பல்லவி
அழகெனும் முருகன் அருகில் வந்தார் --அவர்
அருளினை பள்ளியே தினம் தருவார் (அழகெனும் )
அனுபல்லவி
பழமென இனிப்பது அவரது பக்தரிடம் --தன்னை
பணிந்தவர்க் கருள்வது வாழ்வினில் நல்ல இடம் (அழகெனும் )
சரணங்கள்
குரு பரன் என்னும் பெயர் படைத்தார் --சிவ
குருநாதன் ஆகியே பிரணவப் பொருள் உரைத்தார்
சரவணன் பிறந்தது கந்த சஷ்டியிலே --சிவ
சங்கரன் மைந்தனாய் வந்துள்ள சங்கடம் தீர்ப்பார் (அழகெனும் )
குற மகள் வள்ளியும் அவர் மனைவி ---அந்த
கோதை குஞ்சரியோ குகன் துணைவி
வரமது அருள்வதில் என்றும் வள்ளல் அன்றோ --இதனை
சொல்லியே மகிழ்வதில் வரும் சுகம் பெரிதன்றோ (அழகெனும் )
ஆறிரண்டு கைகளுடன் நம் ஆறுமுகம் வருவார் --தன்னிடம்
அபயமென வந்தவர்க்கு மன ஆறுதல் தருவார்
ஏறு மயில் ஏறிவந்து இங்கு ஏழைகளைக் காப்பார் --வந்த
இன்னலைத் தீர்த்து வைத்து நல்லருள் புரிவார் (அழகெனும் )
தமி ழ் என்னு ம் தாயினை தாங்கிட வருவார் --கொடிய
தருக்கர் பலரையும் சமரினில் அழித்தார்
அமிழ்தினும் இனிய நம் அண்ணலைத் தொழுவோம் --தினம்
அவரருள் பெற்றுமே இந்த அவனியை வெல்வோம் (அழகெனும் )
அழகெனும் முருகன் அருகில் வந்தார் --அவர்
அருளினை பள்ளியே தினம் தருவார் (அழகெனும் )
அனுபல்லவி
பழமென இனிப்பது அவரது பக்தரிடம் --தன்னை
பணிந்தவர்க் கருள்வது வாழ்வினில் நல்ல இடம் (அழகெனும் )
சரணங்கள்
குரு பரன் என்னும் பெயர் படைத்தார் --சிவ
குருநாதன் ஆகியே பிரணவப் பொருள் உரைத்தார்
சரவணன் பிறந்தது கந்த சஷ்டியிலே --சிவ
சங்கரன் மைந்தனாய் வந்துள்ள சங்கடம் தீர்ப்பார் (அழகெனும் )
குற மகள் வள்ளியும் அவர் மனைவி ---அந்த
கோதை குஞ்சரியோ குகன் துணைவி
வரமது அருள்வதில் என்றும் வள்ளல் அன்றோ --இதனை
சொல்லியே மகிழ்வதில் வரும் சுகம் பெரிதன்றோ (அழகெனும் )
ஆறிரண்டு கைகளுடன் நம் ஆறுமுகம் வருவார் --தன்னிடம்
அபயமென வந்தவர்க்கு மன ஆறுதல் தருவார்
ஏறு மயில் ஏறிவந்து இங்கு ஏழைகளைக் காப்பார் --வந்த
இன்னலைத் தீர்த்து வைத்து நல்லருள் புரிவார் (அழகெனும் )
தமி ழ் என்னு ம் தாயினை தாங்கிட வருவார் --கொடிய
தருக்கர் பலரையும் சமரினில் அழித்தார்
அமிழ்தினும் இனிய நம் அண்ணலைத் தொழுவோம் --தினம்
அவரருள் பெற்றுமே இந்த அவனியை வெல்வோம் (அழகெனும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக