ஒரு நாள் இரவில் தனியாக --நான்
உலவிட சென்றேன் துணிவாக
திருத்தேர் போலவே மிக அழகாக --ஒரு
தேவதை வந்தாள் படு ஒயிலாக
வாழையைக் கால்களாய்க் கொண்டவளோ ---அந்த
வாளை மீன்களைக் கண்களாய் உள்ளவளோ
சோலையில் புகுந்த இளஞ் சுந்தரியோ ---நல்ல
சொக்கத் தங்கத்தில் வடித்தவளோ
என்ன சொல்லி நான் கூறிடுவேன் ---நான்
யாரிடம் அவளுக்கெனப் போரிடுவேன்
கன்னல் தமிழாயவள் வந்தால் --எனது
கற்பனை மொத்தமாய் எதிர் நின்றாள்
வில்லினை வளைத்தால் அவள் புருவம் ---எனக்கு
வேதனை தருவது எழில் உருவம்
எல்லையை மீறுது என்பருவம் ---அவளோ
எதற்கும் துணியும் இளங்கருவம்
கண்ணால் அழைத்தால் வருவாளோ ---எனக்கு
காதலையும் யள்ளியே தருவாளோ
பெண்ணாய் என்னுடன் இணைவாளோ ---என்னை
பெருமையாய் மனதினில் நினைவாளா
உலவிட சென்றேன் துணிவாக
திருத்தேர் போலவே மிக அழகாக --ஒரு
தேவதை வந்தாள் படு ஒயிலாக
வாழையைக் கால்களாய்க் கொண்டவளோ ---அந்த
வாளை மீன்களைக் கண்களாய் உள்ளவளோ
சோலையில் புகுந்த இளஞ் சுந்தரியோ ---நல்ல
சொக்கத் தங்கத்தில் வடித்தவளோ
என்ன சொல்லி நான் கூறிடுவேன் ---நான்
யாரிடம் அவளுக்கெனப் போரிடுவேன்
கன்னல் தமிழாயவள் வந்தால் --எனது
கற்பனை மொத்தமாய் எதிர் நின்றாள்
வில்லினை வளைத்தால் அவள் புருவம் ---எனக்கு
வேதனை தருவது எழில் உருவம்
எல்லையை மீறுது என்பருவம் ---அவளோ
எதற்கும் துணியும் இளங்கருவம்
கண்ணால் அழைத்தால் வருவாளோ ---எனக்கு
காதலையும் யள்ளியே தருவாளோ
பெண்ணாய் என்னுடன் இணைவாளோ ---என்னை
பெருமையாய் மனதினில் நினைவாளா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக