திங்கள், 20 ஆகஸ்ட், 2018

தேவதை 575

  ஒரு நாள்    இரவில்    தனியாக  --நான்
  உலவிட   சென்றேன்    துணிவாக
  திருத்தேர்   போலவே   மிக அழகாக  --ஒரு
  தேவதை    வந்தாள்    படு ஒயிலாக

  வாழையைக்   கால்களாய்க்   கொண்டவளோ  ---அந்த
  வாளை மீன்களைக்  கண்களாய்   உள்ளவளோ
  சோலையில்   புகுந்த    இளஞ் சுந்தரியோ   ---நல்ல
  சொக்கத்    தங்கத்தில்    வடித்தவளோ

  என்ன   சொல்லி   நான்   கூறிடுவேன்   ---நான்
   யாரிடம்    அவளுக்கெனப்   போரிடுவேன்
   கன்னல்    தமிழாயவள்    வந்தால்  --எனது
   கற்பனை    மொத்தமாய்   எதிர் நின்றாள்

   வில்லினை   வளைத்தால்    அவள் புருவம்  ---எனக்கு
   வேதனை    தருவது    எழில் உருவம்
   எல்லையை    மீறுது    என்பருவம்  ---அவளோ
   எதற்கும்    துணியும்   இளங்கருவம்

   கண்ணால்    அழைத்தால்   வருவாளோ ---எனக்கு
   காதலையும்    யள்ளியே    தருவாளோ
    பெண்ணாய்    என்னுடன்    இணைவாளோ ---என்னை
   பெருமையாய்    மனதினில்    நினைவாளா

                                                                                                                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக