வானிலாடும் நிலவைக் கையால் வளைக்க முடியுமா --நம்
வாழ்வில் சென்ற காலம் இனி வந்து சேருமா
கனிந்து விட்டக் கனியில் நல்ல கசப்பு இருக்குமா --என்
கண்ணே உனைக் கண்டபோது என்னில் காதல் பிறந்தது
காலம் வந்த வேளை நமது கண்கள் சேர்ந்தது --என்
கனிமொழி உன் அழகில் புதிய கவிதை பிறந்தது
ஆலகால விஷமும் கூட இங்கு அமுதமாகுது --எந்தன்
ஆருயிரே உந்தன் இளமை எனோ என்னை ஆட்டுவிக்குது
நானும் நீயும் சேர்ந்து விட்டால் நன்மை பிறக்குமே --உன்
நடையழகில் இடைவெளியில் ஒரு நியாயம் கிடைக்குமே
தேனும் பாலும் சேர்ந்து விட்டால் இனி தேவ லோகமே --நம்
திருமணம் நடந்து போனால் தினமும் தேவி பூசையே
ஆனவரையில் ஆடிப் பார்த்து நல் ஆனந்தம் கொள்வோம் --பின்
அயர்ந்து போய் கண்கள் மூடி நித்திரை செய்வோம்
கானக் குயிலின் பாடல் கேட்டுக் காலையில் எழுவேன் --என்
கண்ணாட்டி உன்னைத் தாலாட்ட நீயும் கண்கள் மலர்வாய்
ஓடிப்போன காலம் சாட்சியாக ஒரு பிள்ளை பிறக்கும் --அதனை
உச்சி முகர்ந்து கட்டி யணைத்து உவகையில் மிதப்போம்
தேடி யலைந்து வேலை செய்து செல்வங்கள் சேர்ப்போம் --எந்தன்
செங்கமலம் உன்னழகு எனது சீவனைப் பெருக்கும்
வாழ்வில் சென்ற காலம் இனி வந்து சேருமா
கனிந்து விட்டக் கனியில் நல்ல கசப்பு இருக்குமா --என்
கண்ணே உனைக் கண்டபோது என்னில் காதல் பிறந்தது
காலம் வந்த வேளை நமது கண்கள் சேர்ந்தது --என்
கனிமொழி உன் அழகில் புதிய கவிதை பிறந்தது
ஆலகால விஷமும் கூட இங்கு அமுதமாகுது --எந்தன்
ஆருயிரே உந்தன் இளமை எனோ என்னை ஆட்டுவிக்குது
நானும் நீயும் சேர்ந்து விட்டால் நன்மை பிறக்குமே --உன்
நடையழகில் இடைவெளியில் ஒரு நியாயம் கிடைக்குமே
தேனும் பாலும் சேர்ந்து விட்டால் இனி தேவ லோகமே --நம்
திருமணம் நடந்து போனால் தினமும் தேவி பூசையே
ஆனவரையில் ஆடிப் பார்த்து நல் ஆனந்தம் கொள்வோம் --பின்
அயர்ந்து போய் கண்கள் மூடி நித்திரை செய்வோம்
கானக் குயிலின் பாடல் கேட்டுக் காலையில் எழுவேன் --என்
கண்ணாட்டி உன்னைத் தாலாட்ட நீயும் கண்கள் மலர்வாய்
ஓடிப்போன காலம் சாட்சியாக ஒரு பிள்ளை பிறக்கும் --அதனை
உச்சி முகர்ந்து கட்டி யணைத்து உவகையில் மிதப்போம்
தேடி யலைந்து வேலை செய்து செல்வங்கள் சேர்ப்போம் --எந்தன்
செங்கமலம் உன்னழகு எனது சீவனைப் பெருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக