செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

செந்தில் வேலன் 563

சிந்தையில்   கந்தனை  வந்தனை  செய்வாய்  --அவர் 
முந்தைய  வினைகளை  முழுவதும்  அழிப்பார் 
சொந்தமும்   அவரே  நல்ல  சுகங்களைத்  தருவார்  --எந்த 
நாளும்  நினைத்திட   வருமே  இன்பங்கள்   கோடி 

அன்பிற்  கிறங்கி  நம்  ஆறுமுகம்  வருவார்  --வாசல் 
வந்தவர்க்  கருள்பவர்  வள்ளி மயில்  வேலன் 
தென்னவர்  மனதில்  தெய்வமாய்  இருப்பார்  ==அந்த 
தேவி  மீனாட்சி  தந்த  திருமகனாம்  சிவபாலன் 

வேலினைக்  கண்டால்  உலகில்   வினைகள்  பறக்கும்  --நம் 
வெற்றி  வேலனைத்  தொழுதால்  வெற்றி  பல கிடைக்கும் 
காலங்கள்   தாண்டி   வாழும்  தமிழ்க்   காவியம்   ஆனவர்  --இங்கு 
கந்தன்  என்னும்  சொல்லே  நம்மைக்   காத்திடும்   கவசமே 

நாளுமே   நினைத்தால்   செல்வ  நாயகன்    வருவார்  --உள்ள 
நல்லவர்   நடுவில்  நல்ல   நண்பனாய்த்   தெரிவார் 
ஆண்டியும்   அவரே   நமக்கு   அரசனும்   குகனே --தனது 
அன்பினால்   உலகை  நன்கு   ஆள்பவர்   அவரே 

கந்தனை   நினைத்து  வந்த  கவலைகள்  மறப்பாய்  --உந்தன் 
சிந்தையில்  வைத்து  செந்தில்  வேலனைப்  பணிவாய் 
வந்தனை  செய்தவர்   வாழ்வினில்   பெறுவது  வெற்றியே  --அவரை 
வணங்கிட  வளங்கள்  வந்திடும்  உன்னைச்  சுற்றியே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக