கானக குயிலே என் கற்கண்டுப் பெட்டகமே --வானம்
தந்திட்ட என்றும் வற்றாத பொய்கையடி
தேனைப் பழித்தவளே தென் பாண்டிச் சிலை யழகே --காண
இனிக்குமடி உந்தன் கட்டழகில் இந்த ஊரும் சொக்குமடி
வில்லை வளைப்பாயே இளம் வீரரைக் கொல்வதற்கு --நீ
உந்தன் பல்லால் சிரித்தாலே பத்து முத்து உதிருமடி
இட்ட அடி நோக உன்னிடையை அசைத்தாலோ --இங்கு
விட்டுப் பிரியுமடி மன வேதனையில் பல உயிர்கள்
சிரித்துச் சிவந்தாலோ எந்தன் சீவன் துடிக்குமடி --உன்னை
பறித்துச் சுவைக்க மனமும் பாகாய் உருகுதடி
எரிக்கும் நிலவாச்சு உடல் எங்கும் தணலாச்சு --எந்தன்
மனம் குளிர நீயும் இங்கு எழுந்து வருவாயடி
தண்டை யொலி கிளப்ப உன் தாவணியும் சலசலக் கும் --உன்
கெண்டை விழிகளோ வாலிப கிழவர்களைத் தாலாட்டும்
சண்ட மாருதமாய் நீ யும் புதன் சந்தையிலே வருகையிலே --பலமாய்
சண்டைகள் நடக்குமடி அடி சதிகாரி உந்தன் முன்னாலே
என்னை மணப்பதற்கு உனக்கு இங்கே என்ன தடையோடி --நான்
உன்னவன் ஆவதற்கு என்னிடம் உள்ளதை தருகின்றேன்
தென்னங் குலை போல தெரு வோரம் வருபவளே --அடி
இன்னமும் மனம் இல்லையோ ஏழையெனைக் காப்பதற்கு
தந்திட்ட என்றும் வற்றாத பொய்கையடி
தேனைப் பழித்தவளே தென் பாண்டிச் சிலை யழகே --காண
இனிக்குமடி உந்தன் கட்டழகில் இந்த ஊரும் சொக்குமடி
வில்லை வளைப்பாயே இளம் வீரரைக் கொல்வதற்கு --நீ
உந்தன் பல்லால் சிரித்தாலே பத்து முத்து உதிருமடி
இட்ட அடி நோக உன்னிடையை அசைத்தாலோ --இங்கு
விட்டுப் பிரியுமடி மன வேதனையில் பல உயிர்கள்
சிரித்துச் சிவந்தாலோ எந்தன் சீவன் துடிக்குமடி --உன்னை
பறித்துச் சுவைக்க மனமும் பாகாய் உருகுதடி
எரிக்கும் நிலவாச்சு உடல் எங்கும் தணலாச்சு --எந்தன்
மனம் குளிர நீயும் இங்கு எழுந்து வருவாயடி
தண்டை யொலி கிளப்ப உன் தாவணியும் சலசலக் கும் --உன்
கெண்டை விழிகளோ வாலிப கிழவர்களைத் தாலாட்டும்
சண்ட மாருதமாய் நீ யும் புதன் சந்தையிலே வருகையிலே --பலமாய்
சண்டைகள் நடக்குமடி அடி சதிகாரி உந்தன் முன்னாலே
என்னை மணப்பதற்கு உனக்கு இங்கே என்ன தடையோடி --நான்
உன்னவன் ஆவதற்கு என்னிடம் உள்ளதை தருகின்றேன்
தென்னங் குலை போல தெரு வோரம் வருபவளே --அடி
இன்னமும் மனம் இல்லையோ ஏழையெனைக் காப்பதற்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக