திங்கள், 6 ஆகஸ்ட், 2018

கண்ணன் என் காதலன் 550

 நெஞ்சில்   ஆடும்   நினைவில்   --அந்த
  நீலக்    கண்ணன்  வருவார்
 கொஞ்சும்   தமிழினில்   பாடி   --என்னை
 கூடியே    மகிழ்வார்    சேடி

 யமுனை   யாற்றங்   கரையில்   --அங்கு
 யாரும்   இல்லாத    நிலையில்
 பள்ளிப்   பாடம்    படித்தேன்   --அதையும்
 பக்குவமாய்   சொல்லிக்   கொடுத்தார்

 குழலை    ஊதியே    அழைப்பார்   --பின்பு
 குலவி    யணைத்து   மகிழ்வார்
 முதலும்   முடிவும்   அவரே   --நான்
 மோகத்தில்   மூழ்கிய   இளம் தளிரே

 கண்ணன்   பெயரைச்   சொல்ல --எனது
 காதில்    இனிமை   நிறையும்
 எண்ணம்   முழுதும்   நிறைந்தார்   --நானும்
 இளமைப்   பயனை   அடைந்தேன்

 வாழும்   காலம்   முழுதும்  --எந்தன்
 வள்ளல்   நினைவில்   வாழ்வேன்
 காலம்   எனக்குத்    துணையே  --தெய்வீக
 காதலனுக்கு   யாரிங்கு    இணையே   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக