திங்கள், 27 ஆகஸ்ட், 2018

காவல் 591

கனியில்        ஊ றும்    சுவையும்    நீயே  --என் 
கருத்தில்   மிளிரும்     தெளிவும்   நீயே 
பனியில்    மலரும்    பூவும்    நீயே   --நினது 
பாத       மலர்    பணிந்தேன்   சரணம் 

சிரித்துச்    சிவந்த     அழகு   முகமும்  --எங்கள் 
சீவன்     வாழும்    நல்    வழியைச்    சொல்லும் 
பறித்த    மலரைப்   போலப்    புதுமை  --நீ 
பக்கம்    வந்தால்    எங்கும்   செழுமை 

இரவு    பகலாய்    எண்ணித்   துதிப்பேன்  --நீ 
இருக்கும்  கோயில்   வாசல்   மிதிப்பேன் 
கறந்த     பாலைப்   போல    இனிமை  --எங்கள் 
கருணா   மூர்த்தி    உந்தன்   பெருமை 

அழைத்தால்   அங்கே    உடனே   வருவாய்   --அவர்க்கு 
அபயம்     அளித்துக்     காவல்    காப்பாய்  
பிழைகள்    பொறுக்கும்   பெம்மான்   நீயே  --உன்னை 
புரிந்து    கொண்டால்    பொழுதும்    இனிதே 

எண்ண     எண்ண     இன்பம்     தோன்றும்  --நல்ல 
ஈகைக்     குணமே    உயர்வை    அளிக்கும் 
கண்ணா   உன்னையும்   என்றும்    மறவேன்  --நீ 
காட்டும்    வழியில்    இன்றே    நடப்பேன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக