கண்ணாலே என்னை அழைத்தாய் பெண்ணே --உன்
காதலில் தினமும் உருகுகிறேன் கண்ணே
மின்னாமல் முழங்காமல் வந்தாயென் முன்னே --வரும்
மோகத்தை உள்ளபடி நானும் இன்று சொன்னேன்
நீராடும் பொழுதில் நெஞ்சம் இன்னும் ஆடும் --உன்
நினைவாலே இந்த ஏழை மனம் வாடும்
போராடும் நிலையில் என்னை வைத்தாய் அன்பே -எனோ
என்னைப் புரியாமல் தவிக்க வைப்பது என்னே
காதோரம் நான் காதல் சொல்ல வேண்டும் --என்
கண்ணாட்டி சீராட்டி நான் பாராட்டத் தூண்டும்
போதாது பொழுது உன்னைப் புகழ்ந்துமே பாட --நீயும்
புன்னகைக்க இங்கு பூக்கள் கண்கள் மலரும்
நீளமான கூந்தல் நிலத்தினைக் கூட்டும் --உனது
நெஞ்சகமோ கடலின் ஆழத்தை எட்டும்
ஆழமான மேடு பள்ளம் அழகினைக் காட்டும் --என்
அன்பே உன்கண்கள் ஆசை வெறியினை ஊட்டும்
என்னோடு காதல் சொல்லிட வாயேன் --உன்
இதயத்தில் ஓரிடம் எனக்கென்றுத் தாயேன்
பொன்னோடு பொருள் சேர்ந்தது போலாகும் --நீயெனை
புரிந்து கொண்டால் எந்தன் உயிர் நீளும்
காதலில் தினமும் உருகுகிறேன் கண்ணே
மின்னாமல் முழங்காமல் வந்தாயென் முன்னே --வரும்
மோகத்தை உள்ளபடி நானும் இன்று சொன்னேன்
நீராடும் பொழுதில் நெஞ்சம் இன்னும் ஆடும் --உன்
நினைவாலே இந்த ஏழை மனம் வாடும்
போராடும் நிலையில் என்னை வைத்தாய் அன்பே -எனோ
என்னைப் புரியாமல் தவிக்க வைப்பது என்னே
காதோரம் நான் காதல் சொல்ல வேண்டும் --என்
கண்ணாட்டி சீராட்டி நான் பாராட்டத் தூண்டும்
போதாது பொழுது உன்னைப் புகழ்ந்துமே பாட --நீயும்
புன்னகைக்க இங்கு பூக்கள் கண்கள் மலரும்
நீளமான கூந்தல் நிலத்தினைக் கூட்டும் --உனது
நெஞ்சகமோ கடலின் ஆழத்தை எட்டும்
ஆழமான மேடு பள்ளம் அழகினைக் காட்டும் --என்
அன்பே உன்கண்கள் ஆசை வெறியினை ஊட்டும்
என்னோடு காதல் சொல்லிட வாயேன் --உன்
இதயத்தில் ஓரிடம் எனக்கென்றுத் தாயேன்
பொன்னோடு பொருள் சேர்ந்தது போலாகும் --நீயெனை
புரிந்து கொண்டால் எந்தன் உயிர் நீளும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக