புதன், 1 ஆகஸ்ட், 2018

இடை வெளி 538

 வானிலாடும்  நிலவைக்  கையால்  வளைக்க முடியுமா --நம்
  வாழ்வில்  சென்ற   காலம்  இனி  வந்து  சேருமா
   கனிந்து  விட்டக்   கனியில்  நல்ல  கசப்பு  இருக்குமா --என்
   கண்ணே  உனைக்  கண்டபோது  என்னில்  காதல்  பிறந்தது

  காலம்  வந்த வேளை   நமது  கண்கள்  சேர்ந்தது --என்
  கனிமொழி   உன் அழகில்  புதிய  கவிதை  பிறந்தது
  ஆலகால   விஷமும்  கூட  இங்கு   அமுதமாகுது --எந்தன்
  ஆருயிரே  உந்தன்  இளமை   எனோ  என்னை  ஆட்டுவிக்குது

   நானும்  நீயும்  சேர்ந்து  விட்டால்   நன்மை  பிறக்குமே  --உன்
   நடையழகில்  இடைவெளியில்  ஒரு  நியாயம்  கிடைக்குமே
   தேனும்  பாலும்  சேர்ந்து  விட்டால்  இனி  தேவ  லோகமே  --நம்
    திருமணம்  நடந்து   போனால்   தினமும்  தேவி   பூசையே

   ஆனவரையில்   ஆடிப் பார்த்து  நல்  ஆனந்தம்  கொள்வோம் --பின்
   அயர்ந்து போய்   கண்கள்  மூடி  நித்திரை  செய்வோம்
    கானக்  குயிலின்  பாடல்  கேட்டுக்  காலையில்  எழுவேன் --என்
    கண்ணாட்டி  உன்னைத்  தாலாட்ட  நீயும்  கண்கள்  மலர்வாய்

    ஓடிப்போன   காலம்  சாட்சியாக  ஒரு  பிள்ளை  பிறக்கும் --அதனை
    உச்சி முகர்ந்து  கட்டி யணைத்து  உவகையில்  மிதப்போம்
    தேடி  யலைந்து   வேலை  செய்து   செல்வங்கள்  சேர்ப்போம்  --எந்தன்
    செங்கமலம்   உன்னழகு   எனது  சீவனைப்  பெருக்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக