சனி, 11 ஆகஸ்ட், 2018

ஏழை மனம் 559

 கானக   குயிலே    என்   கற்கண்டுப்   பெட்டகமே  --வானம்
தந்திட்ட   என்றும்   வற்றாத    பொய்கையடி
தேனைப்   பழித்தவளே  தென்  பாண்டிச்   சிலை யழகே --காண
இனிக்குமடி  உந்தன்  கட்டழகில்  இந்த  ஊரும்  சொக்குமடி

வில்லை   வளைப்பாயே  இளம்   வீரரைக்   கொல்வதற்கு  --நீ
உந்தன்  பல்லால்  சிரித்தாலே   பத்து   முத்து   உதிருமடி
இட்ட அடி  நோக  உன்னிடையை  அசைத்தாலோ --இங்கு
விட்டுப்   பிரியுமடி   மன வேதனையில்   பல  உயிர்கள்

சிரித்துச்   சிவந்தாலோ   எந்தன்    சீவன்   துடிக்குமடி  --உன்னை
பறித்துச்    சுவைக்க   மனமும்    பாகாய்   உருகுதடி
எரிக்கும்   நிலவாச்சு   உடல்   எங்கும்   தணலாச்சு  --எந்தன்
மனம்    குளிர   நீயும்    இங்கு   எழுந்து   வருவாயடி

தண்டை   யொலி  கிளப்ப   உன்  தாவணியும்   சலசலக் கும் --உன்
கெண்டை   விழிகளோ  வாலிப   கிழவர்களைத்  தாலாட்டும்
சண்ட  மாருதமாய்    நீ யும்   புதன் சந்தையிலே  வருகையிலே  --பலமாய்
சண்டைகள்   நடக்குமடி    அடி  சதிகாரி   உந்தன்   முன்னாலே

என்னை   மணப்பதற்கு  உனக்கு   இங்கே   என்ன    தடையோடி  --நான்
உன்னவன்   ஆவதற்கு    என்னிடம்  உள்ளதை   தருகின்றேன்
தென்னங்  குலை   போல    தெரு வோரம்   வருபவளே  --அடி
இன்னமும்    மனம்    இல்லையோ   ஏழையெனைக்   காப்பதற்கு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக