வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

உயிரே 541

கண்ணாலே  என்னை  அழைத்தாய்   பெண்ணே --உன்
காதலில்   தினமும்  உருகுகிறேன்   கண்ணே
மின்னாமல்  முழங்காமல்   வந்தாயென்   முன்னே --வரும்
மோகத்தை  உள்ளபடி  நானும்  இன்று  சொன்னேன்

நீராடும்  பொழுதில்   நெஞ்சம்  இன்னும்  ஆடும் --உன்
நினைவாலே   இந்த  ஏழை  மனம்  வாடும்
போராடும்  நிலையில்  என்னை  வைத்தாய்  அன்பே  -எனோ
என்னைப்   புரியாமல்  தவிக்க  வைப்பது  என்னே

காதோரம்   நான்  காதல்  சொல்ல  வேண்டும் --என்
கண்ணாட்டி  சீராட்டி  நான்  பாராட்டத்  தூண்டும்
போதாது  பொழுது  உன்னைப்  புகழ்ந்துமே  பாட --நீயும்
புன்னகைக்க  இங்கு  பூக்கள்  கண்கள்  மலரும்

நீளமான  கூந்தல்  நிலத்தினைக்  கூட்டும் --உனது
நெஞ்சகமோ  கடலின்  ஆழத்தை  எட்டும்
ஆழமான  மேடு   பள்ளம்  அழகினைக்  காட்டும்  --என்
அன்பே  உன்கண்கள்   ஆசை வெறியினை  ஊட்டும்

என்னோடு  காதல்   சொல்லிட  வாயேன்  --உன்
இதயத்தில்  ஓரிடம்   எனக்கென்றுத்   தாயேன்
பொன்னோடு  பொருள்  சேர்ந்தது  போலாகும் --நீயெனை
புரிந்து  கொண்டால்  எந்தன்  உயிர்   நீளும்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக