வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

சோளக் கொள்ளை 585

 களத்து   மேட்டுல     காத்து   அடிக்குது  --இங்கு
 நேற்று    இன்றும்    சேத்தடிக்குது
 நினைச்சு  நினைச்சு  மாத்தி அடிக்குது  ---நம்
 நெஞ்சில்   ஆசைகள்   கூத்தடிக்குது

 பாலைப்   போல   நிலவிலே   --இளம்
 பருவ க்   கால   அழகிலே
 வேலன்   வள்ளி   நாடகம்  --அங்கு
 விடிய   விடிய    நடக்குதே

 மூலை     வீட்டுக்    காரனோ  --கடையில்
 மூக்கு   முட்டக்    குடிச்சவன்
 வேலைக்   காரப்   பெண்ணிடம்  --தனது
 வீரம்   முழுதும்    காட்டினான்

 கல்லை   யெடுத்து   அடிச்சவள் ---அவன்
 காதைப்   பிடித்துக்    கடித்தனள்
  பல்லைக்   காட்டிக்    கெஞ்சியும்  --=அவள்
 பத்ர     காளியாய்    மாறினாள்

 காத்து    வாங்கப்    போனவன்  --எனோ
 காதல்    சுரம்    வந்ததால்
 போத்தி   இழுத்துப்    படுத்தனன்  ---நல்ல
 பொழுது   விடிந்தும்   தூங்கினான்

 காதல்   கொண்ட    ஜோடியும்  --=நம்ம
 கம்மங்     கரையில்   ஒதுங்கினர்
 சத்தியம்  செய்தவர்   சரசமாயினர்  -பின்
 சற்றே     எங்கேயோ   நழுவினர்

 காத்து    வீசிடும்   காலத்தில் --உலகில்
 கதைகள்   பலவும்    நடக்குது
 பாத்து    நன்கு     பிழைக்கணும்  --வாழ்வில்
 பண்பு     பெருகி    வாழணும்

 கால      காலம்    கடந்துமே   ---நம்ம
 களத்து    மேடு     இருக்குது
 சோளக்    கொள்ளை    பொம்மையும்   ---கால
 சுவடு       கண்டு    சிரிக்குது   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக