வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

ஸ்ரீ குருவாயி அம்மன் 600

 கன்னித்       தெய்வம்    நீயல்லவா   --உந்தன்
 கருணை    தன்னை     நான்   சொல்லவா
 என்னில்     இருப்பவள்    தாயல்லவா   --உன்னால்
 ஏற்றம்       பெற்றிடும்     சேயல்லவா

குலமதைக்    காத்திட    வந்தவளே   --எந்தை
 குருசாமி     தன்னையு ம்    ஈன்றவளே
 பலத்தை   யளித்திட     நீயிருப்பாய்  --உனது
 பக்கத்தில்    சேவகனாய்    நானிருப்பேன்

 குருநாதன்    சரவணன்   இருவர்   பிறந்தனரே  --அவர்கள்
 பெரும் புகழ்     பெற்றிட    நீயே    வளர்க்கின்றாய்
 குருபிரசாத்      ரியா        ஐஸ்வீ  எனும்   குழந்தையரும் --உந்தன்
 அருளாலே   நலமுடன்  என்றுமே    வாழ   வைப்பாய் 


கால       காலங்கள்       உள்ளவரை     ---உனது
கருவறை     ஏழைக்கும்   திறந்திருக்கும்
வேளை     வருகையில்   நீயும்    வெளிப்படுவாய்   --எங்குமுன்
வெற்றிக்கொடி    விண்ணிலே    நிறைந்திருக்கும்

உருவாய்    உயிராய்      உளதாய்  --எங்கள்
உணர்வாய்    உயர்வாய்    உள்ளவளே
குருவாயி    என்னும்   பெயர்    படைத்தாய்   --இந்த
குவலயம்      காத்திட    மண்ணில்    வடிவெடுத்தாய்

உருகிடும்   அன்பில்    உனை     நினைக்கும்  --எமது
மருமகள்கள்      மனைவி   வாழ்வில்   நலம்   சூழ்க
பெருகிடும்   வெள்ளம்   இங்கு   உயிர்    காக்க   --உனது
பேரருள்     ஒன்று தான்    இந்த     நிலம்    காக்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக