செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

என் தேவி 564

 வாழும்   காலம்   மறந்தேன்   --என்
 வாழ்வில்  உன்னையே   நினைந்தேன்
 நாளினை   வீணாய்க்   கழித்தேன்  --எனோ
 நலிவுடன்  தெருவில்   திரிந்தேன்

வேலைக்கு   வெளியில்  அலைந்தேன்  --இரவில்
 வெட்ட    வெளிதனில்   படுத்தேன்
சோலை    என்றே    மகிழ்ந்தேன்  --பின்
சோகம்    என்றிட   உணர்ந்தேன்

 அன்பு    வேண்டிக்   கிடந்தேன்   --அவள்
 அழகில்   மயங்கியே   நின்றேன்
 பண்பை   மறந்து   நடந்தேன்   --நான்
 பாதை   மாறிப்    போனேன்

  வாயால்    சொல்லி   மகிழ்ந்தேன்  --உன்னுடன்
  வாழ்ந்திட  எண்ணித்   துடித்தேன்
  நோய்கள்   வந்திடக்   களைத்தேன்  --மீண்டு
  நின்னைத்   தேடியே   வருவேன்

  அன்பு    வேண்டி    அலைந்தேன்   --உன்மேல்
   ஆசை    கொண்டு   தொடர்ந்தேன்
   தெம்பு   நிறைய    அடைந்தேன்  --என்
   தேவி     உன்னையே   மணப்பேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக