கண்ணான கண்ணா நீ கார்மேக வண்ணன் ---உன்னை
காணாமல் நானும் இங்கே இருந்தது உண்டா
வெண்ணெய் திருடி அன்று வேடிக்கை செய்தாய் --நீ
விளையாட்டுப் பிள்ளையாய் வீதியில் அலைந்தாய்
மாடுகள் மேய்க்க வந்த மாதவன் நீயே ---கொடும்
மழையினை தடுக்க ஒரு மலையினைக் குடையாக்கினாய்
தேடிடும் நெஞ்சிற்கு நல்ல தேறுதல் தருவாய் ---என்றும்
தேன்குழல் ஊ தியே எங்களுக்கு தரிசனம் தந்தாய்
கம்சனைக் கொன்றாய் காளிங்கனையும் வென்றாய் ---இந்த
கலிகால நிகழ்வில் மாயக் கண்ணனாய் வந்தாய்
நம்பினோர் க் கருள்வதில் நாராயணனும் நீயே ---என்றும்
நானிலம் செழித்திட எங்கிலும் நல் மழை தருவாய்
கீதையை உபதேசிக்க கிருஷ்ணனாய் வந்தாய் ---உள்ள
கேடுகள் போக்கிடத் தூதுமே நீ சென்றாய்
பாதையை மாற்றிப் பஞ்ச பாண்டவரைக் காத்தாய் ---செல்வ
பரந்தாமன் உருவில் இந்தப் பாரதத்தை ஆண்டாய்
திருமகள் கொஞ்சும் எங்கள் தீன தயாளா ---உன்
திருப்பார்வை பட்டாலே தேசங்களும் செழிக்கும்
வரும் நாளில் மாந்தர் வளம் பெற வைப்பாய் ---எங்கும்
வல்லமை பெருகிட மீண்டும் வந்திடுவாய் கண்ணா
காணாமல் நானும் இங்கே இருந்தது உண்டா
வெண்ணெய் திருடி அன்று வேடிக்கை செய்தாய் --நீ
விளையாட்டுப் பிள்ளையாய் வீதியில் அலைந்தாய்
மாடுகள் மேய்க்க வந்த மாதவன் நீயே ---கொடும்
மழையினை தடுக்க ஒரு மலையினைக் குடையாக்கினாய்
தேடிடும் நெஞ்சிற்கு நல்ல தேறுதல் தருவாய் ---என்றும்
தேன்குழல் ஊ தியே எங்களுக்கு தரிசனம் தந்தாய்
கம்சனைக் கொன்றாய் காளிங்கனையும் வென்றாய் ---இந்த
கலிகால நிகழ்வில் மாயக் கண்ணனாய் வந்தாய்
நம்பினோர் க் கருள்வதில் நாராயணனும் நீயே ---என்றும்
நானிலம் செழித்திட எங்கிலும் நல் மழை தருவாய்
கீதையை உபதேசிக்க கிருஷ்ணனாய் வந்தாய் ---உள்ள
கேடுகள் போக்கிடத் தூதுமே நீ சென்றாய்
பாதையை மாற்றிப் பஞ்ச பாண்டவரைக் காத்தாய் ---செல்வ
பரந்தாமன் உருவில் இந்தப் பாரதத்தை ஆண்டாய்
திருமகள் கொஞ்சும் எங்கள் தீன தயாளா ---உன்
திருப்பார்வை பட்டாலே தேசங்களும் செழிக்கும்
வரும் நாளில் மாந்தர் வளம் பெற வைப்பாய் ---எங்கும்
வல்லமை பெருகிட மீண்டும் வந்திடுவாய் கண்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக