செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

கண்ணியம் 593

 இலையில்     ஆடிடும்       கனிகளே   ---அவை
 இயற்கை      அளிக்கும்    வரங்களே
 அலையில்    குளிக்கும்    மீன்களே  ---உமக்கு
 அழகாய்       நீச்சல்       தந்தவர்  யார்

 வானில்     பறக்கும்     பறவையே  --உன்னால்
 வட்டம்       போடுவது    எப்படி
 கானில்    திரியும்      விலங்கினம் ---தமக்கு
 காதல்     உணர்வுகள்    சொன்னதார்

 எதோ         ஒன்று     இருக்குது   --அது
 என்னையும்   உன்னையும்   இயக்குது
 வேதம்     சொல்வது    இதனையே  --இதை
 விளங்கிக்    கொண்டால்   நன்மையே

காலம்       வேகமாய்ப்     போய்விடும்   --அதில்
 கணக்கற்ற   உயிர்கள்     தோன்றிடும்
வேளை            வந்திட     ஓடிடும்  --நல்ல
 விவரம்   சொல்லாது   மறைந்திடும்

 சிந்தனை   செய்வாய்     மனிதனே   --எதையும்
 சீராய்      எண்ணியே     பார்த்திடு
 வந்திட்ட    காரணம்    புரியுமே   --அதுவே
 வாழ்வினில்   பெருமை    சேர்க்குமே

  நல்ல    பெயரைப்     பெற்றிடு   --நமது
 நாடு      உயர்ந்திட    உழைத்திடு
 கள்ளம்   என்பதைக்   கைவிடு  ---என்றும்
 கண்ணியமாய்   உலகினில்   வாழ்ந்திடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக