வியாழன், 30 ஆகஸ்ட், 2018

கவிதை 598

கனவான      காதல்  --என்
கண்ணீரில்   வாழும்
கற்பனையாய்   உன்னை  ---நான் 
கல்யாணம்   செய்வேன்

துணையாக   வருவாய்  --என்றே
துடிப்புடன்   இருந்தேன்
கனவாகிப்   போனால்  --என்
 கண்ணே   என்ன  செய்வேன்

இரவானால்   கவலை  --எனக்கு
இதுதானே   வேலை
உறவுகள்   போனால்  --இங்கு
உயிர் வாழ் தல்   தவறே

வானத்தில்   பறப்பேன்  --உன்னை
வாரியே    அணைப்பேன்
கானங்கள்   கேட்டு   --தினம்
கண்ணீரில்   மிதப்பேன்

காலங்கள்   ஓடும்  --நல்ல
கவிதைகள்   வாழும்
கோலங்கள்   மாறும்   --மன
 குறையென்று    தீரும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக