நெஞ்சில் ஆடும் நினைவில் --அந்த
நீலக் கண்ணன் வருவார்
கொஞ்சும் தமிழினில் பாடி --என்னை
கூடியே மகிழ்வார் சேடி
யமுனை யாற்றங் கரையில் --அங்கு
யாரும் இல்லாத நிலையில்
பள்ளிப் பாடம் படித்தேன் --அதையும்
பக்குவமாய் சொல்லிக் கொடுத்தார்
குழலை ஊதியே அழைப்பார் --பின்பு
குலவி யணைத்து மகிழ்வார்
முதலும் முடிவும் அவரே --நான்
மோகத்தில் மூழ்கிய இளம் தளிரே
கண்ணன் பெயரைச் சொல்ல --எனது
காதில் இனிமை நிறையும்
எண்ணம் முழுதும் நிறைந்தார் --நானும்
இளமைப் பயனை அடைந்தேன்
வாழும் காலம் முழுதும் --எந்தன்
வள்ளல் நினைவில் வாழ்வேன்
காலம் எனக்குத் துணையே --தெய்வீக
காதலனுக்கு யாரிங்கு இணையே
நீலக் கண்ணன் வருவார்
கொஞ்சும் தமிழினில் பாடி --என்னை
கூடியே மகிழ்வார் சேடி
யமுனை யாற்றங் கரையில் --அங்கு
யாரும் இல்லாத நிலையில்
பள்ளிப் பாடம் படித்தேன் --அதையும்
பக்குவமாய் சொல்லிக் கொடுத்தார்
குழலை ஊதியே அழைப்பார் --பின்பு
குலவி யணைத்து மகிழ்வார்
முதலும் முடிவும் அவரே --நான்
மோகத்தில் மூழ்கிய இளம் தளிரே
கண்ணன் பெயரைச் சொல்ல --எனது
காதில் இனிமை நிறையும்
எண்ணம் முழுதும் நிறைந்தார் --நானும்
இளமைப் பயனை அடைந்தேன்
வாழும் காலம் முழுதும் --எந்தன்
வள்ளல் நினைவில் வாழ்வேன்
காலம் எனக்குத் துணையே --தெய்வீக
காதலனுக்கு யாரிங்கு இணையே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக