வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

நல்ல நேரம் 601

அழுதவர்  சிரித்திடக்     காலம்   வரும்  --இவை
அனைத்திற்கும்   பதில்   சொல்லும்   நேரம்   வரும்
உழுதவர்   விடும்   கண்ணீர்   வயலில்   விழும்  --அது
உலகினை    மாற்றிடும்   புயலாய்   வரும்

எழுதிடும்   எழுத்துக்கள்   எங்கும்   வரும்   --அது
இயற்கையை   மீறியே   என்றும்   இருந்து   விடும்
தொழுதவர்   வாழ்வினில்   சுகமும்   வரும்   --இங்கு
தூய்மை   எண்ணங்கள்   நன்மை   தரும்

பழகிய      நாட்கள்   நன்றாய்    நினைவு   வரும்  --அவை
படிப்பினை   நமக்கு   நிறையத்    தரும்
அழகிய    குழந்தை    நம்    மனம்    கவரும்   --அது
ஆயிரம்    புன்னகை    யள்ளித்   தரும்

உலவிடும்    காற்று   பல்வகை   உயிர்   வளர்க்கும்  --அது
உன்னத    வாழ்விற்கு     ஊக்கம்    தரும்
கொலை   களவு   காமம்   பல   குடும்பம்   கெடும்   --இங்கு
குடும்பங்கள்   வீண்    சண்டையால்   நாளும்   கெடும்

கலைகளால்   மனதிற்கு   நல்ல    அமைதி    வரும்   --மனதில்
கற்பனை    கூடினால்   தமிழில்     பாட்டு   வரும்
நிலையினை    உணர்ந்திட    நல்ல  நேரம்   வரும்   --நீ
நினைத்தது      நடந்திடில்    நிம்மதி      வரும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக