புதன், 8 ஆகஸ்ட், 2018

மங்கை 552

 நேரில்    வந்தாய்   --என்
 நெஞ்சில்   நின்றாய்
  போரில்  வென்றாய்  --என்னை
 புலம்ப     விட்டாய்

 தேடி     நின்றேன்  --தினம்
 தேம்பி   அழுதேன்
 பாடித்    திரிந்தேன்  --வீணில்
 பாகாய்க்   கரைந்தேன்

  நாளும்    செல்லும் --உனது
  நினைவோ  கொல்லும்
  வாழும்    காதல்   --நமக்கு
  வாழ்த்து   சொல்லும்

 அன்பே    என்பேன்   --நீயும்
 அருகில்   வருவாய்
  கன்னம்   சிவக்கும்  --உனது
  கண்கள்   மயக்கும்

  இரவில்    எழுவேன்  --இன்னும்
   எதோ    நினைப்பேன்
   உறவை   ரசிப்பேன்  --என்றும்
   உழன்று    தவிப்பேன்

   எங்கே     போனாய் ---என்னிடம்
   எதற்கு    வந்தாய்
    மங்கை  உன்னையே  --என்
    மனதில்     நிறைப்பேன்

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக