திங்கள், 6 ஆகஸ்ட், 2018

கட்டில் 549

 மாலையில்  வந்தார்   மண   மாலையும்  இட்டார்  --இந்த
 மங்கையின்  உடலில்   எங்கெங்கோ  தொட்டார்
 வேலை  வந்ததென   அன்று  வெளியில்  சென்றாரே --எனோ
 நாளை  வருவாரென  நம்பிட   முடியல்லியே

 கத்தும்   குயிலோசை   எந்தன்  காதினை  அடைக்குதடி  --வீண்
 பித்தம்  தலைக்கேறி  மனசு  பேதலிக்க  வைத்ததடி
 நித்தம்  வருவாரென  நானும்  நினைத்து  வாழ்ந்தேன் --என்
 அத்தான்  வராமல்  தினம்  அல்லல்  படுகிறேனே

  கட்டியே  யணைத்த  கதை கவனத்தில்  வரவில்லையோ --என்னை
 விட்டுப்  பிரிந்து  அவரும்  வேதனை   தரலாமோ
 கொட்டிக்  கொடுத்த  அன்பும்  கொஞ்சமும்  நினைவில்லையோ  --இங்கே
 கொண்டவன்  இல்லையெனில்  குமரி  நான்  என்ன  செய்வேன்

தொட்ட  இடங்கள்  எல்லாம்   துடித்துக்   கிளம்புதடி  --இரவில்
 கட்டில்  கதைகளும்  எனக்கு  கண்ணில்  தெரியுதடி
 தொட்டில்  போடுதற்கோ  என் துரைக்கு  மனமில்லையோ  --நான்
 விட்டத்தைப்  பார்த்து  நெஞ்சம்  விம்மித  தவிக்கிறேன்டி

 காற்றினைத்  தூதாக  எந்தன்  கணவரிடம்  அனுப்பட்டுமா  --என்
 காதல்  சுகம்  தேடி  யந்தக்   கள்வனும்   வர வேண்டும்
 தூற்றிட  மனம் இன்றி   எனது  தூதாகப்  போய்  வாடி  ---இன்றே
 துடித்துக்  கிளம்பி நீயும்   எந்தன்  தோழனைக்  கொண்டு  வாடி
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக