வியாழன், 9 ஆகஸ்ட், 2018

பாடம் 553

 தனியாக    நின்றேன்  --செய்த
 தவமாக    வந்தாய்
 கனியாக   நினைத்தாய்  --உன்னுடன்
 கலந்திட   வைத்தாய்

 இனியுந்தன்  துணையாய்  --நான்
 இருப்பேன்   என்றாய்
 எனையாளும்   கண்ணா   --நீயே
 எழில்  காதல்    மன்னன்

 அழகான    தோற்றம்   ---கொண்ட
  அறிவாலே    ஏற்றம்
  பழமாக   இனித்தேன்  --=நாளும்
  பசியாறிக்  கொண்டாய்

 பல காலம்   வாழ்ந்திட  ---இங்கு
  பறந்தோடி    நீ   வா    வா
 கலை  ஞான   நிலவே  --எனது
  கண்ணான   கண்ணே

  வந்தாலே    போதும்   --எந்தன்
  வனப்பெல்லாம்    கூடும்
  சிந்தையும்   இனிக்கும்  --அன்பு
  செல்வமே    வாராய்

   கட்டுண்டு    கிடப்போம்  --புதிய
    கலைகளைக்  கற்போம்
    விட்டு  வைத்த   பாடத்தை   -- நாம்
    விடியும் வரை   படிப்போம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக