புதன், 1 ஆகஸ்ட், 2018

பக்தன் 537

 இதயத்தை  திறந்து   வைத்தேன்  புரியவில்லை  --எனக்கு
 ஏற்பட்ட  குறைகள்   இன்னமும்   தீரவில்லை
 உதவிகள்  செய்திட  வேண்டி  உந்தனை  அழைத்தேன்  --நீ
 ஓடிவந்து  என்னைக்  காக்க   வந்திட  வேண்டுமய்யா

 சுற்றம்  சொந்தம்  எல்லாமே   நீ தந்தது --அதில்
 வரும்   சுகங்களை  இங்கே  யார்  கெடுத்தது
 பற்றினை  வைப்பது  உலகிலே  பெரும்  பாபமாய்யா  --இந்த
 பக்தனின்   மேல்  உனக்கென்ன  இன்னும்  கோபமையா

 நல்ல  எண்ணம்  கொண்டு  நானும்  வளர்ந்தேன் --இங்கு
 நன்றி  யென்னும்   சொல்லில்  நாள்  கழிந்தேன்
 கள்ள  மனம்   என்னிடம்  இல்லை  ஐயா --உந்தன்
 காலடி  சரணம்  என்பது  எனது  வேலை  மெய்யாய்

 பிறரும்  வாழ்ந்திட  வேண்டுமென்ற  பொறுப்பு  உள்ளவன் --நம்
 பெண்களை  உயர்வாக  நினைக்கும்  பண்பு  கொண்டவன்
 கடல் போல  பரந்து  விரிந்த  கருணை  கொண்டவன் --இறைவா
 உன்கண்ணசைவில்  தமிழில்   பாடும்   நல்ல  கவியுமானவன்

 வாழ்கின்ற  காலமதில்  எனக்கு  வல்லமை  அருள்வாய் --உன்
 வாசலில்  வந்து  நிற்க  என்றும்  நல்லவை  தருவாய்
 சூழ்கின்ற  மனக்கவலை  சற்றே  தூர  விலக்கிடு --எந்தன்
 சுந்தரனே  என்வாழ்வு   எங்கிலும்  சுகமாய்   மாற்றிடு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக