புதன், 22 ஆகஸ்ட், 2018

பரந்தாமன் 580

 கண்ணான    கண்ணா    நீ  கார்மேக   வண்ணன்  ---உன்னை
 காணாமல்   நானும்   இங்கே   இருந்தது   உண்டா
  வெண்ணெய்   திருடி    அன்று   வேடிக்கை   செய்தாய்  --நீ
   விளையாட்டுப்   பிள்ளையாய்   வீதியில்   அலைந்தாய்

   மாடுகள்     மேய்க்க   வந்த    மாதவன்    நீயே  ---கொடும் 
   மழையினை  தடுக்க  ஒரு மலையினைக்  குடையாக்கினாய்
   தேடிடும்   நெஞ்சிற்கு   நல்ல தேறுதல்   தருவாய்  ---என்றும்
    தேன்குழல்   ஊ தியே   எங்களுக்கு   தரிசனம்    தந்தாய்

    கம்சனைக்   கொன்றாய்   காளிங்கனையும்  வென்றாய்   ---இந்த
     கலிகால   நிகழ்வில்   மாயக்   கண்ணனாய்   வந்தாய்
     நம்பினோர் க்   கருள்வதில்     நாராயணனும்   நீயே  ---என்றும்
     நானிலம்    செழித்திட  எங்கிலும்   நல் மழை    தருவாய்

     கீதையை   உபதேசிக்க    கிருஷ்ணனாய்   வந்தாய்   ---உள்ள
     கேடுகள்   போக்கிடத்   தூதுமே    நீ  சென்றாய்
     பாதையை   மாற்றிப்   பஞ்ச   பாண்டவரைக்   காத்தாய்  ---செல்வ
     பரந்தாமன்   உருவில்   இந்தப்   பாரதத்தை   ஆண்டாய்

    திருமகள்   கொஞ்சும்    எங்கள்    தீன  தயாளா  ---உன்
    திருப்பார்வை    பட்டாலே    தேசங்களும்   செழிக்கும்
    வரும் நாளில்   மாந்தர்   வளம்  பெற   வைப்பாய்  ---எங்கும்
    வல்லமை    பெருகிட    மீண்டும்   வந்திடுவாய்    கண்ணா
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக