மாலையில் வந்தார் மண மாலையும் இட்டார் --இந்த
மங்கையின் உடலில் எங்கெங்கோ தொட்டார்
வேலை வந்ததென அன்று வெளியில் சென்றாரே --எனோ
நாளை வருவாரென நம்பிட முடியல்லியே
கத்தும் குயிலோசை எந்தன் காதினை அடைக்குதடி --வீண்
பித்தம் தலைக்கேறி மனசு பேதலிக்க வைத்ததடி
நித்தம் வருவாரென நானும் நினைத்து வாழ்ந்தேன் --என்
அத்தான் வராமல் தினம் அல்லல் படுகிறேனே
கட்டியே யணைத்த கதை கவனத்தில் வரவில்லையோ --என்னை
விட்டுப் பிரிந்து அவரும் வேதனை தரலாமோ
கொட்டிக் கொடுத்த அன்பும் கொஞ்சமும் நினைவில்லையோ --இங்கே
கொண்டவன் இல்லையெனில் குமரி நான் என்ன செய்வேன்
தொட்ட இடங்கள் எல்லாம் துடித்துக் கிளம்புதடி --இரவில்
கட்டில் கதைகளும் எனக்கு கண்ணில் தெரியுதடி
தொட்டில் போடுதற்கோ என் துரைக்கு மனமில்லையோ --நான்
விட்டத்தைப் பார்த்து நெஞ்சம் விம்மித தவிக்கிறேன்டி
காற்றினைத் தூதாக எந்தன் கணவரிடம் அனுப்பட்டுமா --என்
காதல் சுகம் தேடி யந்தக் கள்வனும் வர வேண்டும்
தூற்றிட மனம் இன்றி எனது தூதாகப் போய் வாடி ---இன்றே
துடித்துக் கிளம்பி நீயும் எந்தன் தோழனைக் கொண்டு வாடி
மங்கையின் உடலில் எங்கெங்கோ தொட்டார்
வேலை வந்ததென அன்று வெளியில் சென்றாரே --எனோ
நாளை வருவாரென நம்பிட முடியல்லியே
கத்தும் குயிலோசை எந்தன் காதினை அடைக்குதடி --வீண்
பித்தம் தலைக்கேறி மனசு பேதலிக்க வைத்ததடி
நித்தம் வருவாரென நானும் நினைத்து வாழ்ந்தேன் --என்
அத்தான் வராமல் தினம் அல்லல் படுகிறேனே
கட்டியே யணைத்த கதை கவனத்தில் வரவில்லையோ --என்னை
விட்டுப் பிரிந்து அவரும் வேதனை தரலாமோ
கொட்டிக் கொடுத்த அன்பும் கொஞ்சமும் நினைவில்லையோ --இங்கே
கொண்டவன் இல்லையெனில் குமரி நான் என்ன செய்வேன்
தொட்ட இடங்கள் எல்லாம் துடித்துக் கிளம்புதடி --இரவில்
கட்டில் கதைகளும் எனக்கு கண்ணில் தெரியுதடி
தொட்டில் போடுதற்கோ என் துரைக்கு மனமில்லையோ --நான்
விட்டத்தைப் பார்த்து நெஞ்சம் விம்மித தவிக்கிறேன்டி
காற்றினைத் தூதாக எந்தன் கணவரிடம் அனுப்பட்டுமா --என்
காதல் சுகம் தேடி யந்தக் கள்வனும் வர வேண்டும்
தூற்றிட மனம் இன்றி எனது தூதாகப் போய் வாடி ---இன்றே
துடித்துக் கிளம்பி நீயும் எந்தன் தோழனைக் கொண்டு வாடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக