வியாழன், 16 ஆகஸ்ட், 2018

கண்மணி 568

கண்ணில்   வாழும்   கருணையே   --வீசும்
 காற்றில்   ஆடிடும்   மலர்களே
உன்னில்   வாழும்   என்னையே   நீயும்
உணர்ந்து   பார்க்க  நன்மையே

பொன்னில்   செய்த   பதுமையே   --என்றும்
பூக்களில்     மலரும்   புதுமையே
நானும்   கொண்டேன்   நேசமே  --என்னை
நம்பலாம்  இல்லை  இதில்   வேசமே

நீயும்     நானும்    வாழலாம்   --அதில்
நெஞ்சம்   நிறைந்து   போகலாம்
காயும்   நிலவில்   ஆடலாம்   --இனிய
காதல்   கீதம்     பாடலாம்

வாழ்வில்    வசந்தம்    கோடியே  --வந்து
ருசித்திடு   அன்புச்     சேடியே
 சூழும்    இன்பம்    தேடியே   --நாம்
சுகமே    பெறுவோம்    வினாடியே

நிலவும்    வானும்    மாறுமா  --உலகில்
நேர்மை   எங்கும்    வீழுமா
பழகிட    வந்திடு    கண்மணி   --இந்த
பாரினில்  எனக்கு  நீ   பொன்மணி

இன்ப     லோகம்    போகலாம்  --நாம்
எண்ணற்ற   காட்சிகள்   காணலாம்
அன்பினில்    நனைந்து   ஆடலாம்  --இனி
அம்மா       அப்பா    ஆகலாம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக