வியாழன், 9 ஆகஸ்ட், 2018

தென்றல் 554

மனதில்   அமைத்தேன்   மேடை  --அதில்
மகிழம்     பூவின்    வாடை
கலையில்  தெரியும்   ஜாடை   --வீசும்
காற்றில்   நெளியும்    ஓடை

வானம்    வாவென    அழைக்கும்  --அங்கு
வண்ண   மீன்கள்    சிரிக்கும்
கானம்   பாடுமே    குயிலும்  --அதனை
கண்டு   ஆடிடும்   மயிலும்

தென்றல்   சுகமாய்   வீசும்  --கிளையில்
சுந்தரக்    கிளிகள்    பேசும்
கன்றினைப்   பசுவும்    அணைக்கும்  --பெண்
கணவன்  சுகத்தினை    நினைக்கும்

பழுத்த     இலைகள்    உதிரும்   --எங்கும்
பாய்ந்து   பரவும்    கதிரும்
கொழுத்த   இரையைத்   தேடி   --இரவில்
கொடிய    விலங்குகள்    அலையும்

குவளை    மலர்கள்    சிலிர்க்க  --இங்கு
கொன்றை   பூக்கள்   சொரியும்
தவளைக்   இனங்கள்   சேர்ந்து ---இனிய
தாளக்     கச்சேரி    நடத்தும்

அழகைப்    படைத்த    இறைவன்  --நமக்கு
அறிவை   நிறையக்    கொடுத்தார்
உலகில்    வாழும்    மாந்தர் ---இந்த
உண்மை    அறிதல்   நன்றே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக