொம்பளையா      இருந்திட்டா    போதுமா
அவன் ---கவலைக    ஏண்டி நீயும்    படுகிறே  ---கொஞ்சம்
காசுக்கு     சீட்டாட்டத்தில்  நானும்    ஜெயிக்கிறேன்
மாடி    மனைக     நிறைய    வாங்குறேன்   --உலகில்
மம்முத     ராஜனாய்    தெருவிலே     உலாவுவேன்
அவள் ---வெட்கம்    கெட்டுமே     நீ  போகாதே   ---வீணிலே
காசினை     எடுத்து     சீட்டினில்    போக்காதே
எங்களைக்      காத்திட      நீயும்    வேண்டாமா    ---என்
இருபிள்ளைக    நல்லாப்     படித்திடக்     கூடாதா
அவன் ---எண்ணியே    தினமும்    உழைப்பேனடி  ---உன்
இனிய     சொல்லுக்கு    மதிப்பும்    குடுப்பேனடி
தண்ணியை      சீட்டையும்   இனிமேல்   தொடமாட்டேன்   ---என்
தங்கமே      உந்தன்      எண்ணப்படி    நடப்பேனடி
இருவரும் ---விருந்து   வைச்சுக்     கொண்டாடுவோம்   ---நாம
விடியுமட்டும்  பருவப்    பாடம்     பலவும்    படிப்போம்
கரும்பும்     இனிப்புமா    தினம்     கலந்திருப்போம்   ---அந்த
கடவுள்      அருளாலே   ரொம்ப     காலம்    வாழ்ந்திருப்போம் 

கேள்விகள் ? 7 2 3

கண்களில்    பேரொளியோ     ----அவள்
கலைகளில்     சிறந்தவளோ
பெண்களில்     பேரழகோ    ---என்றும்
பேசிடாப்      பொற்சிலையோ
இடையென்பது   இல்லாததோ  -அதுவும்
இயற்கை    தந்த     சீதனமோ
நடை யென்பது    நாட்டியமோ   ---அவள்
நாணயம்      மிக்கவளோ
அம்புகள்    எய்வாளோ    ---எதிர்க்கும்
ஆண்களைக்      கொல்வாளோ
நம்பிடுவர்க்கு       நல்லவளோ   ---இல்லை
நரியினைப்      போன்றவளோ
பங்கஜ      முகத்தாளோ    ---அவள்
பத்தினிக்    குணத்தாளோ
தங்கத்தின்    நிறத்தாளோ   ---என்னிடம்
தயவாய்        இருப்பாளோ
மஞ்சத்தில்    சிறப்பாளோ   ---இல்லை
மனதால்     வெறுப்பாளோ
கொஞ்சிடும்    குணத்தாளோ   --அவள்
கொடிய      மனத்தாளோ
நெஞ்சினில்     இருப்பாளோ   ---என்னை
நினைவினில்    வைப்பாளோ
கெஞ்சலை      ரசிப்பாளோ   ---பல்வேறு
கேள்விகள்      கேட்பாளோ






திங்கள், 22 ஜூலை, 2019

கப்பல் 7 2 2

கன்னியோ       விசம்     ---அவள்
கண்களோ    மோசம்
அன்புடன்    பேசுவாள்   ---ஆனால்
அளிப்பது     துரோகம்

என்மன      வானிலே    ---அன்று
இருந்தவள்     அவளே
புண்படச்    செய்தவள்    ----என்னை
புறம்  தள்ளிப்     போனாளே

கண்களால்      இழுத்தாள்   ---எனக்கு
கவலையைக்     கொடுத்தாள்
பெண்களில்      இவளே    ---பெரும்
பேதமை       கொண்டவள்

சிரித்தே     எந்தன்     ஜீவனைப்     பறித்தாள்    ---தினம்
அடுக்காய்     துயரம்    ஆயிரம்       கொடுத்தாள்
நரியின்     குணஙகொண்ட   நல்லவள்     இவளே   ----என்னை
நம்ப     வைத்தே      நட்டாற்றில்     விட்டாள்

இறைவா      என்னையே      காத்திட     வேண்டும்   ---இவளை
நினையாது      வாழும்      நிம்மதி      வேண்டும்
கரைதனைக்     காணாத      கப்பலும்      ஆனேன்   ---உந்தன்
காலடி      தொழுதேன்     காத்திட     வருவாய் 


கொல்லி மலை 7 2 1

கொல்லி   மலைத்     தேனே     ---உன்
கூடவே     நானும்      வருவேனே
தள்ளிப்      போவதும்    ஏனடி    ---உனக்கு
தாசனாய்      இருப்பேன்       நானடி

 பொன்       அருவி      யோரம்    ----எழில்
பொங்கும்      மாலை     நேரம்
கன்னி       மலரே       வா     வா    ---எனக்கு
உந்தன்    காதலை     அள்ளித்     தா     தா

சின்ன    இடையினை      வளைத்தாய்    ---நான்
சிறகு       ஒடிந்து       போனேன்
கன்னல்     மொழி     பேசினாய்    ---என்மேல்
காதல்       வலையினை     வீசினாய்

பயந்து       நெளிந்து      ஒளிந்தேன்     ---உன்
பாசப்        பார்வையினாலே    மலர்ந்தேன்
கயலினை    மிஞ்சிடும்     கண்ணழகி    ----நீ
நான்     கண்டவற்றிலே     பேரழகி

நினைத்து        நினைத்து     ரசிப்பேன்    ----உன்னை
நிலவில்      வைத்து       ருசிப்பேன்
அணைக்க     எனக்குப்     பிடிக்கும்    ----எல்லாம்
ஆண்டவன்     அருளால்     நடக்கும் 

புதுமலர் 7 2 0

வண்ணக்      கருங்குயில்      ---நல்ல 
வாசப்       புது   மலர் 
என்னை      அழைப்பதென்ன    --கிளியே 
இதற்குப்     பதில்     என்னவோ 

கொட்டும்      அருவியில்  ---தினம் 
குளிக்கும்     மீனினம் 
கொட்டும்     முழக்கமென்ன     ----கிளியே 
கொண்ட     மயக்கமென்ன 

வெட்ட    வெளியினில்    ---பல 
வண்ணப்    பறவைகள்    
வட்டம்      அடிப்பதென்ன    ---கிளியே 
அதன்   வாழ்வில்    முடிவு    என்ன 

நட்ட      நடுநிசியில்   ---எனோ 
நரிகள்    கூட்டமாய்   
திட்டம்     இடுவதென்ன    ---கிளியே 
தீமைகள்     நடப்பதென்ன 

இறைவன்    படைத்தவை    ---இவைகள் 
என்றும்      இங்கு     இருப்பதில்லை 
இதிலுள்ள     மாயம்     என்ன    ---கிளியே 
நீயே      இதற்கும்     பதில்    சொல்லுவாய் 

ஞாயிறு, 21 ஜூலை, 2019

கைதி 7 1 9

தங்கத்தைப்         போன்றவள்    ---நானோ
தனியாகப்        போனவன்
சிங்கமாய்      இருந்தவன்     ----இன்று
சிறுநரி      யானவன்

கண்களால்      கைதானேன்    ---இன்று
கண்ணீரில்     கரைகிறேன்
புண்பட்ட    மனதினால்     ----இங்கு
பொங்கியே     வழிகிறேன்

  என்ன  தவறு     செய்தேன்  நான்   --என்னை 
ஏனடி     நீ       வாட்டினாய்
அன்பினைக்     கேட்டதால்    ---என்னை
அடிமையாய்      நடத்தினாய்

துன்பத்தில்     உழன்றாலும்    ---உன்னிடம்
தூதுகள்        விடவில்லை
என்மனம்      காக்குமே     ---வந்த
இழிநிலை      போக்குமே     

பொறுமையாய்      இருந்திடு     ---நன்கு
புத்தியை       செலவிடு
அருமையான    வாழ்விலே    ---கண்ணே
என்னுடன்     அன்பாக     வாழ்ந்திடு 

பராசக்தி 7 1 8

மக்களைக்        காப்பவள்        மலையத்து    அரசி  ---தெய்வ   
மங்கை      மீனாட்சி யின்      மகத்துவம்     சாட்சி
எங்குமே      நிறைந்த      ஈஸ்வரி     சக்தி     ---நம்
ஈசனின்      இடப்பாகம்     இருப்பவள்     சக்தி

பொங்கிடும்      வைகைப்    புனலினில்      சக்தி    ---இந்த
பூதல        வாழ்விலும்      புகுந்திடும்     சக்தி
திங்களைப்       போலத்     திகழ்பவள்      சக்தி    ---வரும்
தீமைகள்      அனைத்தையும்     அழிப்பவன்     சக்தி

நம்பிடும்      அடியவர்       நலம் பெறல்      சக்தி   ---இந்த
நானிலம்      முழுவதற்கும்    ஒரே     நாயகி    சக்தி
கும்பிடும்    அன்பர்கள்     குணம்   பெறல்    சக்தி     ---நல்ல
குன்றின்     விளக்காய்      ஒளிர்பவள்    சக்தி

வானவர்     படைக்கு       வரமருள      சக்தி    ---நம்
வள்ளி      வேலனுக்கு     வேல்  தரும்     சக்தி
ஆணவம்     அழித்துமே     ஆள்பவள்    சக்தி    ---நம்
அம்மை அப்பனுக்கு      ஆதாரம்     சிவசக்தி

ஆனை   முகனுக்கு       அம்மையே       சக்தி   ---நம்
அன்புக்    கண்ணனுக்கு    தங்கையே     சக்தி 
மோனைப்     பொருளாம்     மூத்தவள்    சக்தி    ---நம்
மோக      இருளினைப்     போக்கிடும்      சக்தி 

முல்லை க் கொடி 7 1 7

கனவில்       வந்தவன்     ---என்னை
கலவு        செய்தவன்
நினைவு     வந்ததும்     ---எனோ
நில்லாது      ஓடினான்

அள்ளி       யெடுத்தவன்     ---அன்று
ஆழ்ந்து      ருசித்தவன்
தள்ளிப்     போனதேன்     ---என்னை
தவிக்க         விட்டதேன்

புள்ளி     மானெனப்     புகழ்ந்து     சொன்னவன்    ---தன்
 சொல்லை     மறந்துமே    தூரம்     போனதேன்
துள்ளித்     திரிந்தவள்    துவண்டு    போகிறேன்   ---பலர்
எள்ளி         சிரித்திட      இன்னும்     வாழ்கிறேன்

கால      காலங்கள்      என்காதல்     வாழுமோ    ---அந்த
கள்ளன்       மனதிலும்     கருணை     பிறக்குமோ
வேளை      வந்திடில்     நல்ல  விடிவைக்    காணலாம்    ---என்னை
வீழ்த்தி      சென்றவன்    தானே     விரும்பிச்   சேரலாம்

பெண்ணாய்ப்      பிறந்தால்      பிழைகள்      இல்லையே    ---எனது
காதல்      இப்படி      எனோ     கவலை       ஆனது 
முன்னே      போனவன்    மோகம்     கொள்ளுவான்    ---இந்த
முல்லைக்      கொடியினில்   வந்து     படர்ந்து    கொள்ளுவான் 

மோக சிலை 7 1 6

கண்    எதிரே       வந்தாள்     ---என்னை
காதலில்      வென்றாள்
பொன்   மாலைப்    பொழுதில்   ---எனக்கோ
அவள்      புதுமையாய்த்     தெரிந்தாள்

அங்கம்      தங்கமோ    ----அதில்
அழகுகள்      கொஞ்சுமோ
சிங்கம்       போன்றவள்   ---எனக்கு
தேனாய்      இனித்தவள்

முல்லை      மலரவன்    ---ஒரு
மோக      சிலையவள்
பிள்ளை    குணத்தவள்     ---எனக்கு
பித்தம்      தந்தவள்

கண்களில்     பட்டதால்    ---நானும்
கவிஞன்       ஆகினேன்
புண்பட்ட     நெஞ்சத்தால்   ---இங்கு
புலம்பித       தவிக்கிறேன்

கருணை      காட்டவே    ---அவள்
கால்களைத்     தொடுகிறேன்
அருகில்       வந்தாலோ    ---நான்
அணைத்துக்   கொள்ளுவேன்

இன்பம்         இன்பமே      ---இனி
ஏதெனக்கு     ஜென்மமே
அன்றில்      பாவைகள்    போல   ---நாங்கள்
ஆண்டுகள்     அதிகம்       வாழ்வோம்

சனி, 20 ஜூலை, 2019

சரணம் 7 1 5

அன்பினைத்       தருவதில்         அண்ணல்    ---நம் 
அவலத்தை      தீர்ப்பதில்      மன்னன் 
துன்பத்தை     தோளினில்    சுமப்பான்     ----வழியில் 
தோன்றாத       துணையாக     வருவான் 

எங்கும்        நிறைந்துமே       இருப்பான்    ----உழைக்கும் 
ஏழை கள்     மனங்களில்      வசிப்பான் 
தங்கத்தைப்    போன்றிட்ட    புனிதன்    ---பொருளை 
தந்துமே       மகிழ்வதில்      வள்ளல்  

கருணையை     மழையெனப்     பொழிவான்   ---ஏழை 
கண்களில்      நம்பிக்கை       தருவான் 
அரிதிலும்       அரிதான      அழகன்     ----நமக்கு 
அவனருள்       கிடைத்திடில்     சுகமே 

கண்ணனை      எண்ணியே      தொழுவோம்    ---அவன் 
காலடியில்       சரணமாய்      விழுவோம் 
துன்பத்தை      துடைத்துமே      எழுவோம்   ---காட்டும் 
தூய       வழி தன்னில்       நடப்போம் 

கண்ணனின்     கருணைதான்      பெரிது   ----அவன் 
காக்கின்ற       உலகமோ      சிறிது 
எண்ணத்தில்     அவனையே   நினைப்போம்   ----அவனது 
இணையடி         நிழலில்     மகிழ்வோம்     

வியாழன், 18 ஜூலை, 2019

தீங்கனி 7 1 4

கண்ணான      கண்மணி     ---என்
கண்களின்      கருமணி
உன்னாசை     போகுமா   ---எனக்கு
உயிரானாய்     நீயம்மா

என்னவோ     சொல்கிறேன்   ---நான்
எங்கேயோ     போகிறேன்
நின் முகம்     காணவே    ---காதல்
நெஞ்சோடு    அலைகிறேன்

கண்ணாலே     காணவும்     காதலும்     வந்தது   ---நாம்
கல்யாணம்     செய்திட    காலமும்    சேர்ந்தது
சொன்னாலே  போதுமே   சொர்க்கமும்   திறக்கும்   ---நாம்
சுகமாய்      வாழ்ந்திட     நீயும்    சொல்லடி      சம்மதம்

ஊரெல்லாம்    பந்தல்      உன்னோடு     திருமணம்   ---நான்
ஒய்யாரத்    தேரிலே      பெண்ணோடு    ஊர்வலம்
சீரெல்லாம்     செய்து     சிறப்பினைக்     காட்டுவேன்    ---என்
சிங்காரி      உன்னுடன்     தேன் நிலவு     போவேன்

மாடி வீட்டினில்    என் மனைவியுடன்      உல்லாசம்   ---என்
மங்கை       உன்மடியினில்     மகிழ்வோடு   சல்லாபம்
தேடி உன்னை    மணக்க     தெய்வம்    அருளியது   ---நல்ல
தீங்கனிச்     சாறு நீ     திரும்பித்    தான்     பாரேண்டி

கண்ட       கனவிதுவும்       கைவரக்    கூடுமா  --இந்த
பெண்ணை     மணம்    புரிந்தால்    பிழையாகப்     போகுமோ
ஆண்டு     சுகித்திருக்க     அன்னை    அருள்     வேண்டும்    --அவளை
அள்ளி யே     அணைத்திருக்க    எனக்கு    அதிர்ஷ்டமும்     வேண்டும் 

மாயம் 7 1 3

கதிர்கள்       எழுந்தன          துணையாக   --மனம்
களிப்பில்       ஆழ்ந்தது      நிஜமாக
புதிரும்       புரிந்தது     நலமாக    --காதல்
பொங்கி    மலர்ந்தது     இனிதாக

தலைவன்    என்னுடன்     துணையானான்   ---அவன்
தழுவி     அணைத்து     சுகம்     தந்தான்
கலைகள்    யாவையும்    கற்க   வைத்தான்  ---என்னை
காற்றினில்    ஏற்றி     சுற்ற    வைத்தான்

இப்படி      இருந்தோம்      சில காலம்    ---இனி
எனக்கு     இதுதான்    நல்ல   எதிர்காலம்
செப்படி      வித்தைகள்     அந்நாளில்    ---அவன்
சீதனம்      தந்தது     என்தோளில்

உருகிக்       கிடந்தேன்     உறவாடி   ---உலகில்
அவனே       எனக்குச்    சரிஜோடி
மருவிடும்    போதினிலே     மயக்கம்     வரும்   ---அவனை
மனதில்      நினைத்தால்     துணிச்சல்  தரும்

பொன்னுடலில்      இட்டான்     பூக்கோலம்    ---அவனை
புருஷனாய்       அடைந்தது    பொற்காலம்
கன்றிய      என்னுடலெங்கும்     காயங்களே    ---அன்று
கள்வன்      செய்து   வைத்த    மாயங்களே  - 

புதன், 17 ஜூலை, 2019

வெள்ளி நிலா 7 1 2

வெள்ளி நிலாவே    வெள்ளி நிலாவே    வாராயோ   --அவர்
வரும் வேளை     என்பதை     நீயும்    அறிவாயா
துள்ளி      திரியும்    மீனாய்த்     இருந்தேன்   அன்று   ---எனோ
தூங்காமல்     அவரால்   துன்பம்     கொண்டேன்    இன்று

அள்ளி      அள்ளியே     என்னை      எடுப்பார்    ---எனக்கு
அன்பு      முத்தங்கள்    ஆயிரமாவது   நிறையவே    கொடுப்பார்
பள்ளிப்     பாடங்கள்     பலவகை     கற்றேன்   --என்னை
பகலிலும்    இரவிலும்     பார்த்து    நன்றாய்  ரசிப்பார்

சொல்லிக்     கொடுத்தது    சுகமாய்த்   தெரிந்தது   எனக்கு   ---அது
சொர்க்கத்தை  அளிக்கும்     வழியென்பது  கணக்கு
புள்ளி    வைத்திட     புதையலைக்    கண்டேன்  அன்று   ---நல்ல
பொங்கித்    ததும்பும்     இளமை மேனி  ஜொலிப்பது  இன்று    புரியாதா

திருநாள்    வருவது   தினமும்     என்பது    புரியுமா --அடி
தேனும்      பாலுமாய்     ஆனோம்   நாங்கள்  தெரியாதா
வருவார்  என்றே     வழிமேல்    பழியாய்க்   கிடப்பேன்   ---அவர்
வந்ததும்     வட்டியும்    முதலுமாய்க்    கொடுப்பேன்

காதல்     என்பது      கண்களில்     மலர்கின்ற     ஜாலம்  ---நீயும்
கண்டு கொண்டால்   வருமே    உனக்குமிந்தக்   கோலம் 
ஆதலால்     காதலை    உண்மை    அன்புடன்    வளர்ப்பாய்   --உன்
அன்பிலே      அவரை     உன்னகத்திலே    வைத்துக்     காப்பாய் 

ஆனந்தம் 7 1 1

காதலி       நீதான்       கண்மணி   ---என்னை
கவனமாய்ப்     பாத்துக்க     அம்மணி
மோதல்         நமக்குள்   வேண்டாமே   ---என்
மோகத்தை    தூண்டுதல்    நீதானே
குறும்பு     பேச்சுக்கள்    கூடாது  --உன்
கோணங்கி    சேட்டைகள்    ஆகாது
கரும்பாகப்    பேசினால்   உதைப்பேன்  ---உன்னை
கால்களில்    போட்டுநான்   மிதிப்பேன்
அன்பாகப்     பேசினால்     கோபமா   --என்னை
அடிப்பேன்   என்பதும்    நியாயமா
பண்பினைக்    காப்பவள்    பெண்ணல்லவா   --உன்னை
பழகிடத்         துடிப்பது        நானல்லவா
வேலை      வெட்டிக    ஏதுமிலே   ---உலக
விவரம்       உனக்குப்     புரியவில்லே
கோழையை     மணந்திட    யார் வருவார்   --உன்
குறுக்குப்     புத்திக்கு      யார்    மசிவார்
பகலும்     இரவுமாய்     உழைத்திடுவேன்   ---என்
பத்தினி      உன்னையும்   காத்திடுவேன்
புகழ்ந்து    உன்வாய்     பேசாதா     --என்னையும்
புருஷனாய்       ஏத்துக்க     கூடாதா
போனது      போகட்டும்     விட்டு விடு   ---உன்னை
புரிந்து       கொண்டேன்     கவலை விடு
ஆனந்தமாக      மணம்     முடிப்போம்   ---நாம
அளவுடன்     குழந்தைக    பெத்துக்குவோம்

அம்பிகை 7 1 0

கண்ணால்        எனோ       வெட்டினாள்    ---என்னை
காதல்      வலையினில்     மாட்டினாள்
பொன்னால்     செய்திட்ட    உருவமா   ---அல்லது
பொங்கும்     இளமையின்    கர்வமா

வெள்ளையாய்த்      தெரிவது      பற்களா   ---இல்லை
வெண்   முத்துக்கள்    கோர்த்த   மலர்களா
கொள்ளை    அடிப்பதவள்      கூந்தலா   ---அவள்
கொடியிடை    மதன்    விடும்    பாணமா

சிரித்து      சிரித்தென்னை     மயக்கினாள்   ---மனம்
சீதள        நிலவாய்      ஆக்கினாள்
விரிந்த       கண்களோ      மூடலை  --எனக்கு
வேலைகள்      எதுவும்     ஓடலை

ஏன்தான்      தினமும்  கொல்கிறாள்  ---என்
இதயக்       கூட்டினில்   வாழ்கிறாள்
தேனும்       பாலுமாய்ச்    சேருமோ    ---இல்லை
தேம்பி      அழும்நிலை     யாகுமா

நம்பியே      நானும்      வாழ்கிறேன்   ---என்
நாயகி       காலடி      வீழ்கிறேன்
அம்பிகை     அருள்தர     வருவாளா   ---என்னை
அணைத்து     ஆறுதல்     தருவாளா  

வெள்ளை மனம் 7 0 9

கருவாப்        பையன்       சிரிக்கிறான்    ---அவனுக்கு
காதுகள்     சரியாய்      கேளாது
ஒருவாய்      சோத்துக்காக      தினமும்    ---அவன்
ஊரினைச்    சுற்றித்      திரிகிறான்

ஆல       மரத்தின்      நிழலிலே     ---அதன்
அடியில்    அமைந்த    பொந்தினிலே
கால்களை    நீட்டியே   தூங்குவான்  இரவில்
கர்ஜனை     அதிகமாய்ப்     போடுவான்

கொடுத்த      வேலைகள்    செய்குவான்   ---பிறர்
கொடுப்பதை     வாங்கிக்     கொள்ளுவான்
படித்தது       எதுவும்       கிடையாது    ---அவனுக்கோ
பந்தமும்      பாசமும்      புரியாது
திருவிழா    என்றால்    கொண்டாட்டம்   --பின்பு
தினமும்     சோத்துக்கு    திண்டாட்டம்
பலநாள்     வேலைகள்    இருக்காது  ---வரும்
பசியும்    தூக்கமும்      அவன்பாடு
எவ ள்     தான்       இவனைப்     பெற்றாளோ   ---எனோ
தெருவினில்     போட்டுப்     போனாளோ
உலைவாய்     சோத்துக்கான    கொடுமையிலே   ---அன்று
ஓடியே       எங்கயோ      போனா  ளோ
ஈரெட்டான     இளம்      பருவம்    ---அவனுக்கு
என்றைக்கும்     இல்லையே     தலைக் கருவம்
கார்வெட்கும்   மிகவும்    நல்ல     கரிய  நிறம்    ---அவனிடம்
கள்ளம்       அறிந்திடா     வெள்ளை    மனம்

செவ்வாய், 16 ஜூலை, 2019

இயற்கை 7 0 8

நீல       வான       மேடையில்    ---நன்கு
நீந்திச்        செல்லும்     வெண்ணிலா
கோல        வண்ணப்    பூச்சியே   ---உனக்கு
கொள்ளை    வண்ணம்    கொடுத்ததார் ?
 
ஆழமான      பெருங்       கடலிலே    ---தினம்
அழகாய்       நீந்தும்     மீனினம்
ஓலம்       போடும்      அலைகளே    ---உமக்கு
ஒலிக்க        கற்றுக்     கொடுத்ததார் ?

கரையைத்       தொட்டுத்      திரும்பிடும்   ---உனக்கு
கரிக்கும்      உப்பினைக்     கொடுத்ததார்  ?
ஒதுங்கி       நிற்கும்      நாரைகாள்      ---உமக்கும்
உயர்ந்த      கால்கள்     கொடுத்ததார்  ?

ஆழ்கடலின்     ரொம்ப      ஆழத்தில்   ---நல்ல
அழகு        முத்துக்கள்       கிடைக்குமே
சூழ்ந்து      பலரும்     எடுக்கலாம்    ---நாமும்
சுகமாய்     செல்வங்கள்    சேர்க்கலாம்

இறைவன்      படைக்கும்     பொருள்களில்   ---நமக்கு
எல்லா       வளங்களும்     கிடைக்குமே
இதனை      உணர்ந்து     கொள்ளுவோம்    ---அந்த
இயற்கையை       நினைத்து     வணங்குவோம்

திங்கள், 15 ஜூலை, 2019

பிள்ளை 7 0 7

ஐயிரண்டு       திங்களில்     ---என்னை
அன்பாக      சுமந்தவள்
மெய்யினைக்    காத்தவள்   ---உலகில்
மேம்பட      வைத்தவள்
சீராட்டிப்   பாராட்டினாள்   ---நல்ல
சிந்தனை     ஊட்டினாள்
பாரோர்      மதித்திட  ---நல்ல
பண்புகள்    தந்தவள்
பாசத்தைப்   பொழிந்தவள்   ---நீதி
பக்கத்தில்    இருந்தவள்
வேஷங்கள்     தெரியாது   ---அவள்
விலையில்லா   தொரு மாது
உள்ளத்தால்   உயர்ந்தவள்   --அவள்
உழைப்பதில்    சிறந்தவள்
கள்ளத்தை       மறந்தவள்   ---என்
கண்ணீரில்     வாழ்பவள்
எந்நாளும்     தீருமோ   ---அவளிடம்
எனக்குள்ள   பிறவி கடன்
பொன்னான   இறைவனே    ---நீயும்
இந்த   பிள்ளையைத் தேற்றுவீர்
கண்ணீரில்     வாழ்கிறேன்   ---தாயினை
எந்தக்    காலமும்   நினைக்கிறேன்
விண்ணில்  வாழும்    என்தாயே  ---மீண்டும்
மண்ணில்    விரைவாக    வந்திடு



கண்ணீர் 7 0 6

என்னாசைக்       காதலன்   ---எனக்கு
இன்பத்தை     அளித்தவன்
பொன்னாளை   மறந்ததேன்    ---என்னை
புண்ணாக்கி     ரசிப்பதேன்

கண்ணோடு    கலந்தவன்   ---என்
காதலில்      வாழ்ந்தவன்
தன்னாசை    மறந்ததேன்    ---என்னை
தடுமாற      வைப்பதேன் 

இரவென்றால்     அவனன்றோ   ---எனக்கு
இருந்திட்ட      உறவன்றோ
மறந்தின்று     போனதேன்   ---என்
மையலைத்     துறந்ததேன்

அணைத்தன்று      சிரித்தவன்   ----என்னை
அள்ளியே      சுகித்தவன்
நினைப்பினை     மறந்ததேன்    ---இன்று
நெடுதூரம்      போனதேன்
காதலே     பொய்யென்பேன்   ---அது
கண்ணீரைத்    தருமென்பேன்
ஆதலின்     இளையோரே   --காதல்
அவலத்தில்     சிக்காதீர்
பெற்றோரைப்    பாருங்கள்   ---அவரோடு
பெருமையாய்    வாழுங்கள்
கற்றதை     நினையுங்கள்   ---ஏழை
கண்ணீரைத்      துடையுங்கள்


லீலை 7 0 5

நில்லாமல்     நடந்தவள்    ---என்
நெஞ்சத்தில்    கிடந்தவள்
சொல்லாமல்    போகிறாள்   ---தன
சோகத்தை    மறைக்கிறாள்

வெந்நீரில்      வளர்ந்தவள்    ---என்
விழி நீரில்    மலர்ந்தவள்
பன்னீரை     வெறுக்கிறாள்   ---தனது
பாசத்தை     துறக்கிறாள்

வண்டாடும்     சோலையில்    ---நான்
வந்தாடும்      வேளையில்
பெண்டாக     நினைத்தவள்   ---எனோ
பேசாமல்      போகிறாள்
 அன்பாலே    அனைத்தவள்  --என்   
ஆசையை    நினைத்தவள் 
துன்பத்தை     தருகிறாள்    ---எதற்கோ
தூரமாய்ப்       போகிறாள்

எல்லாமே        மாயையா   ---இதுவும்
இறைவனின்    லீலையா
நல்லோரே      சொல்லுவீர்   ---எனக்கு
நல் வாழ்த்து     கூறுவீர் 

இரவு 7 0 4

வஞ்சிரத்த       வறுத்து     வச்சேன்    ---நல்ல
வாளை      மீனைக்    கொளம்பு    வச்சேன்
பஞ்சணைக்கு     பாயைப்    போட்டேன்   ---ரெண்டு
பால்  சொம்பு     நிறைச்சு    வச்சேன்

பொழுது    விடிஞ்சு    போன   மச்சான்    வல்லியே   ---எம்
புருஷன்     கூட     இது     எனக்கு    தொல்லையே
அழுத    கண்கள்    சிரிக்க     வேணும்    ---அவர்
ஆசையுடன்     என்னைக்    கொஞ்ச   வேணும்

நிலவு     வந்து     ரொம்ப     நேரமாச்சு   ---அந்த
நெனப்பும்     எனக்கும்     கூடிப்   போச்சு
பொழப்புகளை    பாக்க    வேணும்    மச்சானே   ---நெனைச்சு
புலம்ப     என்னையும்     வச்சுட்டியே   அத்தானே

சக்களத்தி    எவளும்    வளச்சிப்   புட்டாளா   ---உன்னிடம்
சரசலீலைக      எதுவும்    ஆடிப்  புட்டாளா
அக்கிரமா     தோணலியா    என்     அத்தானே   ---எங்க
அப்பன்     வூட்டுக்கு     போயிடுவேன்    தன்னாலே

வந்ததும்      மாமன்    சொன்ன     சேதி    ---எங்க
வயலைப்     பாக்கப்    போன     நீதி
என்ற      கோபம்   இறங்கிப்     போச்சு   ---இனி
இரவு      முழுக்க    இனிமை   ஆச்சு 

ஞாயிறு, 14 ஜூலை, 2019

கணவன் 7 0 3

அன்பால்       வளைத்தவன்   ---என்னை
அள்ளி யெடுத்து   அணைத்தான்
பெண்ணாய்    உடல்  சிலிர்த்தேன்   ---என்னை
பேச    விடாது    அவன்    தடுத்தான்

இதழ்களைக்    கவ்வியே    எடுத்தான்    ---எனக்கு
இரண்டு     மூன்றும்    கொடுத்தான்
பழத்தினில்    சுவையினை  நிறைத்தான்  ---என்
பருவப்      பசியினை     தணித்தான்

கண்கள்     மயங்குது      மெல்ல   ---பிறர்
காதினுள்     எப்படி     நான்     சொல்ல
பண்ணோடு   தாளத்தை    இணைத்தான்   ---என்னை
பக்கம்     பக்கமாய்ப்     படித்தான்

உள்ளத்தில்      பொங்குது      ஆனந்தம்   ---இதனை
உலகத்தில்      காணலை    வேறெங்கும்
பள்ளத்தை       மேடாக்கி    ரசித்தான்   ---என்னை
பார்த்து       பார்த்துமே     ருசித்தான்

பருவக்      கதைகள்     படித்தோம்    ---மீதியை
பலநாள்     இரவிலும்     தொடர்வோம்
அறிந்திடா     புது சுகம்     கண்டேன்    ---அவனையே
கணவனாய்     பின்னாளில்    மணந்தேன்    

கிளி 7 0 2

கண்டங்      கறுத்த      கிளி     ----என்
காதலுக்கு     ஏற்ற     கிளி
மெல்ல      நடை     போட்டாளடி     ---அவள்
மேனி      எங்கும்     தங்கம்      தானடி
  கொஞ்சும்     முக  அழகில்     ---அவள்
கொள்ளை      இன்பம்     தந்தாளாடி
தஞ்சமென்று      வந்தேனடி     ---சகியே
சரசக்       கதை     சொன்னாளடி
 வில்லை      வளைத்து     நிற்பாள்    ---என்றும்
வெற்றி     மழை     பொழிந்திடுவாள்
எள்ளி       நகை     புரிவாளடி   ---கிளியே
எனக்கு     நல்ல     ஜோடி     தானடி

மெல்ல     இடை     வளைப்பாள்    ---தினம்
மிகுந்த      இன்பம்    தந்திடுவாள்
கள்ளி      காம     வல்லியேயடி     ---கிளியே
காதல்     சொல்லும்    பள்ளியேயடி

மறந்து     விடவும்     முடியாமல்   ---அவ ளை
மணக்க      வழி     தெரியாமல்
திரிந்து      அலைந்து     போனேனடி   ---கிளியே
அவள்     தேடி     வர    வழியைச்    சொல்லடி
--- 

இளமயில் 7 0 1

சின்னப்     புள்ளெ     சிவப்பாயி    ---நீயும்
சீக்கிரமா      வா     தாயி
கன்ன க்   குழி     கதுப்பாலே   ---என்னை
கட்டிப்     போட    வேண்டாமடி

கண்கள்      உறக்கம்     இல்லையடி    ---இங்கே
கால      நேரம்     தெரியல்லேடி
பெண்னே    உன்னை       நினைச்சு   ---நான்
புலம் பும்      கதை     கேட்கலேயா

ஆழவே     உழுது     வைச்சேன்    ---நல்ல
அழகு நெல்     நாத்து     விட்டேன்
வேளை      முறை     தவறாமே    ---நான்
வேண      மட்டும்     நீர்  இறைச்சேன்

நாத்து      நல்லாவே    வளர்ந்ததடி    ---நமக்கு
நல்ல      பலனும்     கிடைக்குமடி
விளைஞ்ச     நெல்லைக்   காசாக்கி   ---உனக்கு
வேணுமட்டும்      பரிசு     தாரேன்

சுங்கடியில்      நல்ல     சேலை     --நீ
சொக்கிப்      போக     காசுமாலை
பந்து  சனம்    கூட்டி    வைச்சு    ---நான்
பரிசம்       போட      நாளை     வாறேன்

கண்ணாட்டி    உன்னையே    நான்   கல்யாணம்    செய்திடுவேன் ---எனக்கு
புள்ளைக     ரெண்டு     பெத்து    மட்டும்   கொடுத்து  விடு
எந்நாளும்     சொகமாக     இருப்போம்      இளமயிலே   ---நம்ம
ஐயனாரு       துணையாலே    அம்புட்டும்     நடக்குமடி 











நலம் 7 0 0

  வேலோடு        வருவாயா        வேல்  அய்யா    ---வந்த 
  வினை தீர்க்க     வருவாயா     சொல்லையா 
பாலோடு       பழம் யாவும்      உனக்காகவே   ---சூழும் 
பழி    தீர்க்க     வர  வேண்டும்    எனக்காகவே 

குற வள்ளி    தினை  காக்க      வனம்     ஏகினாள்   ---நீ 
குன்றாத     காதல்   கொண்டு  அவளின்  துணையாகினாய் 
மறவாத     உன்னடியார்கள்     மனம்      வாழ்கிறாய்    ---புள்ளி 
மயிலேறி    வலம்    வந்து     இந்த   நிலம்    ஆள்கிறாய் 

தமிழாகி    உலவுகின்ற    எங்கள்     சரவணனே   ---பார்வதி 
தாயின்     திருக்  கரத்தாலே    வேல்    வாங்கினாய் 
அமிழ்தமாம்     உந்தன்   திருமேனி    அழகானது    ---உன் 
அடியார்கள்    தம்  வாழ்வு    என்றும்   நலமானது 

பகை  வெல்ல    திருக் குமரா    நீயும்    படை தாங்கினாய்  ---வரும் 
பகை வர்கள்     மருண்டோட     கணை    ஏந்தினாய் 
நகை சிந்தும்    உன் எழில்   முகம்    நலம்    சேர்க்குமே   ---தெய்வ 
நாயகா       உன்குரலோசை  எவர்க்கும்    பலம்    நல்குமே 

முருகா      என்றோத     விதி    மாறுமே    ---வரும் 
மோகங்கள்    நம்மை    விட்டுப்    பறந்தோடுமே 
ஒருக்காலும்     மறவாதீர்     மயில் வேலனை   ---அவனை 
உளமாற      துதித்தாலே    பொருள் வளம்     சூழுமே 

6 9 9

கள்ளூறும்     காவியம்    ---அவன்
கண்ணீரில்     ஓவியம்
சொல்லாமல்     கிடந்தவன்   ---வந்த
சொர்க்கத்தை   மறந்தவன்

பெண்ணோடு    தொடர்ந்தவன்   ---தனது
பிரியத்தை      மறைத்தவன்
கண்ணோடு     கலந்தவன்   ---எனோ
கண்ணியம்   துறந்தவன்

இரவெல்லாம்     விழித்தவன்    ---பெண்ணால்
ஏங்கியே      தவித்தவன்
உறவுக்கு     அலைந்தவன்   ---அவளை
உயிராக      நினைத்தவன்

துன்பத்தை      அணைத்தவன்     ---நாளும்
துயரினில்     மிதப்பவன்
கண்பட்டு      வீழ்ந்தவன்   ---பெண்
காதலில்      துடிப்பவன்

எந்நாள்       தீருமோ    ---இவன்
எதிர் காலம்     தேறுமோ
பொன்மனச்     செல்வியே    --நீ தான்
புனர்வாழ்வு     நல்குவாய்  

பரிசு 6 9 8

பனி  கொட்டும்      இரவில்    ---நல்ல
பால்     போன்ற    நிலவில்
தனியாக     ஒருவள்    தளிராக   வந்தாள்   --நான்
பணிவோடு     அவள் பக்கம்   சென்றேன்

கண்களைப்   பறித்திடும்    கட்டான   உருவம்   ---அவள்
கண்பட்டால்   இங்கே    கற்களும்     கரையும்
பெண்களில்    அவளே    பேரெழில்    என்பேன்    ---அவள்
பின்னாலே     உலகம்     தன்னாலே     சுழலும்

நீளமான     கூந்தல்    நிலத்தினைக்    கூட்டும்    --அவள்
நெஞ்சத்து     அழகோ   காதல்   நினைவையே    மீட்டும்
அலைபாயும்    கண்கள்    அனைவரை     வீழ்த்தும்   ---அவள்
அசைந்தாடி    வந்தாலோ     ஆண்களையே    வாட்டும்

இடையோடு      சடையும்    எங்கேயோ     புரளும்   --அவள்
இளவாழைக்    கால்கள்      இதயத்தைப்    பிளக்கும்
தடையேதும்    இல்லா    தண்பொழில்     அருவி   ---அவளை
தழுவிட     நினைத்தார்க்கு      தாங்குமோ     ஆவி

அழகெல்லாம்      சேர்த்து      ஆண்டவன்      படைத்தான்  ---அவள்
அனுமதி     கிடைத்தால்     ஆனந்தம்      கொள்ளை
பழமாக     வந்தவள்      என்   பசி    தீர்க்க  வேண்டும்    --நான்
படும் பாடு      கண்டு     அவள்  எனக்குப்    பரிசாக    வேண்டும்  

கடவுள் 6 9 7

கலை     கொஞ்சும்     நிலவில்    ---கடும்
பனி      மிஞ்சும்      இரவில் 
விளையாட     வந்த     அழகே   ---நீ
விழி     மூடித்    தூங்குதல்    சரியா

நினைவெல்லாம்     நீயே   ---எந்தன்
நெஞ்சத்தில்     சுமையே
கனவென்று    சொல்வாயா   கண்ணே  ---என்
கண்ணீரும்    விடையாகும்    பெண்ணே

எந்நாளும்     நினைப்பேன்   ---என்
இமை    மூடி    உறங்கேன்
கண்ணே   உன்னை  என்று   காண்பேன்   --என்
கால்    போன    வழி தனிலே    நடப்பேன்

ஒன்றாக      வாழ்ந்தோம்    ---ஒரு
உயிர்க்    கூட்டில்    மிதந்தோம்
நன்றியினை    மறப்பது   சரியா   ---இளம்
நங்கையே   உனக்கிது   முறையா
வயதான      பொழுதும்   ---என்
வல்லமை    நிறையும்
புயலாக    வருவேனே    கண்ணே   --உன்னை
பூபோலக்     கொய்வேனே    பெண்ணே
உடலோடு    உயிர்போல    ஒன்றாகி    நின்றோம்   -நம்
உறவால்    உணர்வுகள்    உச்சத்தை     எட்டும்
கடலோடு    அலைபோல    கலந்தே    கிடப்போம்   ---உலகில்
காதலைச்    சொல்லி      கடவுளை    நினைப்போம் 

ஆயிரம் காலம் 696

 இறைவன்     வாழும்     ஆலயம்    ---நம்
இளைஞர்       நெஞ்சில்    அமைக்கலாம்
உறவில்     இன்பம்     காணலாம்     ---என்றும்
உண்மை     ஒன்றே    வெல்லலாம்
வியர்வை     சிந்து     வாழ்விலே    ---அது
வெற்றி     தருமே     முடிவிலே
சோர்வு     நீக்கி     உழைத்திடு    ---அது
சுகத்தை      அளிக்கும்   அறிந்திடு
எதையும்     எண்ணித்    துணிந்திடு  ---உன்
இதயம்      அன்பில்     நிறைத்திடு
புதையல்      நமக்குத்     தேவையா   ---வெல்லும்
புன்னகை      ஒன்றே    போதுமே
அள்ளிக்      கொடுத்து    வாழ்ந்தவர்    ---உலகில்
ஆயிரம்      காலங்கள்     வாழ்கிறார்
பள்ளிப்       பாடங்கள்     படித்திடு    ---வாழ்வில்
பார்த்து     தெளிந்து      நடந்திடு
ஒன்றாய்     என்றும்     கூடிடு    ---நாட்டின்
உயர்வை     எண்ணி     வாழ்ந்திடு
நன்றி     சொல்லிப்     பாடிடு    ---இங்கு
நல்ல       வாழ்வினை     நாடிடு
உலகம்     நமது      சொந்தமே    ---அதன்
உயிர்கள்     நமக்கு   பந்தமே
கலகம்     மறந்து      வாழுவோம்   ---அந்த
கண்ணன்      அருளை    நாடுவோம் 

வியாழன், 11 ஜூலை, 2019

காமன் 695

நெஞ்சில்        உள்ளவர்    ---எனோ
நில்லா து     எங்கோ     சென்றாரே
கொஞ்சும்    பூங்கிளி     இன்றே    ---நீ
கூட்டி      வாயேன்     என்னிடம்

அன்பைத்    தந்தவர்    அலட்சியம்   செய்ததேன்    ---என்
கண்ணில்     கலந்தவர்    காத   தூரம்    போனதேன்
உன்னையன்றி    இதனை     உரைப்பது   யாரிடம்   ---இங்கே
பெண்மை    தவிக்குதே     பேதமை     சூழ்ந்ததே

சிரிக்கும்      அழகிலே   என்சித்தம்     இழந்தேனே   ---கண்
சிந்திடும்      முத்துக்கள்  அவர்     சிந்தையை    உருக்காதோ
எரித்திடும்     நிலவே    எனோ  என்னைக்     கொல்கிறாய்   ---மீண்டும்
என்னவர்      வருவாரென    ஏங்கி     நிற்றல்      சரிதானா

இரவா       பகலா      எனக்கு      ஒன்றும்      புரியல்லயே   ---என்
இருவிழிகள்      மூடி      எத்தனையோ       நாளாச்சு
உறவு     கொண்ட      உத்தமன்  இங்கு     ஓடி    வரக்    கூடாதா    ---என்
உள்ளம்    நொந்து      வாடுதல்     உலகில்     என்ன    நீதியோ

சென்றவர்       என்னிடம்    திரும்பிட        வேண்டும்    ---இந்த
சேயிழை     கண்களில்     தேன்மழை     வேண்டும்
கன்றிய       என்னுடல்      களிப்புற     வேண்டும்    ---அந்த
காமனின்     அருளால்   எனது      காதல்    வெல்ல    வேண்டும் 

சிநேகிதி 694

நீரோடும்          பாதையில்  ---என்னை
நெஞ்சார     அனைத்தவள்
சீராட்ட      வருவாளா    ---நல்ல
சிநேகிதி      ஆவாளா

கண்டதும்     மயங்கினேன்    --எனோ
காதலில்     மூழ்கினேன்
திண்டாட்டம்      ஆகுமா    ---இல்லை
தேனாக      இனிக்குமா   

வாய் விட்டுச்    சிரிக்கிறாள்    ---என்னை
வாவென்று      அழைக்கிறாள்
பாய்போட்டு      படுக்கவா    ---இல்லை
பயந்தோடிப்      போகவா

என்னதான்       செய்வது   ---இதனை
யாரிடம்        சொல்வது
கன்னியின்      பார்வையில்   ---நான்
கல்லாக      நிற்கிறேன்

நாட்டோரே    கேளுங்கள்    ---எனக்கு
நல்லவழி      கூறுங்கள்
வீட்டிற்கு      அழைக்கிறேன்   ---பெரிய
விருந்தொன்றும்      தருகிறேன்

துணையாக       அவள்  வேண்டுமே   ----நீங்கள்
தூதாக        செல்லுங்கள்
இணையாக       வாழுவோம்    ---காதல்
இன்பத்தில்      மூழ்குவோம்





நம்பிக்கை 693

கண்ணாலே   மாட்டினாள்    ---எனக்கு
காதலைக்      காட்டினாள்
சொன்னாலும்    விளங்கலே   ---இது
சொர்க்கமா     புரியலே

அன்பான     மனதிலே    --புது
ஆசைகள்     வந்ததே   
நன்றாக     நடக்குமோ    ---இல்லை
நம்பிக்கை    தோற்குமோ

பூவாக     இருந்ததை    --அவள்
புயலாக    மாற்றினாள்
மோகத்தின்     அலையிலே   ---என்னை
மூழ்கவே     செய்தனள்

உண்ணாமல்       இருக்கிறேன்    ---அவள்
உறவுக்காய்      துடிக்கிறேன்
கண்ணாளன்     என்னை க்   காக்கவே    ---என்றும்
கைகொடுக்க      வருவாளா

என்றுதான்       தீருமோ   --இளம்
இதயங்கள்     சேருமோ
நன்றொன்று          சொல்லுவீர்   ---எனக்கு
நல்வழி         காட்டுவீர் 

குளிர் 692

நிலவில்        ஆடித்     திரியலாம்    ---நாம்
நேர்மை      வழியில்     நடக்கலாம்
பழகிச்      சிரித்து     மகிழலாம்    ----தினம்
பருவக்      காதல்      பழகலாம்

கொட்டும்     மழையினில்    நனையலாம்   ---வரும்
குளிரைப்     போக்க     அணைக்கலாம்
பட்டு      இதழ்களை    சுவைக்கலாம்    ---இளம்
பருவக்     கதைகள்      பேசலாம்

இரவில்     ஒன்றாய்     இருக்கலாம்     ---நாம்
இனிய      பாடங்கள்     படிக்கலாம்
உறவைப்    பெரிதாய்    மதிக்கலாம்   ---தினம்
உழைத்தால்    இன்னும்    உயரலாம்

காலங்கள்     ஓடியே     மறையலாம்   ---கடும்
உழைப்பில்   செல்வங்கள்   நிறையலாம்
சூழும்      துன்பத்தை     விலக்கலாம்    ---நல்ல
சுகமுடன்    நலமாய்     இருக்கலாம்

வாடி        எந்தன்        வஞ்சியே    ---உன்னிடம்
வந்து      நின்றேன்     கெஞ்சியே
தேடி     வந்திட்ட      செல்வம் நீ    ---எனக்கு
தேனும்      பாலுமாய்      இனிப்பவள் 

கண்கள் 691

கண்கள்       வழியே       நுழைவது    ---பின்பு
காதல்       என்று      மலர்வது
பெண்ணை     ஆணை     இணைப்பது    ---பிறர்
பேசுகின்ற      இனிய       பொருளது

இருவர்       மனங்களை     சேர்ப்பது    ---இது
இரவினைப்     பகலென    காண்பது
ஒருவரை     மட்டும்     நினைப்பது     ---இந்த
உலகில்       என்றும்      வாழ்வது
 
கூடியே       வாழ்ந்திட     வைப்பது    ---பலரின்
குடும்பங்கள்      எரிமலை     ஆவது
ஓடிக்      களைத்து     உழல்வது    ---சிலர்
உயிர்கள்     மண்ணில்     மறைவது

இறைவன்       படைத்த     உயிர்களில்    ---என்றும்
ஏற்றத்        தாழ்வுகள்       இல்லையே
வரைமுறை   இல்லா   மனித    வாழ்விலே     ---வீணில்
வன்மம்       பகைமை கள்    தொல்லையே

காதல்       செய்குவீர்      மாந்தரே     ---அதில்
கவனம்      வேண்டும்     வாழ்விலே
மோதல்      எண்ணங்கள்    போதுமே     ---இதனை
முற்றிலும்      உணர்ந்தால்     லாபமே

பெருமை 690

கண்ணாட்டி     ஏனடி     ---தினம்
கண்ணீரில்     ஆழ்த்தினை
உன்மேல்      ஆசையால்     ---நானும்
உலகினில்     அலைவதோ

கூரான    உந்தன்     பார்வையோ  --என்னையும்
கொல்லாமல்      கொல்லுதே
வேறேதும்      புரியல    ---நான்
வெல்வேனோ     தெரியலை

தேரோடும்       தெருவிலே     ----தினம்
தேவியாய்த்     தெரிந்தவள்
யாரோடு      நான்   சொல்வது    ---இந்த
நியாயங்கள்   அறியலை

துள்ளிநீ        ஆடுவாய்     ---நான்
தூர நின்று      பார்ப்பேனே
தள்ளாடும்       நிலைதனை    ---எனோ
என் தங்கமே     கொடுத்தனை

உன்னோடு        வாழணும்    ---நானும்
உழைப்பால்     சிறக்கணும்
பெண்டாட்டி     தன்னுடன்    ---இங்கு
பிரியமாய்      வாழுவேன்  

தூது 689

கண்ணான      காவியம்   --அவள்
கள்ளூறும்     ஓவியம்
பெண்ணாக    வந்தனள்   --என்னை
பித்தாக      செய்தனள்

தேனாக      மொழிபவள்    --எனோ
திசை      மாற      வைத்தனள்
ஆணான      என்னையே     ---தன்
அம்பாலே     அடிப்பவள்

எந்நாளும்      அவள்  நினைவிலே   ---நான்
இருந்தாலே     போதுமா
கண்ணாட்டி     அவளையும்   ---நான்
கைப்பற்ற      வேண்டுமே

ஊராரைக்      கூட்டுவேன்    ---மனதில்
உள்ளதைக்     கூறுவேன்
போராடும்      மனதிற்கு    ---நானே
புது வழி       காட்டுவேன்

வாழ்ந்தாலும்     அவளுடன்    ---என்
வாழ் நாளும்    சேரலாம்
சூழ்ந்து       வீசிடும்    காற்றே   ---நீ
எனக்காய்     தூதாகப்     போய்வா


  ----

புதன், 10 ஜூலை, 2019

கருமணி 688

நீரில்        நனைகிறேன்    ---கண்
நீரில்     நினைக்கிறன்
உன்னை    நெஞ்சில்    சுமக்கிறேன்   --காதல்
நினைவில்      தவிக்கிறேன்

வேலால்      என்னை   வீழ்த்தினாய்   ---உன்னை
விரும்பும்படி       மாற்றினாய்
தாளாமல்    அழுகிறேன்   ---அடி 
தையலே   பதில்     என்னவோ
கூடி     நாமும்    இருந்தோமடி    ---நமது
குடும்பம்      தன்னை     நினைந்தோமடி
வாடித்     துடிப்பது    தெரியலையா    --என்
வாழ்வே    உன்னுடன்     புரியலையா

அன்பினை     வேண்டி     நின்றேன்    ---நீயோ
அலட்சியம்     செய்து    விட்டாய்
பண்பினை    மறந்து    விட்டாய்   --என்னை
பாகென     உருக      விட்டாய் 

உன்னிடம்       நீதி     இல்லை   ---என்னிடம்
உண்மைக்கு    பஞ்சம்   இல்லை
கண்ணின்    கருமணியே    காதலி ---வந்த
கவலைக்கு     மருந்து    தருவாய்

தலைவன் 687

என்னோடு     கானம்    --உலகில்
எந்நாளும்      வாழும் 
பொன்னோடு     பொருளும்     சேரும்  --அழியா
புகழ்      வந்து     நிறையும்

கண்ணான    அன்னை    கவிஞனாய்   படைத்தாள்   ---அவள்
கனிவான    பார்வை       காசுகள்    தருமே
விண்ணாளும்    பெரியோர்   வெற்றிகள்  தருவார்    ---அவர்
விரும்பிய     வழிகளில்    வெற்றிகள்   பெறுவேன்

மணவாட்டி     என்பாள்      மணநாளில்   கிடைத்தாள்   --என்
மனம்       அமைதி     பெறுமென   மனதார   நினைத்தேன்
கண்ணான    பிள்ளைகள்    கவனமாய்    படித்தார்   --அந்த
கடவுளின்     செல்வங்கள்    கருத்தாக     வாழும்

மண நாளைத்    தொடர்ந்து      மகிழ்வுடன்    வாழ்வார்   ---என்
மாதாவின்     அருளால்     மழலைகள்     பிறக்கும்
பொன்னும்     மணியும்     பொங்கியே    வழியும்    ---இந்த
பூமியில்      அவர்  வாழ்வு    புகழோடு    சிறக்கும்

கண்ணனைத்      தொழுதால்     கைமேல்    பலனே   --அவர்
காலடி     பற்றிட    வந்த    கவலைகள்    மறையும்
என்மன     வானிலே       இருப்பவன்     கண்ணன்   ---இன்னும்
ஏலேழு        ஜென்மத்தில்     எனக்கவனே     தலைவன்

தெய்வம் 686

வந்தது      என்ன     வாழ்க்கையிலே  --இதில்
வரவும்    செலவும்    மிச்சமில்லை
நொந்தது    என்பது    கணக்கிலடா   ---இதனை
நுண்ணறிவாலே    நீயும்  புரிந்து    கொள்ளடா

பிள்ளைகள்    நெஞ்சிலே    கள்ளமில்லையே   ---அவர்க்கு
பேதமை         எண்ணம்     வருவதில்லையே
கள்ளமே   இல்லாத     வெள்ளை மனம்   ---அது
கடவுள்      வாழ்கிற     புனித  இடம்

விலங்குகள்      வாழ்விலும்     நீதியுண்டு   ---அவை
விரும்பும்      முறையிலே      வாழ்வதுண்டு     
கலங்கரை     விளக்கமாய்    இருந்துவிடு    ---மன
கவலைகள்    தீர்த்திட     துணிந்து எழு

நல்லதை        எங்கிலும்       செய்து   விடு     ---அதுவே
நமக்கு    துணைவரும்       அறிந்துவிடு
உள்ளதை     பிறர்க்கும்     கொடுத்து  விடு  ---அவர்
உயர்வினில்    மகிழ்வினைப்      பெற்றுவிடு

பெண்களை    பெருமையாய்    நினைத்து விடு   --அவர்கள்
பேசும்       தெய்வம்        என்று      தொழு
மண்ணகம்      செழித்திட     பாடுபடு    ---தாயின்
மானத்தைக்     காத்திட      துடித்து    எழு 

உத்தமன685

கண்ணின்       கருமணியே    ---நீ
என்காதலுக்கு    ஒரு  தோணி 
உன்னை  அடைவதற்க்கே    ---இந்த 
உலகில்     பிறந்தேனடி 

வட்டக்    கருவிழியால்    ---இவ் 
உலகை      வாரி    அனைத்தாயடி 
சுட்டும்    விரல்    அசைவில்   --மனிதர்கள் 
சுழன்று      திரிவாரடி 
  
எட்டியே     நடை      நடக்க   ---இளையோர் 
ஏங்கித்       தவிப்பாராடி 
பட்டுமேனி     அசைவில்   ---வந்த 
பசியும்        தீருமடி 

முல்லை     மலர்     அழகோ    ---உன் 
மோகனப்     பல்வரிசை 
கள்ளி   நீ     சிரிக்க  --வீசும் 
காற்றும்     நடுங்குமடி 

தண்டைக்     கொலுசு    சப்தம்   --இன்ப 
சங்கீதம்      போன்றதடி 
உண்டு     மகிழ்வதற்கோ    ---உலகில் 
அந்த      உத்தமன்     படைத்தானடி --

பாடம் 684

கனவினில்        வந்தாள்     ---என்
காதலைச்      சொன்னாள்
நினைவினில்      விழித்தேன்   ---எனோ
நில்லாது      மறைந்தாள்

உறவினை     எண்ணியே     உருகுது    நெஞ்சம்    --அவள்
உருவினைக்   கண்டிட      உலகமே    தஞ்சம்
வரவினை     எண்ணி     வாடுது      மஞ்சம்    ---இனி நீ
வந்தால்      என்னிடம்     வளங்கள்    கொஞ்சும்

சின்ன      மெல்லிடை    சிலிர்ப்பினை     ஊட்டும்    --அவள்
செம்பவள     இதழ்கள்     ஜீவனை      வாட்டும்
அன்னமும்     நடையில்     அவளிடம்     தோற்கும்    ---தினம்
அள்ளியே       அணைத்தால்     என்னுடல்    வேர்க்கும்

சொல்லிக்      கொடுப்பாள்    சுகம்பெறு     கலைகள்   ---அந்த
தோகையாள்   கிடைத்தால்   எனக்கு    சுக்கிர   திசைகள்
பள்ளிப்    பாடங்கள்     படித்திட     வேண்டும்   ---இனியென்
பாவை    மடியினில்      துயில்     பெறவேண்டும்

பிள்ளைகள்      பாவும்      பெற்றிட     வேண்டும்    ---இங்கு
பெருமையில்   அவரை    நன்கு     வளர்த்திட    வேண்டும்
நல்லவை      தீயவை     நான்    சொலல்      வேண்டும்   ---நம்
நாட்டைக்     காத்திட    என்றும்     நாம்  எழ    வேண்டும்

செந்தமிழ்ச் செல்வி 683

சித்தர்கள்     போற்றும்     செல்வியும்      நீயே    ---எம்
சிந்தையில்     வாழும்     ஜீவ  ஜோதியென்    தாயே
உத்தமி     நீயே     உலகை      ஆள்வாயே    --உன்
அடி      போற்றினோம்     அருள்     புரிவாயே

சத்திய    நெறி    வளர்     சங்கரி      நீயே    ---எந்த
சமரிலும்      தீமையை     வதை     புரிவாயே
இத்தரை     செழித்திட     இறையருள்    செய்க    ---வாடும்
ஏழையைக்      காக்கவே     இன்றேனும்   வருகவே

மங்கையர்     வாழ்வில்     மகிழ்ச்சி யே     பெறுக    ---எம்
மாதா வின்     கருணை     மக்களை     அடைக
திங்களும்      வானும்    சிறப்புடன்     பொலிக    ---தேவி
உந்தன்      தயவால்     இங்கு     தேன்மழை     பொழிக

இல்லை   என்ற       சொல்      இல்லாது     ஒழிக   ---இங்கு
ஏற்ற      தாழ்வுகள்    இனியென்கோ      ஒளி க
கள்ள     எண்ணங்கள்    காற்றினில்     மறைக   ---நல்
கருணைத்       தெய்வமே    காத்தருள்      புரிக

மாந்தர்கள்    யாவரும்     மகிழ்வு ற    வேண்டும்    ---எங்கள்
மனையறம்      என்றுமே     மணம்   பெற    வேண்டும்
சொந்தமும்     சுற்றமும்      சுகம்    பெற     வேண்டும்    ---செம்
தமிழ்ச்       செல்வியே   உந்தன்    சிறப்பினைப்    பணிவோம் 

நீதி 682

கண்ணா       என்முன்       நில்லு     ---உன்
காதல்        என்ன      சொல்லு
முன்னால்     பாரு     பல்லு     ----அவன்
முகத்தில்      நிறைய     ஜொள்ளு

வாலை        ஆட்டி      காட்டுறே     ---என்னை
வளைக்கத்  திட்டம்     தீட்டுறே
வேலை      வெட்டி      இல்லையா    ---தினம்
வெறுமனே     எனக்குத்    தொல்லையா

பல்லைக்    காட்டி      இளிக்கிறே    ---உன்
பவிசை       சொல்லி     பசப்புறே
தொல்லை     நிறையக்   கொடுக்கிறே     ---நான்
துடைப்பம்     எடுத்தால்     ஓடுறே

பிழைக்க        வழியைப்       பாரய்யா    ---அப்போ
பொண்ணும்      விரும்பி     வருவாளையா   
நிலைச்ச       வாழ்வைக்     கொடுக்கணும்    ----இங்கு
நீயும்        அவளும்     நல்லா    வாழணும்   

அன்பை       மனதில்       வளர்க்கணும்    ----மனைவி
ஆசைகள்     தன்னையும்      மதிக்கணும்   
பெண்களை     தாயென     வணங்கணும்    ---நிறைய
பிள்ளைகள்       உனக்குப்     பிறக்கணும் 

செவ்வாய், 9 ஜூலை, 2019

குமரி 681

நினைவில்   வந்ததென்ன      ----என்னை
நித்தம்  நித்தம்     கொல்வதென்ன
உறவில்    கலந்ததென்ன    நான்   ---உன்னை
எண்ணிக்     கலங்குவதென்ன

கனவினில்      வருவதேன்    ---என்
கண்ணீரில்  நீயும்    சிரிப்பதேன்
மனதில்     இருப்பதேன்    ---பல
மாயங்கள்    செய்வதேன்

நெஞ்சம்      அழுவதேன்     ---உன்னை
நேரில்     காணத்     துடிப்பதேன்
மஞ்சம்       அழைப்பதேன்    ---என்றும்
மனைவியாக்கத்     துடிப்பதேன்

கொஞ்ச      மனமும்      இல்லையோ   ---நாம்
குலவிட      நாள்       வல்லையோ
தஞ்சம்      நீயென      வந்தால்     ---என்னை
தாங்கிக்       கொள்ள    இடமில்லையோ

வாடும்       நெஞ்சமினி      வாடுவதா     ----என்
வாழ்வு       பலனின்றி      ஓடுவதா
கூடும்        ஆசைகள்      உனக்கில்லையோ    ----இளம்
குமரிப்பெண்    நீயும்     பதில்    கூறிடுவாய் 
                                      

திங்கள், 8 ஜூலை, 2019

உத்தமி 680

கனவில்      வந்தவள்    காரிகை    --அவளை
கண்டதும்    மனதில்     பேரிகை
கைகளில்    கிடைத்த    தூரிகை   ---நான்
காதலன்     ஆகுதல்     கோரிக்கை

நினைவில்    ஏன் அவள்   நிக்கிறாள்   ---அதை
நினைத்து   நானும்   சொக்குரேன்
கணைகளை    வீசியவள்    கொல்கிறாள்  ---இதனை
கண்டதும்       மயங்கியே    நிற்கிரேன்

சிரிப்பால்     என்னை     சிறைப்பிடித்தாள்   ---அவள்
செம்பவள     வாயால்    முத்துயிர்த்தாள்
பொறுப்பாய்     என்னிடம்    வருவாளா  --அந்த
பூவையை     மணந்திடும்     நிலைவருமா

இளமை    படை  கொண்டு    போரிடுவாள்    ---தன்னை
எதிர்த்தவர்    தம்மையும்      வென்றிடுவாள் 
செழுமை     குலுங்கிடும்      தேனமுதம்     ---இந்த
தேவிக்கு      ஈடா        அந்த     வானமுதம்

நிலவினில்     என்னிடம்   நெருங்குகிறான்   ---அவளை
நினைத்தால்      நானும்      பொங்குகிறேன் 
உலகினர்       மெச்சிடும்     நாள்     வருமா     ---என்னுடன்
உத்தமி        திருமணம்      நடந்திடுமா