கண்ணில் வாழும் கருணையே --வீசும்
காற்றில் ஆடிடும் மலர்களே
உன்னில் வாழும் என்னையே நீயும்
உணர்ந்து பார்க்க நன்மையே
பொன்னில் செய்த பதுமையே --என்றும்
பூக்களில் மலரும் புதுமையே
நானும் கொண்டேன் நேசமே --என்னை
நம்பலாம் இல்லை இதில் வேசமே
நீயும் நானும் வாழலாம் --அதில்
நெஞ்சம் நிறைந்து போகலாம்
காயும் நிலவில் ஆடலாம் --இனிய
காதல் கீதம் பாடலாம்
வாழ்வில் வசந்தம் கோடியே --வந்து
ருசித்திடு அன்புச் சேடியே
சூழும் இன்பம் தேடியே --நாம்
சுகமே பெறுவோம் வினாடியே
நிலவும் வானும் மாறுமா --உலகில்
நேர்மை எங்கும் வீழுமா
பழகிட வந்திடு கண்மணி --இந்த
பாரினில் எனக்கு நீ பொன்மணி
இன்ப லோகம் போகலாம் --நாம்
எண்ணற்ற காட்சிகள் காணலாம்
அன்பினில் நனைந்து ஆடலாம் --இனி
அம்மா அப்பா ஆகலாம்
காற்றில் ஆடிடும் மலர்களே
உன்னில் வாழும் என்னையே நீயும்
உணர்ந்து பார்க்க நன்மையே
பொன்னில் செய்த பதுமையே --என்றும்
பூக்களில் மலரும் புதுமையே
நானும் கொண்டேன் நேசமே --என்னை
நம்பலாம் இல்லை இதில் வேசமே
நீயும் நானும் வாழலாம் --அதில்
நெஞ்சம் நிறைந்து போகலாம்
காயும் நிலவில் ஆடலாம் --இனிய
காதல் கீதம் பாடலாம்
வாழ்வில் வசந்தம் கோடியே --வந்து
ருசித்திடு அன்புச் சேடியே
சூழும் இன்பம் தேடியே --நாம்
சுகமே பெறுவோம் வினாடியே
நிலவும் வானும் மாறுமா --உலகில்
நேர்மை எங்கும் வீழுமா
பழகிட வந்திடு கண்மணி --இந்த
பாரினில் எனக்கு நீ பொன்மணி
இன்ப லோகம் போகலாம் --நாம்
எண்ணற்ற காட்சிகள் காணலாம்
அன்பினில் நனைந்து ஆடலாம் --இனி
அம்மா அப்பா ஆகலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக