அழுதவர் சிரித்திடக் காலம் வரும் --இவை
அனைத்திற்கும் பதில் சொல்லும் நேரம் வரும்
உழுதவர் விடும் கண்ணீர் வயலில் விழும் --அது
உலகினை மாற்றிடும் புயலாய் வரும்
எழுதிடும் எழுத்துக்கள் எங்கும் வரும் --அது
இயற்கையை மீறியே என்றும் இருந்து விடும்
தொழுதவர் வாழ்வினில் சுகமும் வரும் --இங்கு
தூய்மை எண்ணங்கள் நன்மை தரும்
பழகிய நாட்கள் நன்றாய் நினைவு வரும் --அவை
படிப்பினை நமக்கு நிறையத் தரும்
அழகிய குழந்தை நம் மனம் கவரும் --அது
ஆயிரம் புன்னகை யள்ளித் தரும்
உலவிடும் காற்று பல்வகை உயிர் வளர்க்கும் --அது
உன்னத வாழ்விற்கு ஊக்கம் தரும்
கொலை களவு காமம் பல குடும்பம் கெடும் --இங்கு
குடும்பங்கள் வீண் சண்டையால் நாளும் கெடும்
கலைகளால் மனதிற்கு நல்ல அமைதி வரும் --மனதில்
கற்பனை கூடினால் தமிழில் பாட்டு வரும்
நிலையினை உணர்ந்திட நல்ல நேரம் வரும் --நீ
நினைத்தது நடந்திடில் நிம்மதி வரும்
அனைத்திற்கும் பதில் சொல்லும் நேரம் வரும்
உழுதவர் விடும் கண்ணீர் வயலில் விழும் --அது
உலகினை மாற்றிடும் புயலாய் வரும்
எழுதிடும் எழுத்துக்கள் எங்கும் வரும் --அது
இயற்கையை மீறியே என்றும் இருந்து விடும்
தொழுதவர் வாழ்வினில் சுகமும் வரும் --இங்கு
தூய்மை எண்ணங்கள் நன்மை தரும்
பழகிய நாட்கள் நன்றாய் நினைவு வரும் --அவை
படிப்பினை நமக்கு நிறையத் தரும்
அழகிய குழந்தை நம் மனம் கவரும் --அது
ஆயிரம் புன்னகை யள்ளித் தரும்
உலவிடும் காற்று பல்வகை உயிர் வளர்க்கும் --அது
உன்னத வாழ்விற்கு ஊக்கம் தரும்
கொலை களவு காமம் பல குடும்பம் கெடும் --இங்கு
குடும்பங்கள் வீண் சண்டையால் நாளும் கெடும்
கலைகளால் மனதிற்கு நல்ல அமைதி வரும் --மனதில்
கற்பனை கூடினால் தமிழில் பாட்டு வரும்
நிலையினை உணர்ந்திட நல்ல நேரம் வரும் --நீ
நினைத்தது நடந்திடில் நிம்மதி வரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக