ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

அமிழ்தம் 546

                                   பல்லவி
அழகெனும்  முருகன்  அருகில்  வந்தார்  --அவர்
அருளினை  பள்ளியே   தினம்  தருவார்     (அழகெனும் )
                                  அனுபல்லவி
பழமென  இனிப்பது   அவரது    பக்தரிடம்  --தன்னை
பணிந்தவர்க்  கருள்வது   வாழ்வினில்  நல்ல இடம்  (அழகெனும் )
                                    சரணங்கள்
குரு பரன்   என்னும்  பெயர்  படைத்தார்  --சிவ
குருநாதன்  ஆகியே  பிரணவப்  பொருள்  உரைத்தார்
சரவணன்  பிறந்தது   கந்த  சஷ்டியிலே --சிவ
சங்கரன்   மைந்தனாய்  வந்துள்ள  சங்கடம்  தீர்ப்பார்  (அழகெனும் )

குற மகள்   வள்ளியும்  அவர்   மனைவி ---அந்த
கோதை  குஞ்சரியோ  குகன்  துணைவி 
வரமது   அருள்வதில்   என்றும்  வள்ளல்  அன்றோ  --இதனை
சொல்லியே  மகிழ்வதில்  வரும்  சுகம்  பெரிதன்றோ    (அழகெனும் )

ஆறிரண்டு  கைகளுடன்  நம்  ஆறுமுகம்  வருவார்  --தன்னிடம்
அபயமென   வந்தவர்க்கு  மன ஆறுதல்  தருவார்
ஏறு மயில்   ஏறிவந்து  இங்கு  ஏழைகளைக்  காப்பார்  --வந்த
இன்னலைத்   தீர்த்து  வைத்து  நல்லருள்  புரிவார்  (அழகெனும் )

தமி ழ்  என்னு ம்  தாயினை  தாங்கிட  வருவார்  --கொடிய
தருக்கர்  பலரையும்  சமரினில்  அழித்தார்
அமிழ்தினும்  இனிய  நம்  அண்ணலைத்   தொழுவோம்  --தினம்
அவரருள்   பெற்றுமே   இந்த  அவனியை   வெல்வோம் (அழகெனும் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக