இலையில் ஆடிடும் கனிகளே ---அவை
இயற்கை அளிக்கும் வரங்களே
அலையில் குளிக்கும் மீன்களே ---உமக்கு
அழகாய் நீச்சல் தந்தவர் யார்
வானில் பறக்கும் பறவையே --உன்னால்
வட்டம் போடுவது எப்படி
கானில் திரியும் விலங்கினம் ---தமக்கு
காதல் உணர்வுகள் சொன்னதார்
எதோ ஒன்று இருக்குது --அது
என்னையும் உன்னையும் இயக்குது
வேதம் சொல்வது இதனையே --இதை
விளங்கிக் கொண்டால் நன்மையே
காலம் வேகமாய்ப் போய்விடும் --அதில்
கணக்கற்ற உயிர்கள் தோன்றிடும்
வேளை வந்திட ஓடிடும் --நல்ல
விவரம் சொல்லாது மறைந்திடும்
சிந்தனை செய்வாய் மனிதனே --எதையும்
சீராய் எண்ணியே பார்த்திடு
வந்திட்ட காரணம் புரியுமே --அதுவே
வாழ்வினில் பெருமை சேர்க்குமே
நல்ல பெயரைப் பெற்றிடு --நமது
நாடு உயர்ந்திட உழைத்திடு
கள்ளம் என்பதைக் கைவிடு ---என்றும்
கண்ணியமாய் உலகினில் வாழ்ந்திடு
இயற்கை அளிக்கும் வரங்களே
அலையில் குளிக்கும் மீன்களே ---உமக்கு
அழகாய் நீச்சல் தந்தவர் யார்
வானில் பறக்கும் பறவையே --உன்னால்
வட்டம் போடுவது எப்படி
கானில் திரியும் விலங்கினம் ---தமக்கு
காதல் உணர்வுகள் சொன்னதார்
எதோ ஒன்று இருக்குது --அது
என்னையும் உன்னையும் இயக்குது
வேதம் சொல்வது இதனையே --இதை
விளங்கிக் கொண்டால் நன்மையே
காலம் வேகமாய்ப் போய்விடும் --அதில்
கணக்கற்ற உயிர்கள் தோன்றிடும்
வேளை வந்திட ஓடிடும் --நல்ல
விவரம் சொல்லாது மறைந்திடும்
சிந்தனை செய்வாய் மனிதனே --எதையும்
சீராய் எண்ணியே பார்த்திடு
வந்திட்ட காரணம் புரியுமே --அதுவே
வாழ்வினில் பெருமை சேர்க்குமே
நல்ல பெயரைப் பெற்றிடு --நமது
நாடு உயர்ந்திட உழைத்திடு
கள்ளம் என்பதைக் கைவிடு ---என்றும்
கண்ணியமாய் உலகினில் வாழ்ந்திடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக