இறைவா இங்கே வருவாயா ---நீ
ஏங்கும் உள்ளம் தெரிவாயா
குறைகள் தீர்த்திட மனமில்லையோ --நான்
குமுறி அழுவது புரியலையா
வீழ்ந்திடும் கண்ணீர் போதாதோ --இங்கு
விரும்பும் வாழ்வு கிடைக்காதோ
நாளும் மறவேன் உன் திருநாமம் ---உன்னை
நம்பினோர் என்றுமே பெரும் சேமம்
மங்கை வள்ளியின் மணவாளன் --நீ
மாதா பார்வதி குணசீலன்
கங்கை கொண்ட சிவனாரின் ---அருளாலே
காத்திட வந்திட்ட அருட்சீலன்
திருவாய் அமைந்தாய் செந்தூரில் ---நானும்
திருப்புகழ் படிப்பேன் தினந்தோறும்
குருவாய் நிறைந்தது சுவாமி மலையினிலே ---சிவ
குமாரா அழகா எங்கள் கதிர் வேலோனே
பழமென நிற்பது பழனியில் ---உன்னை
பணிந்தவர் பெறுவது பெரும் புகழினையே
அழகெனும் முருகன் புகழ் வாழ்க ---என்றும்
அடியவர் இல்லங்கள் நலம் சூழ்க
ஏங்கும் உள்ளம் தெரிவாயா
குறைகள் தீர்த்திட மனமில்லையோ --நான்
குமுறி அழுவது புரியலையா
வீழ்ந்திடும் கண்ணீர் போதாதோ --இங்கு
விரும்பும் வாழ்வு கிடைக்காதோ
நாளும் மறவேன் உன் திருநாமம் ---உன்னை
நம்பினோர் என்றுமே பெரும் சேமம்
மங்கை வள்ளியின் மணவாளன் --நீ
மாதா பார்வதி குணசீலன்
கங்கை கொண்ட சிவனாரின் ---அருளாலே
காத்திட வந்திட்ட அருட்சீலன்
திருவாய் அமைந்தாய் செந்தூரில் ---நானும்
திருப்புகழ் படிப்பேன் தினந்தோறும்
குருவாய் நிறைந்தது சுவாமி மலையினிலே ---சிவ
குமாரா அழகா எங்கள் கதிர் வேலோனே
பழமென நிற்பது பழனியில் ---உன்னை
பணிந்தவர் பெறுவது பெரும் புகழினையே
அழகெனும் முருகன் புகழ் வாழ்க ---என்றும்
அடியவர் இல்லங்கள் நலம் சூழ்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக