தமிழே உனக்குத் தலை வணக்கம் --எனக்கு
தாயாய் இருப்பதும் நீயல்லவோ
அமிழ்தம் என்பது நீயாகும் --உன்னை
அழிக்க நினைத்தவர் அழிவாரே
சங்கத்தில் நீயும் வளர்ந்தவளே --அங்கே
சரித்திரம் பலவும் படைத்தவளே
தங்கத்தைப் போலவே தூயவளே ---உலகில்
தர்மத்தின் உருவில் வாழ்பவளே
எத்தனை பேர்கள் எதிர்த்தார்கள் --உனை
இல்லாது செய்திட நினைத்தார்கள்
அத்தனையும் உன்னிடம் தோற்றதுவே --எங்கள்
அம்மையே நீங்களே வென்றீர்கள்
மதுரை நகரில் சிறப்பானாய் --ஏழையர்
மனங்களில் என்றைக்கும் வாழுகிறாய்
புதினம் கோடி உன்பிறப்பு --உன்னை
புரிந்தவர் பெறுவது தனிச் சிறப்பு
தமிழால் எதுவும் முடியுமென்பேன் --அவள்
தமிழர்க்குக் கிடைத்த பெரு நிதியமென்பேன்
உயிராய் எண்ணியே வணங்கிடுவோம் --அந்த
உத்தமி புகழினைப் போற்றிடுவோம்
தாயாய் இருப்பதும் நீயல்லவோ
அமிழ்தம் என்பது நீயாகும் --உன்னை
அழிக்க நினைத்தவர் அழிவாரே
சங்கத்தில் நீயும் வளர்ந்தவளே --அங்கே
சரித்திரம் பலவும் படைத்தவளே
தங்கத்தைப் போலவே தூயவளே ---உலகில்
தர்மத்தின் உருவில் வாழ்பவளே
எத்தனை பேர்கள் எதிர்த்தார்கள் --உனை
இல்லாது செய்திட நினைத்தார்கள்
அத்தனையும் உன்னிடம் தோற்றதுவே --எங்கள்
அம்மையே நீங்களே வென்றீர்கள்
மதுரை நகரில் சிறப்பானாய் --ஏழையர்
மனங்களில் என்றைக்கும் வாழுகிறாய்
புதினம் கோடி உன்பிறப்பு --உன்னை
புரிந்தவர் பெறுவது தனிச் சிறப்பு
தமிழால் எதுவும் முடியுமென்பேன் --அவள்
தமிழர்க்குக் கிடைத்த பெரு நிதியமென்பேன்
உயிராய் எண்ணியே வணங்கிடுவோம் --அந்த
உத்தமி புகழினைப் போற்றிடுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக