வாழும் காலம் மறந்தேன் --என்
வாழ்வில் உன்னையே நினைந்தேன்
நாளினை வீணாய்க் கழித்தேன் --எனோ
நலிவுடன் தெருவில் திரிந்தேன்
வேலைக்கு வெளியில் அலைந்தேன் --இரவில்
வெட்ட வெளிதனில் படுத்தேன்
சோலை என்றே மகிழ்ந்தேன் --பின்
சோகம் என்றிட உணர்ந்தேன்
அன்பு வேண்டிக் கிடந்தேன் --அவள்
அழகில் மயங்கியே நின்றேன்
பண்பை மறந்து நடந்தேன் --நான்
பாதை மாறிப் போனேன்
வாயால் சொல்லி மகிழ்ந்தேன் --உன்னுடன்
வாழ்ந்திட எண்ணித் துடித்தேன்
நோய்கள் வந்திடக் களைத்தேன் --மீண்டு
நின்னைத் தேடியே வருவேன்
அன்பு வேண்டி அலைந்தேன் --உன்மேல்
ஆசை கொண்டு தொடர்ந்தேன்
தெம்பு நிறைய அடைந்தேன் --என்
தேவி உன்னையே மணப்பேன்
வாழ்வில் உன்னையே நினைந்தேன்
நாளினை வீணாய்க் கழித்தேன் --எனோ
நலிவுடன் தெருவில் திரிந்தேன்
வேலைக்கு வெளியில் அலைந்தேன் --இரவில்
வெட்ட வெளிதனில் படுத்தேன்
சோலை என்றே மகிழ்ந்தேன் --பின்
சோகம் என்றிட உணர்ந்தேன்
அன்பு வேண்டிக் கிடந்தேன் --அவள்
அழகில் மயங்கியே நின்றேன்
பண்பை மறந்து நடந்தேன் --நான்
பாதை மாறிப் போனேன்
வாயால் சொல்லி மகிழ்ந்தேன் --உன்னுடன்
வாழ்ந்திட எண்ணித் துடித்தேன்
நோய்கள் வந்திடக் களைத்தேன் --மீண்டு
நின்னைத் தேடியே வருவேன்
அன்பு வேண்டி அலைந்தேன் --உன்மேல்
ஆசை கொண்டு தொடர்ந்தேன்
தெம்பு நிறைய அடைந்தேன் --என்
தேவி உன்னையே மணப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக