களத்து மேட்டுல காத்து அடிக்குது --இங்கு
நேற்று இன்றும் சேத்தடிக்குது
நினைச்சு நினைச்சு மாத்தி அடிக்குது ---நம்
நெஞ்சில் ஆசைகள் கூத்தடிக்குது
பாலைப் போல நிலவிலே --இளம்
பருவ க் கால அழகிலே
வேலன் வள்ளி நாடகம் --அங்கு
விடிய விடிய நடக்குதே
மூலை வீட்டுக் காரனோ --கடையில்
மூக்கு முட்டக் குடிச்சவன்
வேலைக் காரப் பெண்ணிடம் --தனது
வீரம் முழுதும் காட்டினான்
கல்லை யெடுத்து அடிச்சவள் ---அவன்
காதைப் பிடித்துக் கடித்தனள்
பல்லைக் காட்டிக் கெஞ்சியும் --=அவள்
பத்ர காளியாய் மாறினாள்
காத்து வாங்கப் போனவன் --எனோ
காதல் சுரம் வந்ததால்
போத்தி இழுத்துப் படுத்தனன் ---நல்ல
பொழுது விடிந்தும் தூங்கினான்
காதல் கொண்ட ஜோடியும் --=நம்ம
கம்மங் கரையில் ஒதுங்கினர்
சத்தியம் செய்தவர் சரசமாயினர் -பின்
சற்றே எங்கேயோ நழுவினர்
காத்து வீசிடும் காலத்தில் --உலகில்
கதைகள் பலவும் நடக்குது
பாத்து நன்கு பிழைக்கணும் --வாழ்வில்
பண்பு பெருகி வாழணும்
கால காலம் கடந்துமே ---நம்ம
களத்து மேடு இருக்குது
சோளக் கொள்ளை பொம்மையும் ---கால
சுவடு கண்டு சிரிக்குது
நேற்று இன்றும் சேத்தடிக்குது
நினைச்சு நினைச்சு மாத்தி அடிக்குது ---நம்
நெஞ்சில் ஆசைகள் கூத்தடிக்குது
பாலைப் போல நிலவிலே --இளம்
பருவ க் கால அழகிலே
வேலன் வள்ளி நாடகம் --அங்கு
விடிய விடிய நடக்குதே
மூலை வீட்டுக் காரனோ --கடையில்
மூக்கு முட்டக் குடிச்சவன்
வேலைக் காரப் பெண்ணிடம் --தனது
வீரம் முழுதும் காட்டினான்
கல்லை யெடுத்து அடிச்சவள் ---அவன்
காதைப் பிடித்துக் கடித்தனள்
பல்லைக் காட்டிக் கெஞ்சியும் --=அவள்
பத்ர காளியாய் மாறினாள்
காத்து வாங்கப் போனவன் --எனோ
காதல் சுரம் வந்ததால்
போத்தி இழுத்துப் படுத்தனன் ---நல்ல
பொழுது விடிந்தும் தூங்கினான்
காதல் கொண்ட ஜோடியும் --=நம்ம
கம்மங் கரையில் ஒதுங்கினர்
சத்தியம் செய்தவர் சரசமாயினர் -பின்
சற்றே எங்கேயோ நழுவினர்
காத்து வீசிடும் காலத்தில் --உலகில்
கதைகள் பலவும் நடக்குது
பாத்து நன்கு பிழைக்கணும் --வாழ்வில்
பண்பு பெருகி வாழணும்
கால காலம் கடந்துமே ---நம்ம
களத்து மேடு இருக்குது
சோளக் கொள்ளை பொம்மையும் ---கால
சுவடு கண்டு சிரிக்குது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக