கண்ணில் மின்னும் வண்ணக் கண்ணனே ---நீ
கன்னியர் மனதை வெல்லும் மன்னனே
உன்னில் என்னைக் கண்டு கொள்ளும் முன்னமே ---நான்
உழன்று தவித்தது உண்மை எந்தன் அண்ணலே
வெண்ணெய் திருடும் அந்த வேளையில் --உன்னை
வேகமாய் அன்னை கடிந்த போதிலும்
மண்ணினைத் தின்று அன்று மாயம் காட்டினாய் --இங்கே
மனமயக்கம் நீக்கி எமக்கு அருள் கூட்டினாய்
மலையைக் குடை யாய்ப் பிடித்த மாயமே ---உன்னை
மனதில் நினைத்தவர் பெறுவது நல் உபாயமே
கலைகளில் சிறந்தவன் கண்ணன் அல்லவா --நீயும்
காதல் புரிந்த பல கதைகள் நானும் சொல்லவா
ஏழைகள் மனதில் என்றும் உள்ளவன் --உலகில்
ஏங்கியே அழுதவர்க் கருள்புரியும் நல்லவன்
தாழை மடலாய் மணம் பறப்பும் மாதவன் --உந்தன்
தாளினைப் பணிந்தால் பயங்கள் விலகி யோடுமே
கண்ணன் பெயரைச் சொல்லி நாமும் ஆடுவோம் --அவன்
கருணையை தினமும் போற்றிப் பாடுவோம்
மண்ணகம் காத்து நிற்கும் மகிமையே -- நம்
மக்கள் மனதில் என்றும் உள்ளதும் உண்மையே
கன்னியர் மனதை வெல்லும் மன்னனே
உன்னில் என்னைக் கண்டு கொள்ளும் முன்னமே ---நான்
உழன்று தவித்தது உண்மை எந்தன் அண்ணலே
வெண்ணெய் திருடும் அந்த வேளையில் --உன்னை
வேகமாய் அன்னை கடிந்த போதிலும்
மண்ணினைத் தின்று அன்று மாயம் காட்டினாய் --இங்கே
மனமயக்கம் நீக்கி எமக்கு அருள் கூட்டினாய்
மலையைக் குடை யாய்ப் பிடித்த மாயமே ---உன்னை
மனதில் நினைத்தவர் பெறுவது நல் உபாயமே
கலைகளில் சிறந்தவன் கண்ணன் அல்லவா --நீயும்
காதல் புரிந்த பல கதைகள் நானும் சொல்லவா
ஏழைகள் மனதில் என்றும் உள்ளவன் --உலகில்
ஏங்கியே அழுதவர்க் கருள்புரியும் நல்லவன்
தாழை மடலாய் மணம் பறப்பும் மாதவன் --உந்தன்
தாளினைப் பணிந்தால் பயங்கள் விலகி யோடுமே
கண்ணன் பெயரைச் சொல்லி நாமும் ஆடுவோம் --அவன்
கருணையை தினமும் போற்றிப் பாடுவோம்
மண்ணகம் காத்து நிற்கும் மகிமையே -- நம்
மக்கள் மனதில் என்றும் உள்ளதும் உண்மையே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக