கன்னித் தெய்வம் நீயல்லவா --உந்தன்
கருணை தன்னை நான் சொல்லவா
என்னில் இருப்பவள் தாயல்லவா --உன்னால்
ஏற்றம் பெற்றிடும் சேயல்லவா
குலமதைக் காத்திட வந்தவளே --எந்தை
குருசாமி தன்னையு ம் ஈன்றவளே
பலத்தை யளித்திட நீயிருப்பாய் --உனது
பக்கத்தில் சேவகனாய் நானிருப்பேன்
குருநாதன் சரவணன் இருவர் பிறந்தனரே --அவர்கள்
பெரும் புகழ் பெற்றிட நீயே வளர்க்கின்றாய்
குருபிரசாத் ரியா ஐஸ்வீ எனும் குழந்தையரும் --உந்தன்
அருளாலே நலமுடன் என்றுமே வாழ வைப்பாய்
கால காலங்கள் உள்ளவரை ---உனது
கருவறை ஏழைக்கும் திறந்திருக்கும்
வேளை வருகையில் நீயும் வெளிப்படுவாய் --எங்குமுன்
வெற்றிக்கொடி விண்ணிலே நிறைந்திருக்கும்
உருவாய் உயிராய் உளதாய் --எங்கள்
உணர்வாய் உயர்வாய் உள்ளவளே
குருவாயி என்னும் பெயர் படைத்தாய் --இந்த
குவலயம் காத்திட மண்ணில் வடிவெடுத்தாய்
உருகிடும் அன்பில் உனை நினைக்கும் --எமது
மருமகள்கள் மனைவி வாழ்வில் நலம் சூழ்க
பெருகிடும் வெள்ளம் இங்கு உயிர் காக்க --உனது
பேரருள் ஒன்று தான் இந்த நிலம் காக்கும்
கருணை தன்னை நான் சொல்லவா
என்னில் இருப்பவள் தாயல்லவா --உன்னால்
ஏற்றம் பெற்றிடும் சேயல்லவா
குலமதைக் காத்திட வந்தவளே --எந்தை
குருசாமி தன்னையு ம் ஈன்றவளே
பலத்தை யளித்திட நீயிருப்பாய் --உனது
பக்கத்தில் சேவகனாய் நானிருப்பேன்
குருநாதன் சரவணன் இருவர் பிறந்தனரே --அவர்கள்
பெரும் புகழ் பெற்றிட நீயே வளர்க்கின்றாய்
குருபிரசாத் ரியா ஐஸ்வீ எனும் குழந்தையரும் --உந்தன்
அருளாலே நலமுடன் என்றுமே வாழ வைப்பாய்
கால காலங்கள் உள்ளவரை ---உனது
கருவறை ஏழைக்கும் திறந்திருக்கும்
வேளை வருகையில் நீயும் வெளிப்படுவாய் --எங்குமுன்
வெற்றிக்கொடி விண்ணிலே நிறைந்திருக்கும்
உருவாய் உயிராய் உளதாய் --எங்கள்
உணர்வாய் உயர்வாய் உள்ளவளே
குருவாயி என்னும் பெயர் படைத்தாய் --இந்த
குவலயம் காத்திட மண்ணில் வடிவெடுத்தாய்
உருகிடும் அன்பில் உனை நினைக்கும் --எமது
மருமகள்கள் மனைவி வாழ்வில் நலம் சூழ்க
பெருகிடும் வெள்ளம் இங்கு உயிர் காக்க --உனது
பேரருள் ஒன்று தான் இந்த நிலம் காக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக