செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

சிவகுரு 578

இறைவா    இங்கே    வருவாயா   ---நீ
ஏங்கும்    உள்ளம்    தெரிவாயா
குறைகள்  தீர்த்திட   மனமில்லையோ  --நான்
குமுறி    அழுவது    புரியலையா

வீழ்ந்திடும்    கண்ணீர்   போதாதோ  --இங்கு
விரும்பும்   வாழ்வு    கிடைக்காதோ
நாளும்    மறவேன்   உன் திருநாமம்  ---உன்னை
நம்பினோர்   என்றுமே   பெரும் சேமம்

மங்கை    வள்ளியின்   மணவாளன்   --நீ
மாதா    பார்வதி    குணசீலன்
கங்கை    கொண்ட    சிவனாரின் ---அருளாலே
காத்திட    வந்திட்ட    அருட்சீலன்

திருவாய்    அமைந்தாய்    செந்தூரில்  ---நானும்
திருப்புகழ்    படிப்பேன்    தினந்தோறும்
குருவாய்     நிறைந்தது   சுவாமி மலையினிலே  ---சிவ
குமாரா    அழகா  எங்கள்    கதிர் வேலோனே

பழமென    நிற்பது    பழனியில் ---உன்னை
பணிந்தவர்   பெறுவது   பெரும் புகழினையே
அழகெனும்    முருகன்    புகழ்     வாழ்க   ---என்றும்
அடியவர்    இல்லங்கள்    நலம்   சூழ்க  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக