மனதில் அமைத்தேன் மேடை --அதில்
மகிழம் பூவின் வாடை
கலையில் தெரியும் ஜாடை --வீசும்
காற்றில் நெளியும் ஓடை
வானம் வாவென அழைக்கும் --அங்கு
வண்ண மீன்கள் சிரிக்கும்
கானம் பாடுமே குயிலும் --அதனை
கண்டு ஆடிடும் மயிலும்
தென்றல் சுகமாய் வீசும் --கிளையில்
சுந்தரக் கிளிகள் பேசும்
கன்றினைப் பசுவும் அணைக்கும் --பெண்
கணவன் சுகத்தினை நினைக்கும்
பழுத்த இலைகள் உதிரும் --எங்கும்
பாய்ந்து பரவும் கதிரும்
கொழுத்த இரையைத் தேடி --இரவில்
கொடிய விலங்குகள் அலையும்
குவளை மலர்கள் சிலிர்க்க --இங்கு
கொன்றை பூக்கள் சொரியும்
தவளைக் இனங்கள் சேர்ந்து ---இனிய
தாளக் கச்சேரி நடத்தும்
அழகைப் படைத்த இறைவன் --நமக்கு
அறிவை நிறையக் கொடுத்தார்
உலகில் வாழும் மாந்தர் ---இந்த
உண்மை அறிதல் நன்றே
மகிழம் பூவின் வாடை
கலையில் தெரியும் ஜாடை --வீசும்
காற்றில் நெளியும் ஓடை
வானம் வாவென அழைக்கும் --அங்கு
வண்ண மீன்கள் சிரிக்கும்
கானம் பாடுமே குயிலும் --அதனை
கண்டு ஆடிடும் மயிலும்
தென்றல் சுகமாய் வீசும் --கிளையில்
சுந்தரக் கிளிகள் பேசும்
கன்றினைப் பசுவும் அணைக்கும் --பெண்
கணவன் சுகத்தினை நினைக்கும்
பழுத்த இலைகள் உதிரும் --எங்கும்
பாய்ந்து பரவும் கதிரும்
கொழுத்த இரையைத் தேடி --இரவில்
கொடிய விலங்குகள் அலையும்
குவளை மலர்கள் சிலிர்க்க --இங்கு
கொன்றை பூக்கள் சொரியும்
தவளைக் இனங்கள் சேர்ந்து ---இனிய
தாளக் கச்சேரி நடத்தும்
அழகைப் படைத்த இறைவன் --நமக்கு
அறிவை நிறையக் கொடுத்தார்
உலகில் வாழும் மாந்தர் ---இந்த
உண்மை அறிதல் நன்றே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக