தனியாக நின்றேன் --செய்த
தவமாக வந்தாய்
கனியாக நினைத்தாய் --உன்னுடன்
கலந்திட வைத்தாய்
இனியுந்தன் துணையாய் --நான்
இருப்பேன் என்றாய்
எனையாளும் கண்ணா --நீயே
எழில் காதல் மன்னன்
அழகான தோற்றம் ---கொண்ட
அறிவாலே ஏற்றம்
பழமாக இனித்தேன் --=நாளும்
பசியாறிக் கொண்டாய்
பல காலம் வாழ்ந்திட ---இங்கு
பறந்தோடி நீ வா வா
கலை ஞான நிலவே --எனது
கண்ணான கண்ணே
வந்தாலே போதும் --எந்தன்
வனப்பெல்லாம் கூடும்
சிந்தையும் இனிக்கும் --அன்பு
செல்வமே வாராய்
கட்டுண்டு கிடப்போம் --புதிய
கலைகளைக் கற்போம்
விட்டு வைத்த பாடத்தை -- நாம்
விடியும் வரை படிப்போம்
தவமாக வந்தாய்
கனியாக நினைத்தாய் --உன்னுடன்
கலந்திட வைத்தாய்
இனியுந்தன் துணையாய் --நான்
இருப்பேன் என்றாய்
எனையாளும் கண்ணா --நீயே
எழில் காதல் மன்னன்
அழகான தோற்றம் ---கொண்ட
அறிவாலே ஏற்றம்
பழமாக இனித்தேன் --=நாளும்
பசியாறிக் கொண்டாய்
பல காலம் வாழ்ந்திட ---இங்கு
பறந்தோடி நீ வா வா
கலை ஞான நிலவே --எனது
கண்ணான கண்ணே
வந்தாலே போதும் --எந்தன்
வனப்பெல்லாம் கூடும்
சிந்தையும் இனிக்கும் --அன்பு
செல்வமே வாராய்
கட்டுண்டு கிடப்போம் --புதிய
கலைகளைக் கற்போம்
விட்டு வைத்த பாடத்தை -- நாம்
விடியும் வரை படிப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக